உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜூலை 12, 2010

விருத்தாசலத்தில் கிராமிய நையாண்டி இசைக்குழு சங்க பொதுக்குழு கூட்டம்


விருத்தாசலம் : 

             விருத்தாசலத்தில் கிராமிய நையாண்டி இசைக் குழு சங்க பொதுக்குழு கூட்டம் நடந்தது. சங்க சிறப்புத் தலைவர் சந்திரசேகர் தலைமை தாங்கினார். சங்கத் தலைவர் வீராசாமி, செயலாளர் செல்வராசு, பொருளாளர் ரவி, துணை செயலாளர் திருஞானம் முன்னிலை வகித்தனர். துணை பொருளாளர் இளவரசன் வரவேற்றார். முன்னதாக பாலக்கரையில் தொடங்கி நையாண்டி இசைக் குழுவினரின் ஊர்வலம் நடந்தது. மண்டல கலை பண்பாட்டு மைய உதவி இயக்குனர் முத்து கூட்டம் குறித்து பேசினார். இசைப் பள்ளி தலைமை ஆசிரியர் வெங்கடேசன், துணைத் தலைவர் ராஜேந்திரன், அமைப்பாளர் அப்பாதுரை, செயற்குழு உறுப்பினர் ரங்கசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.

Read more »

திட்டக்குடி அருகே நெடுஞ்சாலையோரம் இயங்கும் பள்ளி முன் வேகத்தடை அமைக்க கோரிக்கை

திட்டக்குடி : 

              திட்டக்குடி அருகே நெடுஞ்சாலையோரம் இயங்கி வரும் நடுநிலைப் பள்ளிக்கு முன் வேகத் தடை இல்லாததால் குழந்தைகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.

                விருத்தாசலம் - ராமநத்தம் நெடுஞ்சாலையில் திட்டக்குடி அடுத்த இடைச்செருவாய் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு இடைச்செருவாய், ஆக்கனூர், பாளையம் உள்ளிட்ட கிராமங்களிலிருந்து 150க்கும் மேற் பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். மாணவர்கள் மதிய உணவு மற்றும் பள்ளி இடைவேளைகளில் வெளியில் சென்று வருகின்றனர். இந்நிலையில் நெடுஞ்சாலையோரம் அமைந்துள்ள பள்ளிக்கு முன்பாக வேகத்தடை இல்லை. இது குறித்து கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் தினமலரில் செய்தி வெளியானது. 

                 அப்போதைய ஆர்.டி.ஓ., பாலசுப்ரமணியம் உத்தரவின் பேரில், பள்ளி முன் நெடுஞ்சாலையில் இரும்பு போல்டு மூலம் பிணைக்கப்பட்ட ரப்பரால் ஆன வேகத்தடை அமைக்கப்பட்டது. தற்போது வாகனங்கள் அதிகரிப்பாலும், கனரக வாகனங்களால் ரப்பர் வேகத்தடை பெயர்ந்ததால் வாகனங்கள் அதிவேகமாக செல்கின்றன. இதனால் பள்ளியை விட்டு வெளியேறும் மாணவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. இது குறித்து பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊராட்சி சார்பில் பலமுறை வலியுறுத்தியும் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் அலட்சியம் செய்து வருகின்றனர். விரைவில் வேகத்தடை அமைக்க வேண்டும். இல்லையெனில் பள்ளிக் குழந்தைகள் விபத்தில் சிக்கி உயிரிழக்கும் அபாயம் ஏற்படும்.

Read more »

கடலூர் அரசு மருத்துவமனையில் பாலியல் தொல்லை: இருவர் கைது

கடலூர் : 

                கடலூர் அரசு மருத்துவமனையில் இரவு நேரத்தில் நோயாளிகளுடன் வரும் பெண்களிடம் பாலியல் தொல்லை கொடுத்து வந்த இருவரை போலீசார் கைது செய்தனர். 

                   கடலூர் அரசு மருத்துவமனையில் இரவு நேரங்களில் மருத்துவமனையில் தங்கியுள்ள நோயாளிகளுடன் வந்து தங்கும் பெண்களிடம் சில விஷமிகள் பாலியல் தொல்லை மற்றும் திருட்டு சம்பவங்களில் ஈடுபடுவதாகவும் புகார் எழுந்தது.இந்நிலையில் நேற்று முன்தினம் வண்ணாரப்பாளையத்தைச் சேர்ந்த பாலமுரளி தனது தம்பியை கடலூர் அரசு பொதுமருத்துவமனையில் சேர்த்துவிட்டு அவரும், அவரது தாய் வாசுகியும் தங்கியிருந்தனர்.தனியாக இருந்த வாசுகியிடம் கடலூர் வில்வநகர் பகவதியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த பன்னீர்செல்வம் மகன் குணாளன் (29), ஜெயராமன் மகன் சுரேஷ் (27) ஆகியோர் வாசுகியிடம் அறுவருக்கத்தக்க வகையில் பேசி தகாத உறவுக்கு அழைத்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த வாசுகி கூச்சலிடவே அவரது மகன் பாலமுரளி தட்டிக்கேட்டார். ஆத்திரமடைந்த குணாளன், சுரேஷ் இருவரும் பேனா கத்தியைக் காட்டி கொலை செய்து விடுவதாக மிரட் டினர்.இது குறித்து பாலமுரளி கொடுத்த புகாரின் பேரில் கடலூர் புதுநகர் இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் மூர்த்தி ஆகியோர் வழக்குப் பதிந்து குணாளன், சுரேஷ் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior