உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மார்ச் 08, 2010

மதில் சுவர் இடிந்து விழுந்ததில் பள்ளி விடுதி மாணவர் பலி

நெல்லிக்குப்பம்:

                  விடுதி வார்டனுக்கு தெரியாமல் வெளியே சென்ற மாணவன், மதில் சுவர் இடிந்து விழுந்து இறந்தார். சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது மனைவி லட்சுமி. இவர் களது மகன் முரஷரி (15). குடும்ப பிரச்னை காரணமாக கணவன், மனைவி தனித்தனியாக வசித்து வருகின்றனர்.

                 முரஷரி, கடலூர் கிருஷ்ணசாமி மெட்ரிக் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். இப் பள்ளிக்குச் சொந்தமான குமராபுரத்தில் உள்ள பொறியியல் கல்லூரி வளாகத்தில் உள்ள விடுதியில் முரஷரி தங்கியிருந்தார். நேற்று முன்தினம் இரவு முரஷரி மற்றும் அவரது நண்பர்கள் பிரபாகரன், விஜயேந்திரன், சஞ்சய்வாசன், வினோபாலன் ஆகியோர் சினிமா பார்க்க விடுதி வார்டனுக்கு தெரியாமல் மதில் ஏறி குதித்து கடலூர் சென்றனர்.
                    டிக்கெட் கிடைக்காததால், ஓட்டலில் சாப்பிட்டு விட்டு திரும்பி வந்தனர். ஹாலோ பிளாக் கற்களால் கட்டப்பட்டமதில் மீது ஏறி இரண்டு மாணவர்கள் விடுதிக்குச் சென்றனர். மூன்றாவதாக முரஷரி மதிலை பிடித்து ஏற முயன்றபோது அவர் மீது சுவர் இடிந்து விழுந்தது. முரஷரி இடிபாட்டில் சிக்கி இறந்தார்.

            நேற்று காலை முரஷரி உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. புகாரின் பேரில் நெல்லிக்குப்பம் இன்ஸ் பெக்டர் (பொறுப்பு) செல்வம், சப்-இன்ஸ் பெக்டர் அன்பரசு ஆகியோர் வழக்குப்பதிந்து இறந்த முரஷரியுடன் வெளியே சென்ற நான்கு மாணவர்களிடம் விசாரித்து வருகின்றனர்.

Read more »

கர்ப்பிணி பெண் தீயில் கருகி பலி

பண்ருட்டி : 

                கர்ப்பிணி பெண் தீயில் கருகி இறந்தார். பண்ருட்டி அடுத்த மருங்கூரை சேர்ந்தவர் நாகஜோதி மனைவி சிவகங்கா(23).  இவர்களுக்கு திவாஸ்(2) என்ற ஆண் குழந்தை உள்ளது. தற் போது  நிறைமாத கர்ப்பிணியாக இருந்த சிவகங்கா தனது குழந்தை திவாசிற்கு கொடுப்பதற்காக பால் காய்ச்சினார். அப்போது அவரது சேலையில் தீ பரவியது. உடல் கருகிய சிவகங்காவை  புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் இறந்தார்.

Read more »

பிரளயகாலேஸ்வரர் கோவிலில் உண்டியல் உடைத்து திருட முயற்சி

திட்டக்குடி : 

                பெண்ணாடம் பிரளயகாலேஸ்வரர் கோவிலில் உண்டியலை உடைத்து திருட முயன்ற மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
 
               பெண்ணாடத்தில் அழகியகாதலி அம்மன் உடனுறை பிரளயகாலேஸ்வரர் கோவிலில் நேற்று முன்தினம் இரவு பூஜை முடிந்ததும், கோவில் பூட்டப்பட்டது.  இரவு காவலர் மீனாட்சி சுந்தரம் கோவிலில் படுத்திருந்தார். இந்நிலையில் நேற்று காலை அம்மன் சன்னதி கதவு திறந்து கிடந்தது. அங்கிருந்த உண்டியல் மற்றும் பாதுகாப்பு பெட்டகத்தை கம்பியால் உடைத்து சேதப்படுத்தப்பட்டிருந்தது. இதனைக் கண்டு திடுக்கிட்ட இரவு காவலர் மீனாட்சி சுந்தரம் கொடுத்த தகவலின் பேரில் கோவில் செயல் அலுவலர் ராஜராஜேஸ்வரன் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்தை பார்வையிட்டனர்.  இரவில் கோவிலில் புகுந்த மர்ம நபர்கள் உண்டியல் மற்றும் பாதுகாப்பு பெட்டகத்தை உடைத்து திருட முயன்றதும், அது முடியாமல் போனதால் மர்ம நபர்கள் தப்பிச் சென்றது தெரிய வந்தது. புகாரின் பேரில் பெண்ணாடம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதரன், சப்- இன்ஸ் பெக்டர் கோவிந்தன் மற்றும் போலீசார் சம்பவ இடத்தில் இருந்த தடயங்களை சேகரித்தனர். மேலும்,  இதுகுறித்து வழக்கு பதிந்து மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior