உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஆகஸ்ட் 06, 2010

கடலூர் புதுநகர் ஸ்டேஷனில் எஸ்.பி., திடீர் ஆய்வு

கடலூர் : 

             கடலூர் புதுநகர் போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.பி.,  ஆய்வு மேற் கொண்டார். 

                 கடலூர் புதுநகர் போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ் நேற்று வருடாந்திர ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஸ்டேஷனில் பராமரிக்கப்படும் வருகை மற்றும் வழக்குப் பதிவேடு உள்ளிட்ட கோப்புகளை பார்வையிட்டார். மேலும், நிலுவையில் உள்ள வழக்குகள், தேடப்பட்டு வரும் தலைமறைவு குற்றவாளிகளின் விவரங்கள் குறித்து போலீசாரிடம் கேட்டறிந்தவர் கிடப்பில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார். ஆய்வின்போது டி.எஸ்.பி., மகேஸ்வரன், இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.

Read more »

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இள வட்டம் 2010 பரிசளிப்பு விழா

சிதம்பரம் :  

             சிதம்பரம் அண்ணாமலைப் பல்லைக் கழகத்தில் செஞ்சுருள் சங்கம் இள வட்டம் 2010 சார்பில் பரிசளிப்பு விழா நடந்தது. 

               சிதம்பரம் அண்ணாமலைப் பல்லைக்கழகத்தில் துணைவேந்தர் ராமநாதன், பதிவாளர் ரத்தினசபாபதி ஆசியுடன் செஞ்சுருள் சங்கம் இளவட்டம் 2010 சார்பில்  பல்வேறுப் போட்டிகள் நடந்தது.  இதில்  வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா பல்கலைக்கழக நூலக மைய அரங்கில் நடந்தது.  செஞ்சுருள் சங்க திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெயராஜ் வரவேற்றார். பேராசிரியர்கள் பழனியப்பன்,முத்துவீரப்பன்,செல்வராஜ் ஆகியோர் பங்கேற்று நிகழ்ச் சியை துவக்கி வைத்தனர்.  

                  மாவட்ட சுகாதார துணை இயக்குனர் மீரா, மாவட்ட திட்ட மேலாளர் கலைமதி, திட்ட மேலாளர் கதிரவன் ஆகியோர் பங்கேற்றுப் பேசினர். முன்னதாக நடத்தப்பட்ட போட்டிகளில் வெற் றிப் பெற்ற மாணவர்களுக்கு ரொக்கப்பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப் பட்டது.  நிகழ்ச்சியில் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர். செஞ்சுருள் சங்க அலுவலர் ராஜா நன்றி கூறினார்.  நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஜெயராஜ் உள்ளிட்ட குழுவினர்கள் செய்திருந்தனர்.

Read more »

சிதம்பரம் பகுதியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வர்த்தக சங்கத்தினர் கலெக்டருக்கு மனு

சிதம்பரம் : 

              சிதம்பரம் அடுத்த அண்ணாமலைநகர் பகுதியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றக் கோரி  கலெக்டருக்கு வர்த்தக சங்கத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.  

இது குறித்து அண்ணாமலை நகர் வர்த்தக சங்கத் தலைவர் அருள், செயலாளர் மகேஸ்வரன், பொருளாளர் ராமதாஸ் உள்ளிட்ட குழுவினர்கள் நேற்று சிதம்பரத்தில் கலெக்டரிடம் கொடுத்துள்ள மனு:  

               அண்ணாமலை நகர் பகுதியில் மக்கள் தொகை நிறைந்த குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகம்  உள்ள பகுதியாக உள்ளது.  எப்போதும் மக்கள் கூட் டம் அதிகமாக இருக்கும். தற்போது நகரில் போதிய அடிப்படை வசதிகள் இல்லாமல்  இப்பகுதியினர் மிகுந்த பாதிப்படைந்து வருகின்றனர்.  அத்துடன் பல்வேறு விபத்தில் பாதிக்கப்படுகின்றனர்.   ரயில்வே மேம்பாலத்தில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்களை தவிர்க்க மின் விளக்கு அமைக்கவும், மேம்பாலத்தில் போக்குவரத்துடன் கூடிய ரவுண்டானா மற்றும் போலீஸ் குடை, மேம்பாலத்தில் இருந்து மாணவர் ராஜேந்திரன் சிலை வரை கழிவு நீர் கால்வாய் வசதி ஏற்படுத்தவும், விபத்து நடக்கும் பகுதியில் வேகத் தடை அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior