உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஏப்ரல் 10, 2010

டாக்டர், நர்சுக்கு கொலை மிரட்டல் ஒருவர் கைது: 2 பேருக்கு வலை


கடலூர்: 

                      கடலூர் அரசு மருத்துவமனையில் பிரவச வார்டில் டாக்டர் மற்றும் நர்சை மிரட்டியவரை போலீசார் கைது செய்தனர். கடலூரை அடுத்த விலங்கல்பட்டு  மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராஜவேல். இவரது மனைவி சுந்தரி (25). இவருக்கு முதல் பிரசவத்தின் போது அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்தது. நேற்று முன்தினம் சுந்தரிக்கு இரண்டாவது பிரசவமும் அறுவை சிகிச்சை மூலம் நடந்தது. இதனைத் தொடர்ந்து சுந்தரி மற்றும் அவரது கணவர் ராஜவேல் ஆகியோரின் ஒப்புதலுடன். டாக்டர் சுந்தரிக்கு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்தார்.
 
                     இந்நிலையில் நேற்று இரவு ராஜவேல், தனது தம்பி சந்திரசேகரன் (28) மற்றும் அதே ஊரைச் சேர்ந்த மற்றொரு நபர் உள்ளிட்ட 3 பேருடன், பணியில் இருந்த டாக்டர் செந்தமிழ்ச்செல்வி, நர்ஸ் முத்துமாரி ஆகியோரிடம்  'என்னை கேட்காமல் எப்படி என் மனைவிக்கு குடும்பக் கட்டுபாடு அறுவை சிகிச்சை செய்யலாம்' என கேட்டு ஆபாசமாக திட்டி மிரட்டினர். இதை தொடர்ந்து நேற்று செவிலியர் சங் கத்தை சேர்ந்த செவிலியர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் இணை இயக்குநர் டாக்டர் ஜெயவீரக்குமாரிடம், பாதுகாப்பு வேண் டும் என புகார் கூறினர். இணை இயக்குநர் போலீசில் புகார் செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். இந்த சம்பவத்தால் நேற்று காலை 45 நிமிடம் பணிகள் பாதிக்கப் பட்டது. இது குறித்து இணை இயக்குநர் ஜெயவீரக்குமார் கொடுத்த புகாரின் பேரில் கடலூர் புதுநகர் சப் இன்ஸ்பெக்டர் துர்கா மற்றும் போலீசார் வழக்குப் பதிந்து சந்திர சேகரை (28) கைது செய்து ராஜவேல் உள்ளிட்ட 2 பேரை தேடிவருகின்றனர்.

downlaod this page as pdf

Read more »

விடுதலை சிறுத்தைகள் கட்சி கூட்டத்தில் மோதல் மாவட்ட செயலாளர் மீது வழக்கு


குறிஞ்சிப்பாடி: 

                  வடலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி கூட்டத்தில் தகராறு செய்த மாவட்ட செயலாளர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். வடலூர் பரமேஸ்வரி மண்டபத்தில் விடுதலை சிறுத்தைகளின் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட செயலாளர் திருமாறன் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் திருமாறன் பேச்சிற்கு, வடலூர்  நகர பொருளாளர் நிமிலிஸ் ராஜ்குமார் (34) எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் கூட்டத்தில் தகராறு ஏற்பட்டு இருதரப்பினரும் மோதிக்கொண்டனர். இதில் நிமிலிஸ்ராஜ்குமார், சிவக்குமார் இருவர் காயமடைந்தனர். இதுகுறித்து, அவர் அளித்த புகாரின் பேரில் மாவட்ட செயலாளர் திருமாறன், துணை செயலாளர் திருமேணி ஆகியோர் மீது வடலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனர்.

downlaod this page as pdf

Read more »

காலாவதி மருந்துகள் எரிப்பு சிதம்பரம் அருகே பரபரப்பு

 கிள்ளை: 

                           சிதம்பரம் அடுத்த நக்கரவந்தன்குடி சாலையோரத்தில் காலாவதியான மருந்துகள் எரிக்கப்பட்டு கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழகத்தில் போலி மருந்து பிரச்னை எழுந்துள்ள நிலையில் தனியார் மருத்துவமனை, மருந்து கடைகளில்  சுகாதாரத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று அதிகாலை சிதம்பரம் - கிள்ளை சாலையில் நக்கரவந்தன்குடி வளைவில் உள்ள கருவைகாட்டுப் பகுதியில் சாலையோரத்தில் காலாவதியான மருந்துகள் எரிக்கப்பட்டும், அருகே உள்ள முட்புதரில் மருந்துகள் கொட்டியும் கிடந்தது.  காலாவதியான மருந்துகளில்  டானிக் மற்று 'சிரப்' உள்ளிட்டவைகளில் பழைய லேபிள்களை நீக்கி 2010 மற்றும் 2011ம் ஆண்டு வரை செல்லுபடிக்கான போலி லேபிள்கள் ஒட்டப்பட்டிருந்தது.

downlaod this page as pdf

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior