உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜூன் 22, 2010

பேட்டி கொடுக்க மட்டுமே கருணாநிதி தமிழை பயன்படுத்துகிறார் முன்னாள் அமைச்சர் வளர்மதி சாடல்

கடலூர் : 

                பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுப்பதற்கும், அழகாக பேசுவதற்கும் மட்டும் தான் கருணாநிதி தமிழை பயன்படுத்துகிறார் என முன்னாள் அமைச்சர் வளர்மதி பேசினார். ஐகோர்ட்டில் தமிழில் வாதாட வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்றத் தவறிய தி.மு.க., அரசை கண்டித்து அ.தி.மு.க., சார்பில் கடலூரில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் சம்பத், ம.தி.மு.க., மாவட்ட செயலாளர் பத்மநாபன், இந்திய கம்யூ., சேகர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் குமரன், முன்னாள் மாவட்ட செயலாளர் சொரத்தூர் ராஜேந்திரன், வக்கீல் பிரிவு செயலாளர் ரவீந்திரன், பொருளாளர் சரவணன், மாணவரணி செயலாளர் பாலகிருஷ்ணகுமார், ஜெயபாலன், மாசிலாமணி, தொழிற்சங்க செயலாளர் பாலகிருஷ்ணன், விவசாய அணி காசிநாதன், ஒன்றிய செயலாளர் கள் பழனிசாமி, முத்துக்குமாரசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.

மாநில அமைப்புச் செயலாளர் வளர்மதி தலைமை தாங்கி பேசியதாவது:

                   ஐகோர்ட்டில் தமிழில் வாதாட வேண்டும் என்பது முக்கியமான பிரச்னை. கிராமத்தில் இருக்கும் ஒருவர் வழக்கு விசாரணைக்கு வரும் போது, வக்கீலும், நீதிபதியும் ஆங்கிலத்தில் பேசுகின்றனர். தீர்ப்பும் ஆங்கிலத்தில் சொல்லப்படுகிறது. இது பாமர மக்களுக்கு தெரியாது.

                என்ன சொன்னாலும் ஜனாதிபதி கேட்பார் என தம்பட்டம் அடித்துக் கொள்கிறார் கருணாநிதி. ஆனால், அவரிடம் தமிழில் வாதாட ஒப்புதல் வாங்க முடியவில்லை. பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுப்பதற்கும், அழகாக பேசுவதற்கும் மட்டும் தான் கருணாநிதி தமிழை பயன்படுத்துகிறார். மகன், மகளை டில்லிக்கு அழைத்துச் சென்று தலைவர்களுடன் பேசுவதற்கும், ஸ்பெக்ட்ரம் ஊழலில் சிக்கிய ராஜாவை காப்பாற்ற டில்லி சென்று பேச நேரம் உள்ளது. ஆனால் தமிழில் வாதாட ஒப்புதல் பெற டில்லிக்கு செல்ல நேரமில்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கோர்ட்டுகளில் தமிழில் வாதாட உரிமைகளை பெற்று தருவேன் என கூறியுள்ள ஜெயலலிதாவிற்கு நீங்களும் ஆதரவு தாருங்கள். இவ்வாறு வளர்மதி பேசினார்.



Read more »

சி.என்.பாளையம் அரசு கால்நடை மருத்துவமனையில் மாதிரி தீவன புல் வளர்ப்பு

நடுவீரப்பட்டு : 

                    பண்ருட்டி அடுத்த சி.என்.பாளையம் அரசு கால்நடை மருத்துவமனையில் விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்பவர்கள் பயன்பெறும் வகையில் மாதிரி தீவன புல் வளர்க்கப்படுகிறது.இது குறித்து கால்நடை மருத்துவர் கமலக்கண்ணன் கூறுகையில், "தற்போது கால்நடைகளுக்கு புல் அதிகளவு கிடைக்காமல் கால் நடை வளர்ப்போர் அவதிப்படுகின்றனர். அப்படியே கிடைத்தாலும் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலை உள்ளது. இதை கருத்தில் கொண்டு விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்பவர்கள் எளிதில் வளர்க்க கூடிய குறைந்த நாட்களில் வளரக்கூடிய ரகங்களான கோ 3, கினியா ஆகிய ரக புல்கள் கால்நடை மருத்துவமனை வளாகத்தில் மாதிரிக்காக வளர்க்கப்படுகிறது. இதை அனைத்து விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்பவர்கள் வளர்த்து பயன் பெறலாம்' என கூறினார்.

 

Read more »

மரக்கன்றுகள் நடும் விழா

திட்டக்குடி : 

            திட்டக்குடி நகர இளைஞர் காங்., சார்பில் ராகுல் பிறந்த நாளில் மரக் கன்றுகள் நடும் விழா நடந்தது.

            நகர இளைஞர் காங்., தலைவர் ராஜ்குமார் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர்கள் ஷேக்யூசூப் அலி, கர்ணன், முத்து, வார்டு தலைவர் தர்மா சின்னதுரை, ஞானசேகரன் முன்னிலை வகித் தனர். நகர துணைத் தலைவர் பாலமுருகன் வரவேற்றார். மாநில சேவாதள அமைப்பாளர் அன்பரசு, மனித உரி மைத் துறை நகர தலைவர் வேல்மணி, மாவட்ட அமைப்பாளர் சங்கர்லால், வக்கீல் பிரிவு நெடுஞ்செழியன் வாழ்த்திப் பேசினர்.

              இதையொட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அரிய வகையைச் சேர்ந்த 40 மரக் கன்றுகள் நடப்பட்டது. தொடர்ந்து கோழியூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 300 மாணவர்களுக்கு நோட்டு, பேனா, சிலேட்டுகளை தொகுதி துணைத் தலைவர் தரணிதரன் வழங்கினார்.விழாவில் தலைமை ஆசிரியர்கள் ராஜன், முல் லைநாதன், என்.சி.சி., சண்முகம், ஆசிரியர்கள் மதிவாணன், ராமலிங்கம், வேளாண் ஆசிரியர் வசந்தா, போத்தீஸ் ரமேஷ், அருள் முருகன், வளர்மதி, சுரேஷ், ராஜமாணிக்கம், மலர்க்கொடி, ரகு, மணி, தீபன் ராஜ்குமார், விஜயகுமார் உட்பட பலர் பங் கேற்றனர். முன்னாள் வட்டாரத் தலைவர் குணசேரகன் நன்றி கூறினார்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior