உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




ஞாயிறு, செப்டம்பர் 19, 2010

ரயில்வே துறையைக் கண்டித்து கடலூரில் உண்ணாவிரதம்

கடலூர்:

                   ரயில்வே துறையை கண்டித்து கடலூரில் வியாழக்கிழமை உண்ணாவிரதம் நடைபெற்றது.கடலூர் வழியாக இயக்கப்படும் பல ரயில்கள் கடலூர் துறைமுகம் சந்திப்பு ரயில் நிலையத்தில் நிற்பது இல்லை. 

                    இதுகுறித்து பல்வேறு வழிகளிலும் கோரிக்கைகள் அனுப்பியும் ரயில்வே இலாகா மக்களின் கோரிக்கைகளுக்கு மதிப்பளிக்கவில்லை. எனவே துறைமுகம் சந்திப்பு ரயில் நிலையத்தில் ரயில்கள் நிறுத்தப்படாததைக் கண்டித்து கடலூர் பொதுநல சங்கங்கள் சார்பில் உண்ணாவிரதம் துறைமுகம் நகரில் நடந்தது. உண்ணாவிரதத்துக்கு பொதுநலச் சங்கங்களின் பொதுச்செயலர் ப.கடல் தனசேகரன் தலைமை தாங்கினார். சீனுவாசன், ரமேஷ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். உண்ணாவிரதத்தை வழக்கறிஞர் த.ராஜசேகரன் தொடங்கி வைத்தார். மயிலாடுதுறை வழக்கறிஞர் கே.ராஜேந்திரன், கவிஞர் இரா.முத்துக்குமரன், பாண்டுரங்கன் உள்ளிட்ட பலர் கண்டனஉரை நிகழ்த்தினர்.

Read more »

பண்ருட்டியில் காய்கறி விலை வீழ்ச்சி

பண்ருட்டி:

                 பண்ருட்டி பகுதியில் நாட்டு காய்கறிகளின் வரத்து அதிகரித்துள்ளதால் அவற்றின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். பண்ருட்டி மற்றும் அண்ணாகிராமம் ஒன்றியப் பகுதிகளை சேர்ந்த பணிக்கன்குப்பம், சாத்திப்பட்டு, பலாப்பட்டு, மாளிகம்பட்டு, தாழம்பட்டி, திராசு, ராசாப்பாளையம், கட்டமுத்துப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் நூற்றுக்கணக்கான ஹெக்டர் பரப்பளவில் காய்கறி விவசாயம் நடைபெறுகிறது. மேற்கண்ட பகுதி விவசாயிகள் தோட்டப்பயிரான முருங்கை, வெண்டை, பாகல், கத்தரி, புடலை, கொத்தவரை உள்ளிட்ட காய்கறிகளை அதிக பரப்பளவில் பயிர் செய்கின்றனர். இப்பகுதியில் விளையும் இந்த காய்கறிகள் பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகின்றன.தற்போது பண்ருட்டி ரத்தினம்பிள்ளை காய்கறி சந்தைக்கு, காய்கறி வரத்து அதிகரித்துள்ளதால் விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக விவசாயிகளும், வியாபாரிகளும் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து எஸ்.வி.டி. காய்கறி மொத்த வியாபாரி ஆர்.சங்கர் கூறியது:

              பண்ருட்டி சுற்றுவட்டாரப் பகுதியில் இருந்து காய்கறி வரத்து அதிகரித்துள்ளதால் விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். வியாழக்கிழமை நிலவரப்படி சந்தையில் (மொத்த விற்பனையில் ஒரு கிலோ) நாட்டு முருங்கை  2, வெண்டை  4, கத்தரி  6, புடலை  3, கொத்தவரை  4, பாகல்  6 விலை போகிறது. கடந்த வாரம் 70 காய் கொண்ட வாழைத் தார்  100 முதல் 120 வரை விலை போனது. தற்போது  70, 80 தான் விலை போகிறது என்றார் சங்கர்.

துகுறித்து விவசாயிகள் கூறியது 

                          ""அதிக நிலப்பரப்பில் பயிரிடப்பட்டு உள்ளதாலும், மகசூல் அதிகரித்துள்ளதாலும் விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. காய் விற்ற பணம், அறுவடைக் கூலி கொடுக்கக்கூட போதவில்லை, இந்நிலையில் அடிக்கடி மழை பெய்து வருவதால் பூச்சித் தாக்குதல் அதிகரித்துள்ளது இதனால் மருத்து அடிக்கும் செலவும் கூடியுள்ளது'' என கவலையுடன் தெரிவித்தார்.

Read more »

திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையத்தில் டிக்கெட் கவுன்டர்கள் மாற்றம்

கடலூர்:

               கடலூர் திருப்பாப்புலியூர் ரயில் நிலையத்தில் டிக்கெட் கவுன்டர்கள் இடம் மாற்றப்பட்டதால், பயணிகள் பெரிதும் அவதிக்கு உள்ளாகி இருக்கிறார்கள். மயிலாடுதுறை-விழுப்புரம் அகலப் பாதைத் திட்டம் நிறைவேற்றப்பட்ட பின், பல ரயில்கள் கடலூர் மாவட்டத்தில் நின்று போகாத நிலையும், சில ரயில்கள் ஒரு சில ரயில் நிலையங்களில் மட்டும் நின்று போகும் நிலையும் ஏற்பட்டு விட்டது.இந்த கோரிக்கைகள், ரயில்வே துறை அதிகாரிகளின் குப்பைத் தொட்டிகளில் முடங்கிப் போய்விட்டன. 

                 இதனால் கடலூர் மாவட்ட மக்களுக்கு ரயில் பயணம் எட்டாக்கனியாவும், ரயில் நிலையங்கள் குறைந்தபட்ச வசதிகள் அற்ற நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டன. அத்தகைய துர்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்ட ரயில் நிலையங்களில், 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த திருப்பாப்புலியூர் ரயில் நிலையம் முதல் இடம் வகிக்கிறது. மீட்டர் கேஜ் பாதையாக இருந்தபோது ரயில் நிலையத்தின் முகப்பு ரயில் தண்டவாளங்களுக்கு மேற்குப் பக்கமாக இருந்தது. அகலப் பாதை ஆக்கப்பட்ட பிரதான முகப்பு கிழக்குப் பகுதிக்கு மாற்றப்பட்டு இருக்கிறது.

                 இந்த மாற்றம் காரணமாக தற்போது ரயில் பாதைகளின் மேற்குப் பகுதியில் ரயில்களுக்கான முன்பதிவுக் கெüன்டர்களும், அன்றாடப் பயணத்துக்கு டிக்கெட் எடுக்கும் கவுன்டர்கள் கிழக்குப் பகுதிக்கும் மாற்றப்பட்டு விட்டன.இந்த மாற்றம் காரணமாக திருப்பாப்புலியூர் பகுதியில் இருந்து பயணச் சீட்டு வாங்க வருவோர், உயர் நடைமேடையை பயன்படுத்தி, பயணச்சீட்டு கெüன்ட்டர்களை அடைவதற்குள் போதும் போதும் என்றாகி விடுகிறது.மேலும் ஒரு பிளாட்பாரத்தைத் தவிர மற்ற இடங்களில் மின் விளக்குகள் இல்லாததால் பயணிகள் காத்திருக்கும் இடம், குப்பங்குளம் பாதை உள்ளிட்ட ரயில் நிலைய வளாகம், இரவு நேரங்களில் மது அருந்தும் பார்களாக மாறி விடுகின்றன.

                   ரயில் நிலையத்துக்கு புதிய முகப்பு வாயிலுக்கு வரும் வழி, ஆட்டோ ரிக்ஷாக்களால் அடைபட்டு, பயணிகள் எளிதில் உள்ளே வரமுடியாத நிலை உள்ளது.ரயில் நிலைய முகப்பு, பூங்கா அமைக்கும் வகையில் கட்டுமானங்கள் செய்யப்பட்டும் அவை, பூங்காக்களாக இல்லாமல், குப்பைக் கொட்டும் இடமாக மாறியுள்ளது.ரயில் நிலைய வளாகத்தில் காலியாக இருக்கும் இடங்கள் எல்லாம், தனியாருக்குச் சொந்தமான வேன்கள், கார்கள், ஆட்டோக்கள் நிறுத்தப்பட்டு, அவற்றின் ஓட்டுநர்களின் கட்டுப்பாட்டுக்கு மாற்றப்பட்டு விட்டன.ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு வைக்கப்பட்டு இருக்கும் குடிநீர், உவர் நீராக உள்ளதால் குடிப்பதற்கு லாயக்கற்றதாக இருப்பதாக பயணிகள் தெரிவிக்கிறார்கள். 

 இது குறித்து ரயில் நிலைய அதிகாரிகளைக் கேட்டால், 

                           "ரயில் நிலையக் கட்டுமானப் பணிகள் இன்னமும் முடிவடையவில்லை. போதுமான ஊழியர்கள் நியமிக்கப்படவில்லை' என்று கைவிரிக்கிறார்கள்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior