உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மார்ச் 04, 2010

மக்காசோளம் கொள்முதலில் முறைகேடுவியாபாரி, புரோக்கர்கள் சிறைபிடிப்பு

ராமநத்தம்:

                   விவசாயிகளிடம் மக்காசோளம் கொள்முதல் செய்வதில் முறைகேடு செய்த வியாபாரி மற்றும் புரோக்கரை கிராம மக்கள் சிறை பிடித்தனர். ராமநத்தம் அடுத்த அதர்நத்தம் கிராமத்தில் அறுவடை செய்யப்படும் மக்காச்சோளங்களை உள் ளூர் புரோக்கர்கள் மூலம் கள்ளக்குறிச்சி, ஆத்தூர் பகுதி வியாபாரிகள் கொள் முதல் செய்து வருகின் றனர். 100 கிலோ மூட்டை ஒன்று 850 ரூபாய் வரை விற்பனையாகிறது.

                            நேற்று முன்தினம் மதியம் கள்ளக்குறிச்சி வியாபாரி நல்லதம்பி, அதர்நத்தத்தை சேர்ந்த புரோக்கர் மூலம் பச் சையம்மாள் என்பவரிடம் 15 மூட்டை மக்காச்சோளம் வாங்கினார். அப்போது தராசில் மோசடி செய்து, மூட்டைக்கு 9 கிலோ கூடுதலாக மக்காச்சோளம் எடுப்பது தெரியவந்தது. ஆத்திரமடைந்த அப்பகுதியை சேர்ந்த பா.ம.க., பிரமுகர்கள் கோபி, வேல்முருகன் மற்றும் கிராம மக்கள் கள்ளக்குறிச்சி வியாபாரி நல்லதம்பி, புரோக்கர் ராஜேந்திரன், லாரி டிரைவர் ஆனந்தனை சிறைபிடித்தனர். தகவலறிந்த ராமநத்தம் சப் இன்ஸ்பெக்டர் அரியபுத்திரன் மற்றும் போலீசார் விரைந்து சென்று கிராம மக்களை சமாதானம் செய்து, சிறை பிடிக்கப்பட்ட மூவரையும் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்து விசாரித்து வருகின்றனர்.



Read more »

ஆம்புலன்சில் பிரசவம்

நெல்லிக்குப்பம்:

                 நெல்லிக்குப்பம் அருகே ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம் நடந்தது. நெல்லிக்குப்பம் அடுத்த வடக்குபாளையத்தை சேர்ந்த அருள் மனைவி ராஜேஸ்வரி. இவரை பிரசவத்துக்காக அரசின் இலவச ஆம்புலன்சில் ஏற்றி வந்தனர். கோழிப்பாக்கம் அருகே ராஜேஸ்வரிக்கு பிரசவ வலி அதிகமிருந்ததால் சாலையோரம் வாகனத்தை நிறுத்தி உள்ளேயே பைலட் ரமேஷ், மருத்துவ உதவியாளர் அமலா பிரசவம் பார்த்தனர். பெண் குழந்தை பிறந்தது.  இதுவரை ஆம்புலன்சில் 40 பெண்களுக்கு பிரசவம் நடந்துள்ளது.



Read more »

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் மாணவர்களுக்கு தனித்திறன் போட்டிகள்

புவனகிரி:

                       புவனகிரியில் பள்ளி மாணவர்களுக்கிடையே நடந்த தனித்திறன் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

                       புவனகிரி கள்ளிக்காட்டு தெரு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் தமிழ் நாடு அறிவியல் இயக்கத்தின் மூலம் பள்ளி மாணவர்களுக்கடையே மாவட்ட அளவில் தனித்திறன் போட்டிகள் நடத்தப் பட்டன. நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் சீத்தாலட்சுமி தலைமை தாங்கினார். கவுன்சிலர் புஷ்பரேகா சுதாகர் முன்னிலை வகித்தார். அறிவியல் இயக்க கிளை தலைவர் அறிவழகன் வரவேற்றார். மாவட்ட துணைச் செயலாளர் சிகாமணி துவக்கி வைத்தார். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுத்தொகை மற்றும் சான்றிதழ்களை முன்னாள் எம்.எல்.ஏ., சரவணன் வழங்கினார். உதவி தொடக்க கல்வி அலுவலர் சவரிமுத்து, கூடுதல் உதவி தொடக்ககல்வி அலுவலர் பிரான்சிஸ் ஜெயராஜ், வட்டார வள மைய மேற்பார்வையாளர் கலைச்செல்வன் பங்கேற்றனர். செயலாளர் பாலமுருகன் நன்றி கூறினார்.





Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior