உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஆகஸ்ட் 18, 2010

கீழணையில் தண்ணீர் திறந்தும் நிரம்பாத வீராணம் ஏரி

சிதம்பரம் : 

             சிதம்பரம், காட்டுமன்னார் கோவில் பாசனத்திற்கு கீழணையில் இருந்து தண்ணீர் திறந்து ஒரு வாரமாகியும் வீராணம் ஏரி நிரம் பாமல் வற்றிய நிலையிலேயே உள்ளது. 

               கூடுதல் தண்ணீர் திறக்காத நிலை நீடித்தால் வடவாறு மற்றும் வீராணம் பாசனப் பகுதியில் ஒரு லட்சத்து 10 ஆயிரம் ஏக்கர் விவசாயம் பாதிக்கும் அபாயம் உள்ளது. கடலூர் மாவட்டம் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் பகுதி விவசாயிகளின் உயிர் நாடியாக விளங்குவது வீராணம். கோடை காலங்களில் தண்ணீர் வற்றி பாலைவனமாக மாறிவிடும். சென்னைக்குக் குடிநீர் கொண்டு செல்வதையொட்டி கடந்த சில ஆண்டுகளாகவே வீராணம் வற்றாமல் கோடையிலும் தண்ணீர் இருந்து வருகிறது. 

                 ஆனால் தற்போது பாசனத் திற்கு  தண்ணீர் திறக்க வேண்டிய நிலையில் வீராணத்திற்கு தண்ணீர் விடாமல் நிறுத்தப்பட்டதால் தண்ணீர் அளவு மொத்த கொள்ளளவான 47.5 அடியில் 40 அடிக்கு குறைந்தது. ஏரி முழுவதும் பாசி, செடிகொடிகள் வளர்ந்து வறண்ட நிலையில் காணப்பட்டது. இருந் தும் சென் னைக்கு குடிநீர் எடுத்துச் செல் வது பாதிக்காத வகையில் தொடர்ந்து தண்ணீர் அனுப்பப் பட்டு வருகிறது.

               இந்நிலையில் கடலூர், நாகப்பட்டினம், தஞ்சை மாவட்ட காவிரி கடைமடை பகுதி பாசனத்திற்கு கீழணையில் இருந்து 11ம் தேதி தண்ணீர் திறக்கப்பட் டது. வீராணம் ஏரிக்கு வடவாறு வழியாக தண்ணீர் திறக்கப்பட்டு தற்போது 500 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. எப்போதும் தண்ணீர் திறக்கப்பட்ட ஒரு சில நாட்களிலேயே வீராணம் நீர் மட்டம் உயரும். ஆனால் இம் முறை குறைவான அளவில் தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் வீராணத்தின் நீர்மட்டம் உயராமல் 41 அடி மட்டுமே தொடர்ந்து காணப்படுகிறது. 

                   குறைந்தது 2,000 கன அடியாவது தண்ணீர் வந்தால் மட்டுமே 15 அல்லது 20 நாட்களில் வீராணம் ஏரியில் தண்ணீர் பாசனத்திற்கு கொடுக்கும் அளவிற்கு நிரம்பும். தற்போது கீழணையில் தண்ணீர் திறக்கப்பட்டு ஒரு வாரம் ஆகிய நிலையில் ஏரியில் எந்த மாற்றமும் இல்லாமல் வறண்ட நிலையே நீடிக்கிறது. இதே நிலையில் தண்ணீர் வந்தால் ஏரி நிரம்ப மாதக்கணக்கில் ஆகும் என விவசாயிகள் கூறுகின்றனர். எனவே வீராணத்திற்குக் கூடுதல் தண்ணீர் திறந்தால் மட்டுமே பாசனத்திற்கு தண்ணீர் கிடைக்கும். இல்லையென்றால் வடவாறு மற்றும் வீராணம் பாசன பகுதியில் ஒரு லட்சத்து 10 ஆயிரம் ஏக்கர் விவசாயம் பாதிக்கும் என விவசாயிகள் கூறினர்.        

Read more »

கலெக்டர், எஸ்.பி., அலுவலகங்கள் கிராம மக்கள் திடீர் முற்றுகை

கடலூர்:

             ஊராட்சி தலைவரை வழக்கில் சேர்க்கக் கூடாது என கலெக்டர்  மற்றும் எஸ்.பி., அலுவலகத்தை முற்றுகையிட்டு கிராம மக்கள் மனு கொடுத்தனர். 

               கடலூர் அடுத்த திருமானிக்குழி ஊராட்சிக்குட்பட்ட  டி.புதுப்பாளையம் மற்றும் மாவடிப்பாளையம் கிராமத்தினரிடையே கடந்த 14ம் தேதி ஏற்பட்ட மோதலில் ஒரு கும்பல் மாவடிப்பாளையம் கிராமத்தில் புகுந்து வக்கீல் பகீரதன் வீட்டைத் தாக்கி, அங்கிருந்த மோட்டார் பைக் உள்ளிட்ட பொருட்களை அடித்து நொறுக்கினர். இந்த தாக்குதலில் வக்கீல் பகீரதன் பாட்டி ஜெயலட்சுமி இறந்தார். 

                இந்த சம்பவத்திற்கு காரணமான  ஊராட்சி தலைவர் காசிநாதன் உள்ளிட்ட பலர் மீது புகார் செய்தும், ஊராட்சி தலைவர் மீது வழக்கு பதியாததால்  திருப்பாதிரிப்புலியூர் போலீசாரை கண்டித்து நேற்று வக்கீல் சங்கம் சார்பில் கோர்ட் புறக்கணிப்பில் ஈடுபட்டனர். இந்நிலையில் நேற்று காலை திடீரென  ஊராட்சி தலைவர் காசிநாதனின் ஆதரவாளர்கள் 300க்கு மேற்பட்டோர், கடலூர் கலெக்டர் அலுவலகம், அதனைத் தொடர்ந்து எஸ்.பி., அலுவலகம் ஆகியவற்றை முற்றுகையிட்டு முன்விரோதம் காரணமாக காசிநாதன் மீது வக்கீல் பகீரதன் புகார் செய்துள்ளார். எனவே, காசிநாதன் மீது வழக்குப் பதிவு செய்யக்கூடாது என  கோஷமிட்டனர். பின்னர் கலெக்டர் மற்றும் எஸ்.பி., யிடம் மனு கொடுத்தனர்.

Read more »

குறுவட்ட விளையாட்டுப் போட்டி சி.என்.பாளையம் மாணவி வெற்றி

நடுவீரப்பட்டு : 

                குறுவட்ட விளையாட்டுப் போட்டியில் சி.என்.பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி வெற்றி பெற்றார். கடலூர் கல்வி மாவட்ட மகளிர் உடற்திறன் கழகம் சார்பில் பண்ருட்டி குறுவட்ட விளையாட்டுப் போட்டிகள் பண்ருட்டி ஜான்டூயி பள்ளியில் நடந்தது. 14 வயதுதிற்குட்பட்ட  மாணவிகள் பிரிவில் 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் சி.என்.பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி எட்டாம் வகுப்பு மாணவி தேவி முதலிடம் பெற்றார். வெற்றி பெற்ற மாணவியை பள்ளி தலைமை ஆசிரியர் தெய்வசிகாமணி, உடற்கல்வி ஆசிரியர் ராஜேந்திரன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior