உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஏப்ரல் 26, 2010

வறுமை ஒழிப்பு சங்க அலுவலகத்தில் திருட்டு

 கடலூர் : 

               வறுமை ஒழிப்பு சங்க அலுவலக பூட்டை உடைத்து பணத்தை திருடிச் சென்ற ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
 
                 விருத்தாசலம் அடுத்த பேரளையூர் கிராமத்தில் வறுமை ஒழிப்பு சங்கம் இயங்கி வருகிறது. சங்க செயலாளரான வளர்மதி (30) கடந்த 30ம் தேதி இரவு அலுவலகத்தை பூட்டிக் கொண்டு வீட் டிற்கு சென்றார். மறுநாள் காலை வந்து பார்த்தபோது அலுவலக பூட்டு உடைந்திருந்தது. அங்கு நிறுத்தியிருந்த சைக்கிள் மற்றும் பீரோவில் வைத் திருந்த 8 ஆயிரத்து 250 பணம் திருடு போயிருந்தது.  கருவேப்பிலங்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

வாகனம் மோதி இருவர் சாவு


பரங்கிப்பேட்டை : 

               அடையாளம் தெரியாத வாகனம் இருவர் இறந்தனர். பரங்கிப்பேட்டை அடுத்த வேளங்கிப்பட்டைச் சேர்ந்தவர் செல்வராஜ் (48). இவரும் கொத்தட் டையைச் சேர்ந்த சதாசிவமும் (39). நேற்று முன்தினம் பைக்கில் சொந்த வேலையாக கொத்தட்டையில் இருந்து பு.முட்லூருக்கு சென்றனர். சம்மந்தம் அருகே வரும் போது பின்னால் அடையாளம் தெரியாத வாகனம் பைக் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் பைக்கில் பின்னால் உட்கார்ந்து சென்ற சதாசிவம் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார்.
 
பண்ருட்டி: 

                       தெற்கு சாத்திப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் கந்தன் (82). இவர் நேற்று காலை சென்னை - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலை பனிக்கன்குப்பம் முந்திரி கம்பெனி அருகில் சாத்திப்பட்டு நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது  பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் கந்தன் சம்பவ இடத்தில் இறந்தார். இதுகுறித்து பரங்கிப்பேட்டை மற்றும் காடாம் புலியூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

கவரிங் நகை திருட்டு: 3 பெண்கள் கைது

 புவனகிரி : 

                   புவனகிரி அருகே கவரிங் கடையில் 8,000 ரூபாய் மதிப்புள்ள கவரிங் நகை திருடிய மூன்று பெண்களை போலீசார் கைது செய்தனர்.
 
                    புவனகிரி கடைவீதியில் அண்ணாமலையார் கோல்டு கவரிங் மற்றும் கட்பீஸ் சென்டர் உள்ளது.  நேற்று முன்தினம் மாலை ஜெயங்கொண்டம் அடுத்த தண்டலை கிராமத்தைச் சேர்ந்த அருமைராஜ் மனைவி கற்பகம் (35),செல்வம் மனைவி லலிதா (40) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த அன்பழகி (40) ஆகியோர் கோல்டு கவரிங் கடைக்குச் சென்று பொருட்கள் வாங்குவது போல் நடித்து அங்கிருந்த 8,000 ரூபாய் மதிப்புள்ள 11 கவரிங் செயின்கள், 13 ஜோடி வளையல்கள், 4 ஜாக்கெட் பீஸ் துணி ரோல் மற்றும் 3 பூனம் புடவைகளை திருடினர். கடை உரிமையாளர் கணேசன் மூவரையும் கையும் களவுமாக பிடித்து போலீசில் ஒப்படைத்தார். மேலும் இதுகுறித்து புவனகிரி போலீசார் வழக்கு பதிந்து மூன்று பேரையும் கைது செய்தனர்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior