உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜூலை 10, 2010

கடலூர் முதுநகர் அருகே ஆசிட் டேங்கரை சுத்தம் செய்ய முயன்ற டிரைவர், கிளீனரை விஷவாயு தாக்கியது

கடலூர் : 

            ஆசிட் டேங்கர் லாரியை சுத்தம் செய்ய முயன்ற கிளீனர் மற்றும் டிரைவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

             திருநெல்வேலி மாவட்டம் உக்கிரக்கோட்டையைச் சேர்ந்தவர் தங்கபாண்டியன். இவரது மகன் மகேந்திரன் (23). டேங்கர் லாரி டிரைவர். இவருடன் இவரது சகோதரர் மணிகண்டன் (24) கிளீனராக வேலை செய்து வருகிறார். இருவரும் நேற்று மாலை கடலூர் சிப்காட்டில் உள்ள கம்பெனியில் பாஸ்பாரிக் ஆசிட் ஏற்ற டேங்கர் லாரியை ஓட்டி வந்தனர். அதற்கு முன்பாக கடலூர் பச்சையாங்குப்பத்தில் டேங்கரை சுத்தம் செய்வதற்காக கிளீனர் மணிகண்டன் டேங்கரை திறந்த போது விஷவாயு தாக்கி மயங்கி டேங்கரில் விழுந்தார். அவரை காப்பாற்ற முயன்ற மகேந்திரனும் விஷவாயு தாக்கி விழுந்தார். இதனைக் கண்டு திடுக்கிட்ட அப்பகுதி மக்கள் டேங்கரின் அனைத்து கதவுகளையும் திறந்து தண்ணீரை பாய்ச்சி விஷவாயுவின் வீரியத்தை குறைத்து இருவரையும் மீட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கடலூர் முதுநகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Read more »

கம்மாபுரம் அடுத்த பெருவரப்பூரில் ஆக்கிரமிப்பு அகற்றம்

விருத்தாசலம்: 

             கம்மாபுரம் அடுத்த பெருவரப்பூர் கிராமத்தில் குளம் ஆக்கிரமிப்பை அதிகாரிகள் அகற்றினர்.

          விருத்தாசலம் அடுத்த கம்மாபுரம் அடுத்த பெருவரப்பூரில் இருந்த இரண்டரை ஏக்கர் பரப்பளவு குளத்தின் ஒரு பகுதியை தனி நபர் ஆக்கிரமிப்பு செய்து கரும்பு மற்றும் உளுந்து பயிரிட்டு வந்தார். அதேப்போல் 2 ஏக்கர் 36 சென்ட் பரப்பளவு கொண்ட மற்றொரு குளத்தையும் தனி நபர் ஆக்கிரமித்து நெல் பயிரிட்டும், சுடுகாட்டு இடத்தை ஒருவரும் ஆக்கிரமிப்பு செய்திருந்தனர். இதுகுறித்து ஊராட்சி தலைவர் கேசவபெருமாள் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கும்படி வருவாய்த் துறையினரிடம் கோரிக்கை வைத்தார்.

               இதனையடுத்து தாசில்தார் ஜெயராமன் தலைமையில் துணை தாசில்தார் ராஜா, ஆர்.ஐ., செல்வியம்மாள், பி.டி.ஓ., புஷ்பராஜ், வி.ஏ.ஓ., மதியழகன், ஜெயசந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் தலைமையில் நேற்று பொக்லைன் இயந்திரம் கொண்டு ஆக்கிரமிப்புகளை அகற்றினர். ஆக்கிரமிப்பு அகற்றும் இடத்தில் பிரச்னைகள் ஏற்படாமல் இருக்க இன்ஸ்பெக்டர்கள் ஸ்ரீதரன், திருமால் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Read more »

கடலூர் பள்ளி வளாகத்தில் பிடிபட்ட "புளியம்பூ' நாகப்பாம்பு

கடலூர்:

                தனியார் பள்ளியில் புகுந்த ஐந்தரை அடி நீளமுள்ள நாகப்பாம்பை சமூக ஆர்வலர் உதவியுடன் வனத்துறையினர் உயிருடன் பிடித்தனர். கடலூர் கம்மியம்பேட்டையில் உள்ள செயின்ட் ஜோசப் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நேற்று மாலை 4 மணி அளவில் மாணவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அருகில் உள்ள கட்டடத்தில் அமைத்திருந்த மழைநீர் சேகரிப்பு குழாயில் உடைந்த பகுதியில் பாம்பு ஒன்று புகுந்தது. அதைக் கண்டு திடுக்கிட்ட மாணவர்கள் கூச்சலிட்டனர்.

                தகவலறிந்த மாவட்ட வன அலுவலர் துரைசாமி உத்தரவின் பேரில், வன சரகர் சீனிவாசன், வனவர் மணி மற்றும் பாம்பு பிடிப்பதில் பயிற்சி பெற்ற வனவிலங்கு ஆர்வலர் பூனம்சந்த் ஆகியோர் விரைந்து சென்று குழாயில் புகுந்த பாம்பை பிடிக்க தீவிர முயற்சி மேற்கொண்டனர்.ஒன்றரை மணி நேர முயற்சிக்கு பின், குழாயில் புகையை செலுத்தியதும் ஐந்தரை அடி நீளமுள்ள "புளியம்பூ நாகம்' வகையைச் சேர்ந்த நாகப்பாம்பு மற்றும் ஒரு அடி நீளமுள்ள கட்டுவிரியன் குட்டி பாம்பு ஒன்றும் வெளியே வந்தன. அதை வனவிலங்கு ஆர்வலர் பூனம்சந்த் லாவகமாக பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தார்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior