உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், பிப்ரவரி 01, 2010

ஓட்டலில் தீ விபத்து ரூ.50 ஆயிரம் சேதம்

சிறுபாக்கம் : 

                     ஓட்டலில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 50 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.
 
                        வேப்பூரை சேர்ந்தவர் கமல். இவர் விருத்தாசலம் சாலையில் ஓட்டல் நடத்தி வருகிறார். இவரது ஓட்டல் நேற்று முன்தினம் மதியம் திடீரென தீப்பிடித்து எரிந்தது. தகவலறிந்த வேப்பூர் தீயணைப்பு நிலைய அலுவலர் மனோகரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.  இதில் ஓட்டலில் இருந்த பாத்திரங்கள், மளிகை பொருட்கள் உட்பட 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமடைந்தன. தீ விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.

Read more »

ஆர்ப்பாட்டம்

கடலூர்:

             கடலூரில் நகராட் சிக்கு சொந்தமான இடத்தை மீட்க வலியுறுத்தி  மா.கம்யூ., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
 
              கடலூர் 6வது வார் டில் நகராட்சிக்கு சொந்தமான இடத்தை தனி நபர் ஆக்கிரமிப்பு செய்ததை கண்டித்தும், அந்த இடத்தை மீட்க வலியுறுத்தி மா.கம்யூ., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கிளை செயலாளர் சதீஷ் குமார் தலைமை தாங்கினார். மாநிலக்குழு தனசேகரன் சிறப்புரையாற்றினார்.  ஒன்றிய செயலாளர் மாதவன், நகர செயலா ளர் சுப்புராயன், ராஜேஷ் கண்ணன் பங்கேற்றனர்.

Read more »

டாஸ்மாக் கடைக்கு பூட்டு : கடலூர் ஒன்றிய மா.கம்யூ., முடிவு

கடலூர் : 

          கடலூர் ஒன்றிய மா.கம்யூ., கூட்டம் ஒன் றிய செயலாளர் மாதவன்  தலைமையில் நடந்தது.
 
               கூட்டத்திற்கு மாவட்ட  குழு உறுப்பினர்  தட்சிணாமூர்த்தி முன்னிலை  வகித்தார்.  கூட்டத்தில்  கடலூர் ஒன்றியம் ஏ.வடுகபாளையத்தில்  உள்ள டாஸ்மார்க் கடையை வேறு இடத் திற்கு மாற்ற கோரி பல போராட்டங்கள்  செய்தும்  பலன் இல்லாததை  கண் டித்து பிப்ரவரி 10ம் தேதி டாஸ்மாக்  கடைக்கு பூட்டு  போடும் போராட்டம்  நடத்த தீர்மானிக்கப்பட்டது. ஒன்றியக் குழு  உறுப்பினர்கள் குமார், ஆறுமுகம், நாராயணன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior