உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜூலை 17, 2010

யூனியன் பாங்க் ஆப் இந்தியா சிதம்பரத்தில்188வது கிளை திறப்பு

சிதம்பரம் : 

           சிதம்பரத்தில் யூனியன் பாங்க் ஆப் இந்தியா கிளையை அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தர் ராமநாதன் துவக்கி வைத்தார்.

            யூனியன் பேங்க் ஆப் இந்தியா வங்கியின் தமிழகத்தின் 188 வது கிளை சிதம்பரம் தெற்கு வீதியில் "கியான் டவர்ஸ்'சில் நேற்று துவக்கப்பட்டது. ஏசி வசதி மற்றும் ஏ.டி.எம்., சேவை மையத்துடன் இணைக்கப்பட்ட புதிய கிளையை அண்ணாமலை பல்கலைக் கழக துணை வேந்தர் ராமநாதன் திறந்து வைத்தார். விழாவில் யூனியன் பாங்க் ஆப் இந்தியா துணை பொது மேலாளர் சிக்ரி, அண்ணாமலை பல்கலைக் கழக பதிவாளர் ரத்தினசபாபதி, வங்கியின் முதுநிலை மேலாளர் பாலசுப்ரமணியன், கடலூர் கிளை மேலாளர் காமராஜன், கடலூர் ஊராட்சி தலைவர்கள் காசிநாதன், ஞானசேகரன், வக்கீல் ஜெகநாதன் மற்றும் வாடிக்கையாளர்கள், சுயஉதவிக்குழு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Read more »

நெய்வேலி ஜவகர் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்

நெய்வேலி : 

             நெய்வேலி ஜவகர் பள்ளியில் வெடிகுண்டு வைத்திருப்பதாக வந்த போன் தகவலை தொடர்ந்து போலீசார் சோதனை நடத்தினர்.

              நெய்வேலி டவுன்ஷிப் வட்டம் 17ல் இயங்கி வரும் ஜவகர் மெட்ரிக் பள்ளி முதல்வர் அலுவலகத்திற்கு நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு போன் வந்தது. எதிர் முனையில் பேசிய நபர் பள்ளியில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், இரவு 12 மணிக்குள் வெடிக்கும் என கூறிவிட்டு போனை துண்டித்துவிட்டார். போன் தகவலைக் கேட்டு திடுக்கிட்ட பள்ளி முதல்வர் ராமச்சந்திரன் தகவலின் பேரில், டவுன்ஷிப் இன்ஸ்பெக்டர் சேகர் மற்றும் போலீசார் இரவே பள்ளியை முழுமையாக சோதனை செய்தனர். வெடிகுண்டுகள் எதுவும் சிக்கவில்லை. இதையடுத்து நேற்று வழக்கம் போல் பள்ளி இயங்கியது.

               இந்நிலையில் எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ் உத்தரவின் பேரில் ஏட்டு ராமலிங்கம் தலைமையிலான வெடிகுண்டு கண்டறியும் குழுவினர் நேற்று பகல் 2 மணிக்கு பள்ளியில் மெட்டல் டிடெக்டர் கொண்டு சோதனை செய்து வெடிகுண்டு எதுவும் இல்லை என்பதையும், போன் தகவல் புரளி என்பதையும் உறுதி செய்தனர்.

Read more »

கைவினைஞர் முன்னேற்றக் கழகம் கடலூரில் ஆர்ப்பாட்டம்

கடலூர் : 

             விஸ்வகர்ம சமூகத்தினரை மிகவும் பிற்பட் டோர் பட்டியலில் சேர்க் கக் கோரி கடலூரில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

               தமிழகத்தில் உள்ள கருமார், கன்னார், சிற்பி, தச்சர், பொற்கொல்லர் தொழில் செய்யும் விஸ்வ கர்ம சமூகத்தினரை மிகவும் பிற்பட்டோர் பட்டியலில் சேர்த்து, வேலை வாய்ப்பில் 10 சதவீதம் இட ஒதுக்கீடு வேண்டும். ஜாதி வாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும். கடலூர் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான ரயில்வே சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய கைவினைஞர்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் கடலூர் உழவர் சந்தை முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.

             ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். செயலாளர் சக்திவேல், சிற்ப பிரிவு செயலாளர் யாகமூர்த்தி, நகர தலைவர் திருநாவுக்கரசு முன்னிலை வகித்தனர். நிறுவன பொதுச் செயலாளர் சிவக்குமார் கோரிக் கைகளை வலியுறுத்தி பேசினார். ஆர்ப்பாட்டத்தில் மாநில பொதுச் செயலா ளர் பாலு, அவைத் தலைவர் நடராஜன், மாநில இளைஞரணி செயலாளர் பழனிவேல், மாணவரணி செயலாளர் உமாபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். நகர இளைஞரணி செயலாளர் ஸ்ரீதர் நன்றி கூறினார்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior