உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜூலை 12, 2010

கடலூர் மாவட்டத்தில் வாக்காளர் சேர்ப்பு சிறப்பு முகாம்களில் படிவம் பற்றாக்குறை மக்கள் அவதி

கடலூர்: 

                கடலூர் மாவட்டத்தில் கடந்த முதல் தேதி வெளியிடப்பட்ட சுருக்கு முறை திருத்த புகைப்பட வாக்காளர் பட்டியல் குறித்து கடந்த இரண்டு நாட்களாக நடந்த சிறப்பு முகாம்களில் வாக்களர் சேர்க்கை, திருத்தம், மற் றும் மாற்றத்திற்கான விண்ணப்பங்கள் கிடைக் காமல் வாக்காளர்கள் அவதியடைந்தனர்.

             கடலூர் மாவட்டத்தில் 2010ம் ஆண்டிற்கான சுருக்கு முறை திருத்த புகைப்பட வாக்காளர் பட்டியலை கடந்த 1ம் தேதி கலெக்டர் சீத்தாராமன் வெளியிட்டார். கடலூர், பண்ருட்டி, நெய்வேலி, குறிஞ்சிப்பாடி, சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், புவனகிரி, விருத்தாசலம், திட்டக்குடி ஆகிய 9 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதற்கு முன் வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில் விடுபட்ட தகுதி வாய்ந்த வாக்காளர்களை சேர்க்க படிவம் 6 மூலம் விண்ணப்பம் பெறப்பட்டு, புதிய சேர்க்கைக் கான வாக்காளர்கள் பெயர்களுடன் சுருக்கு முறை திருத்த புகைப்பட வாக் காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. 

           இதில் ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேர் சேர்க்கைக் கான படிவம் 6ஐ பூர்த்தி செய்து கொடுத்தனர். இதில் மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு 54 ஆயிரத்து 378 தகுதியுள்ளவர்களாக கண்டறியப்பட்டு சேர்க்கப்பட்டனர். மீதமுள்ளவை நீக்கம் செய்யப்பட்டது.பின்னர் மாவட்டத்தில் 7 லட்சத்து 68 ஆயிரத்து 174 ஆண்களும், 7 லட்சத்து 40 ஆயிரத்து 549 பெண் வாக் காளர்களுடன் மொத்தம் 15 லட்சத்து 8 ஆயிரத்து 723 பேர் தகுதியுடையவர்களாக வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டனர். இதனையடுத்து வாக்காளர் பட்டியல் அந்தந்த பகுதியில் உள்ள வாக்குச்சாவடிகள், தபால் அலுவலகம், குடியிருப்பு நலச் சங்கங்களில் அனைத்து வேலை நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பொதுமக்களின் பார் வைக்கு வைக்கப்பட்டது. மேலும் இதில் விடுபட்டவர்கள் பாஸ்போர்ட் சைஸ் போட்டோவுடன் படிவம் 6ஐ பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. இதற் காக நேற்று முன்தினம் 10 மற்றும் நேற்று 11ம் தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்ததைத் தொடர்ந்து இரண்டு நாள் சிறப்பு முகாம் நடத்தப் பட்டது. இதில் விடுபட்ட வாக்காளர்கள் ஆர்வமுடன் புகைப்படத்துடன் தங்களது பெயர்களை சேர்க்க குவித்தனர்.

                  மாவட்டத்தில் பல இடங்களில் முகாம் பிரச்னையின்றி சேர்ப்பு, திருத்த விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில் கடலூர் தொகுதியில் செயின்ட் ஜோசப் மேல்நிலைப் பள்ளி, கடலூர் முதுநகர், மஞ்சக்குப்பம் பகுதியில் படிவம் 6 , திருத்தத்திற்கான படிவம் 8, மாற்றத்திற்கான படிவம் 8-ஏ உள்ளிட்டவைகள் போதிய அளவிற்கு இல்லாததால் பிரச்னை ஏற்பட்டது. மேலும், பலர் திரும்பிச் சென்றனர். நெல்லிக்குப்பம் பகுதியில் படிவம் பற்றாக்குறை உள்ள நிலையில் சில ஓட்டுச் சாவடிகளில் அலுவலர்களே இல்லாமல் இருந்தனர். இதனால் பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருந்து ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.ஒவ்வொரு மையத்திலும் 20க்கும் குறைவான படிவங்கள் வழங்கப்பட்டிருந்ததாலும், எதிர்பார்த்ததற்கும் மேலாக பொதுமக்கள் சேர்க்கை, திருத்தம் மற்றும் மாற்றத்திற்கான படிவங்களை கேட்டதால் பற்றாக்குறை ஏற்பட்டது. அரசு சார்பில் சிறப்பு முகாம்கள் வைத்தும் போதுமான அளவிற்கு படிவங்கள் வழங்காததால் தகுதியுள்ள வாக்காளர் பலரின் பெயர்கள் சேர்க்க முடியாமல் போனது. இதுபோன்ற குறைகளை நீக்க மீண்டும் ஒரு சிறப்பு முகாம் ஏற்படுத்தி விண்ணப்பங்கள் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Read more »

கொத்தங்குடியில் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் பள்ளிகளுக்கு நிதி வழங்கும் விழா

கிள்ளை : 

            கொத்தங்குடியில் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் பள்ளிகளுக்கு நிதி வழங்கும் விழா நடந்தது. பரங்கிப்பேட்டை ஒன்றியம் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் 123 பள்ளிகளுக்கு மானிய நிதியாக 8 லட்சத்து 33 ஆயிரம் ரூபாய், பள்ளி மானியம் 8 லட்சம் ரூபாய், சிறப்பு கிராம கல்விக்குழு கூட்டத்திற்கு 37 ஆயிரத்து 200 ரூபாய் என 16 லட்சத்து 70 ஆயிரத்து 200 ரூபாய் நிதி வழங்கும் விழா நடந்தது. கொத்தங்குடி நடுநிலைப் பள்ளியில் நடந்த விழாவிற்கு மேற்பார்வையா ளர் சிவசண்முகம் தலைமை தாங்கினார். ஆசிரியர் பயிற்றுனர்கள் பாஸ்கர், பாலமுருகன், ஜெயராமன், மாறன் முன்னிலை வகித்தனர். உதவி தொடக்கக் கல்வி அலுவலர் முத்துசுகுமார், பள்ளிகளுக்கான காசோலைகளை தலைமையாசிரியர்களிடம் வழங்கினார்.

Read more »

வேளாண் பொறியியல் துறையின் "போக்கு' இயந்திரங்கள் கிடைக்காமல் விவசாயிகள் கவலை

கடலூர் : 

                வேளாண்மை பொறியியல் துறை மூலம் வாடகைக்கு வழங்கப்படும் இயந்திரங்கள் உரிய நேரத்தில் கிடைப்பதில்லை என விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

             வேளாண்மை பொறியியல் துறை கடலூர் அடுத்த சின்னகங்கணாங்குப்பத்தில் செயல்பட்டு வருகிறது. விவசாயத்திற்கு கூலி ஆட்கள் பற்றாக்குறையால் இவ்வலுவலகத்தின் மூலம் அரசே விவசாயிகளுக்கு தேவையான அறுவடை இயந்திரம், டிராக்டர், புல்டோசர் உள்ளிட்ட இயந்திரங்களை குறைந்த வாடகைக்கு விடுகிறது. விவசாயிகளுக்கு இச்சலுகை சரியாக கிடைப்பதில்லை என புகார் எழுந்துள்ளது. 

                     பணம் செலுத்தியதன் வரிசைப்படிதான் இயந்திரங் களை அனுப்ப வேண்டும். ஆனால் அதிகாரிகள் ஏனோ தானோ என செயல்பட்டு வருகின்றனர். ஏதாவது ஒரு இடத்தில் இயங்கினால் போதும் என அலட்சியமாக இருந்து வருகின்றனர். அதனால் விவசாயிகளினால் அலுவலகத்தில் பணம் செலுத்த முடியவில்லை. அரசு லாப நோக் கத்தோடு இந்த திட்டத்தை செயல்படுத்த வில்லை. விவசாயிகளுக்கு சேவை அடிப்படையில்தான் செய்து வருகிறது. ஆனால் அதிகாரிகளின் அலட்சிய போக்கினால் விவசாயிகளை அலைகழிக்கப்பட்டு வருகின்றனர். விவசாயிகள் செலுத்தும் கட்டணத்தொகை கம்ப்யூட்டர் மூலம் பதிவு செய்யவும், ஒளிவு மறைவின்றி இயந்திரங்கள் இயங்கும் இடங்களை விவசாயிகளுக்கு தெரிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விடுமுறைக் காலங்களிலும் கட்டணம் செலுத்த அரசு ஆவண செய்ய வேண்டும். அப்போதுதான் அரசின் சலுகைகள் விவசாயிகளுக்கு ஒழுங்காக போய் சேரும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior