உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, மார்ச் 06, 2010

இளைஞர் காங்., வேட்புமனு தாக்கல்


கடலூர் : 

                     கடலூர் சட்டசபை தொகுதி இளைஞர் காங்., நிர்வாகிகள் தேர்தலில் 500 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். கடலூர் சட்டசபை தொகுதி இளைஞர் காங்., நிர்வாகிகள் தேர்தல் வரும் 15ம் தேதி முதல் 19ம் தேதி வரை கடலூர் டவுன்ஹாலில் நடக்கிறது.  இதற்கான மனு தாக்கல் கடலூரில் மாவட்ட காங்., அலுவலகத்தில் நேற்று நடந்தது.  500 பேர் மனு தாக்கல் செய்தனர்.  மனுக்களை தொகுதி பொறுப்பாளரும் தேர்தல் அதிகாரியுமான ரவி பெற்றார். எம்.பி.,  செய்தி தொடர்பாளர் குமார் தலைமையில் மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி,  தண்டபாணி  உட்பட பலர் கலந்து கொண்டனர்.  இன்றும், நாளையும் மனுக்கள் பரிசீலிக்கப்படுகிறது.  

                           சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் சட்டசபை தொகுதிக்கான இளைஞர் காங்., தேர்தலில் போட்டியிட நேற்று மனு தாக்கல் நடந்தது. சிதம்பரம் தொகுதிக்கு 927 பேர் மனு தாக்கல் செய்தனர். அதனை தேர்தல் அதிகாரி ரமேஷ் பெற்றார்.  காட்டுமன்னார்கோவில் சட்டசபை தொகுதிக்கு 700 பேர் மனு தாக்கல் செய்தனர். அதனை தேர்தல் அதிகாரி கிரிஜா பெற்றுக்கொண்டார்.  மனுக்கள் இன்று (6ம் தேதி) பரிசீலிக்கப்படுகிறது.

Read more »

நலத்திட்ட உதவிகள் வழங்க கடலூர் நகர தி.மு.க., முடிவு

கடலூர் : 

              கடலூர் நகர தி.மு.க., சார்பில் துணை முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

                       கடலூர் நகர தி.மு.க., நிர்வாகிகள் கூட்டம் நேற்று நடந்தது.  நகர தலைவர் நாராயணன் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ., அய்யப்பன், நகர செயலாளர் தங்கராசு, முன்னாள் சேர்மன் ராஜேந் திரன்,  பழனி, நகர துணை அமைப்பாளர் வசந்தா, அண்ணாதுரை, தட்சிணாமூர்த்தி, கவுன்சிலர்கள் கோவலன், ரவிச் சந்திரன், ஆதிபெருமாள், ராமு, கோவிந்தசாமி உள் பட பலர் பங்கேற்றனர். கூட்டத்தில் விழுப்புரத்தில் முதல்வர் பங்கேற்கும் விழாவில் திரளாக பங்கேற்பது, துணை முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி நகரில் உள்ள 45 வார்டுகளிலும் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடுவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Read more »

துணை முதல்வர் ஸ்டாலினுக்கு கண்டரக்கோட்டையில் வரவேற்பு

பண்ருட்டி : 

                   துணை முதல்வர் ஸ்டாலினுக்கு கண்டரக் கோட்டையில் மாவட்ட தி.மு.க., சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. மாவட்டத்தில் இன்று நடைபெறும்  அரசு விழாக்களில் பங்கேற்க துணை முதல்வர் ஸ்டாலின் நேற்று இரவு சென்னையிலிருந்து கார் மூலம் நெய்வேலி வந்தார். அவருக்கு மாவட்ட எல்லையான கண்டரக்கோட்டையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் கலெக்டர் சீத்தாராமன், எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். பின்னர் கட்சி நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர். நிகழ்ச்சியில் அமைச்சர் பன்னீர்செல்வம், சேர்மன்கள் கடலூர் தங்கராசு, பண்ருட்டி பச்சையப்பன், முன்னாள் எம்.பி., கணேசன், மாவட்ட துணைச் செயலாளர் பழனிசாமி,  நகர செயலாளர்கள் பண்ருட்டி  ராஜேந்திரன், நெய்வேலி புகழேந்தி, கடலூர் முன்னாள் சேர்மன் ராஜேந்தின், அண்ணா கிராம ஒன் றிய செயலாளர் வெங்கட் ராமன் பங்கேற்றனர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior