உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




ஞாயிறு, செப்டம்பர் 19, 2010

பன்றிக் காய்ச்சல்: என்எல்சி தலைமை அலுவலக ஊழியர் சாவு

நெய்வேலி:

                     பன்றிக் காய்ச்சலால் என்எல்சி தலைமை அலுவலக ஊழியர் சொக்கலிங்கம்(46) வெள்ளிக்கிழமை இறந்தார். தொமுசவின் செயற்குழு உறுப்பினராகவும் இருந்துவந்தார். இவர் இம்மாத தொடக்கத்தில் உறவினர் இல்ல திருமணத்துக்காக ராஜபாளையம் சென்றுவந்தார்.

                 வீடு திரும்பிய சொக்கலிங்கத்துக்கு காய்ச்சல் ஏற்பட்டதையடுத்து, செப்டம்பர் 2-ல் என்எல்சி மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்றார். அவரைப் பரிசோதித்த டாக்டர்கள், சொக்கலிங்கத்துக்கு பன்றிக் காய்ச்சலுக்கான அறிகுறிகள் தென்படுவே, செப்டம்பர் 3-ம் தேதி அவரை மேல் சிகிச்சைக்காக சென்னை ராமச்சந்திரா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்றுவந்த சொக்கலிங்கம், வெள்ளிக்கிழமை அதிகாலை இறந்துவிட்டார். 

                    இதைத் தொடர்ந்து சொக்கலிங்கத்தின் உடல் நெய்வேலிக்கு கொண்டுவரப்பட்டு, வெள்ளிக்கிழமை பகலிலேயே மயானத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இறந்த சொக்கலிங்கத்துக்கு மனைவி, மகள், மகன் உள்ளனர்.

Read more »

கொசு உற்பத்தி கேந்திரமாகிய நகராட்சி வணிக வளாகம் !

கடலூர்:

                  கடலூர்  திருப்பாதிரிப்புலியூர் பஸ் நிலையத்தில் பிரமாண்டமாக இருந்த வணிக வளாகம் இடிக்கப்பட்டதால், அந்த இடம் தற்போது நகர மக்களுக்கு கொசுக்களை உற்பத்தி செய்து விநியோகிக்கும் நிலையமாக மாறி இருக்கிறது.

                  திருப்பாதிரிப்புலியூர் பஸ் நிலையத்தில் 35-க்கும் மேற்பட்ட கடைகளைக் கொண்ட வணிக வளாகம், சிதிலம் அடைந்ததால், 3 ஆண்டுகளுக்கு முன் இடித்துத் தரைமட்டம் ஆக்கப்பட்டது.அதில் வணிகம் செய்தவர்கள் சிலருக்கு பஸ் நிலையத்தின் அருகே தாற்காலிக இடம், நீதிமன்றத்தின் உத்தரவுப்படி வழங்கப்பட்டது.இதில் எழுந்த நீதிமன்ற வழக்குகள் காரணமாக, வணிக வளாகத்தை மீண்டும் கட்டுவது இப்போதைக்குச் சாத்தியமில்லை என்ற நிலை ஏற்பட்டு விட்டது. 

                   இதனால் அதில் வணிகம் செய்த வியாபாரிகள்தான் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்ற நிலை மாறி, தற்போது வணிக வளாகம் இருந்த இடத்தால், கடலூர் மக்களே பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள். பஸ் நிலையத்துக்கு வரும் பயணிகளின் சுகாதாரம் கேள்விக் குறியாக மாறியிருக்கிறது.  வணிகவளாகம் இருந்த இடம் சாக்கடை கலக்கவும், குட்டையாகவும், பஸ் நிலையத்தில் வணிகம் செய்வோர் குப்பைக் கொட்டும் இடமாகவும் மாறி இருப்பது, கடலூர் மக்களை பெரிதும் சங்கடத்தில் ஆழ்த்தி இருக்கிறது. தொடர்ந்து மழை பெய்து கொண்டு இருப்பதால், அந்த இடம் வற்றாத குளமாக மாறிவிட்டது. 

                     வணிக வளாகம் இருந்த இடத்தில் சாலையோர, நடைபாதைக் கடைக்காரர்களால் ஆக்கிரமித்து கூறுகட்டி பழங்கள் வியாபாரம், அழகுசாதனப் பொருள்கள், துணிகள் விற்கும் இடமாக மாற்றப்பட்டு விட்டது.அவர்கள் வெளியேற்றும் கழிவுப் பொருள்கள் அனைத்தும் இந்தக் குட்டையில்தான் சங்கமமாகின்றன. பழைய வணிக வளாகம் இருந்த இடத்தை, ஆக்கிரமித்துக் கொண்ட நடைபாதைக் கடைக்காரர்களை, போலீசார்  எத்தனை தரம் முயன்றாலும், அவர்களின் அரசியல், தொழிற்சங்கப் பின்னணி காரணமாக அகற்ற முடியவில்லை.இனி இங்கு வணிக வளாகம் கட்ட நடைபாதைக் கடைக்கார்களே அனுமதிக்க மாட்டார்கள் என்ற நிலையும் உருவாகி உள்ளது.

                             கடலூரில் போக்குவரத்துக்கு இடையூறாக, சுகாதாரக் கேடாகத் திகழும், நடைபாதைக் கடைகளை ஒழிக்க, தற்போது இருக்கிற அதிகாரிகளால் எதுவும் செய்ய முடியாது. இனிமேலும் வரும் அதிகாரிகளாலும் அது இயலாத காரியம் என்கிறார்கள் பொதுமக்கள். எனினும் வணிக வளாகம் இருந்த இடம், சாக்கடை தேங்கும் குட்டையாக மாறி இருப்பது, நகர மக்களை பெரிதும் கவலையில் ஆழ்த்தி உள்ளது.

Read more »

மீனவர் கிராமங்களுக்கு பஸ் வசதி தேவை

கடலூர்:

                      பரங்கிப்பேட்டை, கிள்ளை உள்ளிட்ட மீனவர் கிராமங்களுக்கு கூடுதல் பஸ் வசதி செய்து கொடுக்க வேண்டும் என்று,  வியாழக்கிழமை நடந்த கடலூர் மாவட்ட ஊராட்சிக் கூட்டத்தில் அதன் தலைவர் இரா.சிலம்புச் செல்வி வலியுறுத்தினார். மீனவர் பரங்கிப்பேட்டை வழியாக சிதம்பரம் மற்றும் கடலூர் இடையே இயக்க அனுமதி அளிக்கப்பட்ட பஸ்கள் பலவும், பரங்கிப்பேட்டை வழியாகச் செல்வது இல்லை. பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் பயணிக்கவும்  மீனவர்கள் பிடிக்கும் மீன்களை வெளியிடங்களுக்குக் கொண்டு செல்லவும் கூடுதல் பஸ்களை அரசு போக்குவரத்துக் கழகம் இயக்க வேண்டும் என்றும் சிலம்புச்செல்வி கேட்டுக் கொண்டார்.

உறுப்பினர் ப.சண்முகம் பேசுகையில், 

                  ""ஆகஸ்ட் 25-ம் தேதி சிப்காட் பகுதி கிராம வாய்க்கால்களில், ரசாயனத் தொழிற்சாலைகள் ஆலைக் கழிவுகளைத் திறந்து விட்டனர். அந்தத் தண்ணீரைக் குடித்த மாடுகள் செத்தன. விளைநிலங்கள் வீணாகி விட்டன. ஆனால் எந்த ரசாயன ஆலையில் இருந்து, இந்தக் கழிவுகள் திறந்து விடப்பட்டன என்ற விவரத்தை, இதுவரை மாசுக் கட்டுப்பாடு வாரியம் கண்டிபிடித்து அறிவிக்கவில்லை. 

                            இதனால் விவசாயிகளும் பொதுமக்களும் மாசுக் கட்டுப்பாடு வாரியம் மீது பெரிதும் அதிருப்தி அடைந்துள்ளனர்.தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கிகள் மற்றும் மாவட்ட தொழில் மையத்தின் நிலைக் குழுக்களில் நான் 4 ஆண்டுகளாக உறுப்பினராக இருந்தும், இரு துறைகளின் எந்தத் திட்டமும் விவாதிக்கப்பட்டு பொதுமக்களின் கருத்து அறியப்படவில்லை'' என்றார் சண்முகம். மற்றும் பல்வேறு உறுப்பினர்களும் தங்கள் பகுதி குறைகளையும் கோரிக்கைகளையும் தெரிவித்தனர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior