உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஆகஸ்ட் 17, 2010

கடலூர் அருகே துணிகரம்: பெண்ணின் கழுத்தில் கத்தி வைத்து நகை பறித்த கொள்ளையன்; மோதிரத்தை தராததால் விரலை துண்டித்து எடுத்து சென்றான்

கடலூர்:

             கடலூர் அருகே தூக்கணாம்பாக்கத்தை அடுத்த பள்ளிப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மனைவி கெங்கம்மாள் (வயது 40). இவரும், அதே பகுதியை சேர்ந்த இவரது உறவினர்கள் கலியம்மாள், சுமதி ஆகியோரும் ஏம்பலத்தில் நேற்று மாலை நடந்த காதணி விழாவுக்கு சென்றனர். பின்னர் இரவு வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தனர்.

              இரவு 10 மணியளவில் தென்னம்பாக்கம் அழகர் கோவில் அருகே வந்த போது பின்தொடர்ந்து வந்த ஒரு ஆசாமி திடீரென கலியம்மாள் கழுத்தில் கத்தியை வைத்து நகைகளை கழற்றி தரும்படி மிரட்டினான். இதனை பார்த்ததும் கெங்கம்மாளும், சுமதியும் பயந்து ஓடிவிட்டனர்.

                 இதையடுத்து அந்த ஆசாமி கலியம்மாள் கழுத்தில் இருந்த 3 பவுன் தங்க செயினை பறித்துக் கொண்டான். பின்னர் கலியம்மாளிடம் இடது கை சுண்டு விரலில் அணிந்திருந்த மோதிரத்தை கழற்றி தரும்படி அந்த ஆசாமி கூறினார். ஆனால் கெங்கம்மாள் கழற்றி தரமறுத்து விட்டார்.

              இதில் ஆத்திரம் அடைந்த கொள்ளையன் கலியம்மாளின் இடதுகை சுண்டு விரலை கத்தியால் வெட்டி மோதிரத்தோடு எடுத்து சென்று விட்டான். இதனால் கெங்கம்¢மாள் மயங்கி விழுந்தார். இதற் கிடையே நடந்த சம்பவம் குறித்து கெங்கம்மாளும், சுமதியும் கிராமத்துக்கு சென்று தெரிவித்தனர். கிராமமக்கள் சம்பவ இடத்துக்கு திரண்டு வந்தனர். ஆனால் அதற்குள் அந்த கொள்ளையன் தப்பி ஓடிவிட்டான்.

               பின்னர் மயங்கி கிடந்த கலியம்மாளை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.  இதுகுறித்து தூக்கணாம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விரலை துண்டித்து நகையை பறித்து சென்ற மர்ம ஆசாமியை தேடி வருகிறார்கள்.

Read more »

நெய்வேலி என்.எல்.சி. ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்ய முடிவு: 19-ந் தேதி ஊர்வலம்

நெய்வேலி:
 
              நெய்வேலி என்.எல்.சி. ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் சங்க பொதுச்செயலாளர் வெங்கடேசன் கூறியது:-
 
           நெய்வேலி என்.எல்.சி.யில் சுமார் 13 ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். இதில் ஜீவா ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தில் 9 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.
 
              சமவேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும், டெல்லியில் கடந்த 2008-ம் ஆண்டில் ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி 5 ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்களை சொசைட்டியில் இணைக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி நாங்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தினோம். ஆனால் என்.எல்.சி. நிறுவனம் எங்கள் கோரிக்கையை ஏற்கவில்லை.
 
             எனவே வருகிற 19-ந்தேதி மாலை 3 மணிக்கு நெய்வேலி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து என்.எல்.சி. தலைமை அலுவலகம் நோக்கி ஊர்வலமாக சென்று வேலை நிறுத்த நோட்டீஸ் வழங்குவது என்று முடிவு செய்துள்ளோம். இதையடுத்து வேலை நிறுத்த போராட்டத்தில் எப்போது ஈடுபடுவது என்பது குறித்து விரைவில் அறிவிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

Read more »

கடலூர் மாவட்டத்தில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் 3 நாட்கள் சுற்றுப்பயணம்

கடலூர்:

 
           கடலூர் மாவட்டத்தில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். 
ஒவ்வொரு நாளும் அவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் வருமாறு:-

 
                குறிஞ்சிப்பாடி ஒன்றியம் 16-ந் தேதி காலையில் திருச்சோபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 30 படுக்கைகள் கொண்ட புதிய கட்டிடம் திறப்பு விழா. குறவன்மேடு பகுதிநேர நியாயவிலைக்கடை திறப்பு விழா. தீர்த்தனகிரி ஆரம்ப சுகாதார நிலையத்தில் 30 படுக்கைகள் கொண்ட புதிய கட்டிடம் திறப்பு விழா. ஆடூர் அகரம் கிழக்கு பகுதிநேர நியாயவிலைக்கடை திறப்பு விழா. வெ.பிள்ளை பாளையம் பகுதிநேர நியாயவிலைக் கடை திறப்பு விழா. குருவப்பன் பேட்டை, வரதராஜன்பேட்டை ஊராட்சியில் இலவச எரிவாயு அடுப்பு வழங்கும் விழா.

 
           கடலூர் மாவட்டம் 17-ந் தேதி காட்டுமன்னார் கோவில் பேரூராட்சியில் இலவச எரிவாயு அடுப்பு வழங்கும் விழா. நத்தமலை ஊராட்சி அலுவலகத்தில் இலவச எரிவாயு அடுப்பு வழங்கும் விழா. விருத்தாசலம் அரசு மருத்துவமனை புதிய கூடுதல் கட்டிடம் திறப்பு விழா. அரசக்குழி ஆரம்ப சுகாதார நிலையம் புதிய கட்டிடம் திறப்பு விழா. முதனை ஊராட்சியில் இலவச கலர் டி.வி. வழங்கும் விழா.

 
            18-ந் தேதி உள்மருவாய் பகுதிநேர நியாயவிலைக்கடை திறப்பு விழா மற்றும் இலவச எரிவாயு அடுப்பு வழங்கும் விழா. வடலூர் பேரூராட்சியில் 5 புதிய நியாயவிலைக் கடை திறப்பு விழா. வடலூர் பேரூராட்சி வார்டு 9, 10-ல் இலவச எரிவாயு அடுப்பு வழங்கும் விழா.

 
          மேற்கண்ட நிகழ்ச்சிகளில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு அரசுகட்டிடங்களை திறந்து வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior