உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், அக்டோபர் 19, 2010

உடற்கல்வி ஆசிரியர் பட்டியலை இணையதளத்தில் வெளியிட கோரிக்கை

சிதம்பரம் :

                   சான்றிதழ் சரிபார்க்கப்பட்ட 853 உடற்கல்வி ஆசிரியர் பணிக்கு தேர்வானவர்களின் பட்டியலை இணையதளத்தில் வெளியிடக்கோரி தமிழ்நாடு வேலையில்லா உடற் கல்வி ஆசிரியர் கழகம் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது. 

இது குறித்து அந்த அமைப்பின் தலைவர் ராமசாமி முதல்வர் கருணாநிதிக்கு அனுப்பியுள்ள மனு: 

                      சமச்சீர் கல்வியை தமிழகத்தில் அறிமுகப்படுத்தி கல்வித்துறையில் பல் வேறு வளர்ச்சித் திட்டங் கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மிகுந்த பணிச்சுமைகளுக்கிடையில் செயல்படும் ஆசிரியர் தேர்வு வாரியத்தில் சான்றிதழ் சரிபார்க்கப்பட்ட 900க்கும் மேற்பட்ட முதுநிலை மற்றும் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நியமணம் செய்யப்பட்ட நிலையில், மிக குறைந்த அதாவது 853 உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் இசை, ஓவியம், தையல் ஆசிரியர்கள் பட்டியல் வெளியிடப்படவில்லை.

                        பிற பாடங்களில் தேர்வானவர்கள் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. ஆனால் உடற்கல்வி குறித்து வெளியிடப்படவில்லை. எனவே தேர்வு செய்யப்பட்டுள்ள உடற் கல்வி ஆசிரியர் பணியிடங்களை விரைந்து நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Read more »

பிளாஸ்டிக் உபயோகத்தை தடை செய்வதில் அலட்சியம் : கடலூர் மாவட்டத்தில் சுற்றுச் சூழல் பாதிக்கும் அபாயம்


நெல்லிக்குப்பம் : 

                 பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டை தடை செய்வதில் அதிகாரிகள் தொடர்ந்து அலட்சியம் காட்டி வருவதால் மாவட்டத்தில் சுற்றுச் சூழல் பாதித்து வருகிறது. கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் பொருட்கள் வாங்க கடைக்குச் செல் லும் போது  துணிப்பை கொண்டு செல்வது வழக் கம். ஒவ்வொரு வீட்டிலும் காய்கறி வாங்குவதற்னெ தனி துணிப் பையும், மீன் மற்றும் இறைச்சி வாங்குவதற்கு ஓலையால் பின்னப்பட்ட "பரி'யும் வைத்திருப்பார்கள். மளிகை பொருட்களுக்கு 200 கிராம் முதல் 5 கிலோ வரை பேப்பர் கவர் பயன்படுத்தப்பட்டது. 

                  இவ்வாறு பயன்படுத்திய பேப்பர், பை உள் ளிட்ட குப்பைகள் மக்கி உரமானது. இதை வாங்க விவசாயிகளிடையே போட்டி நிலவியதால் நகராட்சிக்கும் வருமானம் கிடைத்தது. கால்நடைகள் வைத்திருப்பவர்களிடமும் விவசாயிகள் எரு வாங்குவார்கள். இயற்கை உரங் களை பயன்படுத்தியதால் மண் வளம் பாதுகாக்கப் பட்டு குறைந்த செலவில் அதிக மகசூல் கிடைத்தது. இதை கெடுக்க வந்ததுதான் "கேரி பேக்' (பிளாஸ் டிக் பைகள்) கலாசாரம். எண்ணெய் பாக்கெட் முதல் "டிஸ்போசல் கப்' வரை பிளாஸ்டிக் ஆதிக்கம் நிலவி வருகிறது. இதன் காரணமாக தற்போது 100 மி.லி., எண்ணெய் வாங்கினால் கூட பிளாஸ்டிக் கவரில் கொடுக்கப்படுகிறது. எங்கு பார்த்தாலும் பிளாஸ் டிக் பைகளே காணப்படுகிறது.

                      இவ்வாறு பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகள் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் மக்குவதில்லை. மண் துகள்களை அடைத்துக் கொள்வதால் மழை நீர் நிலத்தடிக்கு செல்ல முடியாததால், நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்படுவதோடு புவி வெப்பமயமாதலுக்கு முக்கிய பங்கு வகிக்கிறது. நகராட்சி பகுதியில் சேரும் குப்பையில் பெரும் பகுதி பிளாஸ்டிக் பைகள் நிறைந்துள்ளதால் அவைகள் உரமாவது இல்லை. சேகரிக்கும் குப் பைகளை அங்காங்கே குவித்து தீ வைத்து எரிப்பதால் சுற்றுச்சூழல் பாதிக்கிறது. பிளாஸ்டிக் பைகள் அதிகளவு குப்பையுடன் கலந்து வருவதால் ஒரு கோடி ரூபாய் செலவு செய்து கொண்டு வரப் பட்ட குப்பையில் இருந்து உரம் தயாரிக்கும் திட்டத் தையும் செயல்படுத்த முடியவில்லை.
 
                        இயற்கை உரங்கள் கிடைக்காமல் அதிகளவு ரசாயன உரங்களை விவசாயிகள் பயன்படுத்துவதால் மண் வளம் பாதித்து மகசூல் குறைகிறது. உள்ளாட்சி அமைப்புகள் சிறப்பு கூட்டங்கள் நடத்தி, தங்கள் பகுதியில் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதித்து தீர்மானம் நிறைவேற்றின. ஒரு சில உள்ளாட்சி அமைப்பு நிர் வாகிகள் மற் றும் அதிகாரிகள் தங்கள் பகுதி வியாபாரிகளை அழைத்து பிளாஸ்டிக் பைகளை பயன் பாட்டை தவிர்க்க வேண்டுகோள் விடுத்தனர். 

                       ஆனால் அதிகாரிகள் முறையாக கண்காணிக்காததால் வியாபாரிகள் தொடர்ந்து பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தி வருகின்றனர். கூட்டம் நடத்தி நாளிதழில் செய்தி வந்தவுடன் உயர் அதிகாரிகளிடம் காட்டுவதோடு தங்கள் பணி முடிந்ததாக அதிகாரிகள் அலட்சியமாக உள்ளனர். இதே நிலை நீடித்தால் சுற்றுச்சூழல் பாதிப்பதோடு விவசாய நிலங்களும் பயிர் செய்ய தகுதியில்லாமல் மாறும் நிலை ஏற்படும்.  இப்பிரச்னையை தீர்க்க பிளாஸ்டிக் உற்பத்தியை தடை செய்ய வேண்டும். பிளாஸ்டிக் பைகள் உபயோகித்தால் அபராதம் விதித்தால் மட்டுமே சுற்றுச்சூழலை பாதுகாக்க முடியும்.

Read more »

கடலூரில் சம்பா நடவு இலக்கு 2.3 லட்சம் ஏக்கர்

கடலூர்:

                கடலூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு 2.3 லட்சம் ஏக்கரில் சம்பா நடவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருப்பதாக, மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் தெரிவித்தார்.

வெள்ளிக்கிழமை நடந்த மாவட்ட விவசாயிகள் குறைகேட்கும் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தது:

                 நெல் பயிரைப் பொறுத்தவரை, சொர்ணவாரி பருவத்தில் 10 ஆயிரம் ஹெக்டேர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, 11,974 ஹெக்டேரில் சாகுபடி செய்யப்பட்டது. குறுவைப் பருவத்தில் 8 ஆயிரம் ஹெக்டேர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, 8326 ஹெக்டேரில் சாகுபடி செய்யப்பட்டது. சம்பா பருவத்தில் 2.3 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

                    செப்டம்பர் முடிய 38,153 ஹெக்டேரில் நடு முடிந்துள்ளது. செப்டம்பர் முடிய கரும்பு 33,642 ஹெக்டேர், கம்பு  2715 ஹெக்டேர், கேழ்வரகு 4459 ஹெக்டேர், மக்காச்சோளம் 12464 ஹெக்டேர், உளுந்து 945 ஹெக்டேர், மணிலா 3718 ஹெக்டேர் எள் 3446 ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. வீராணம் ஏரியில் 44.9 அடி (மொத்த உயரம் 47.5அடி),கீழணையில் 7 அடி (9 அடி). வாலாஜா ஏரியில் 5.5 அடி (5.5 அடி), பெருமாள் ஏரியில் 5 அடி (6.5 அடி) உள்ளது.  வெலிங்டன் ஏரியில் தண்ணீர் இல்லை. விதைகளைப் பொறுத்தரை நெல் 498.38 டன்கள், தானிய வகைகள் 0.75 டன்கள், பயறுவகைகள் 72.73 டன்கள், மணிலா 5.32 டன்கள் இருப்பு உள்ளது. உரங்கள் தழைச்சத்து 904 டன்கள், மணிச்சத்து 1212 டன்கள், சாம்பல் சத்து 1970 டன்கள் இருப்பு உள்ளது.

                      உயிர் உரங்கள் 1,05,650 பொட்டலங்கள் இருப்பு உள்ளன. 2,28,200 பொட்டலங்கள் வழங்கப்பட்டு உள்ளன. கூட்டுறவு மூலம் செப்டம்பர் முடிய பயிர்க்கடன் குறுகிய காலக் கடன்கள் 107.99 கோடி வழங்கப்பட்டு உள்ளது. மத்திய காலக் கடன் 4.86 கோடி, இதர வேளாண் கடன்கள் 364.07 கோடி (மொத்தம் | 476.92 கோடி) வழங்கப்பட்டு உள்ளது என்றார் ஆட்சியர்.

பாசிமுத்தான் ஓடை விவசாயிகள் சங்கத் தலைவர் ரவீந்திரன்: 

                              வாலாஜா ஏரி மற்றும் வாய்க்கால்கள் தூர்வாரும் பணிகளுக்கு என்.எல்.சி. 24 கோடி ஒதுக்கி இருக்கிறது. விரைவில் பணியைத் தொடங்க முத்தரப்பு கூட்டத்தை கூட்ட வேண்டும். என்.எல்.சி.க்கு நிலம் கொடுத்த விவசாயிகளின் பிரச்னைகளுக்குத் தீர்வு காண வேண்டும். வடகிழக்குப் பருவமழை காலத்தில் வீராணம் ஏரியில் 43 அடிக்கு மேல் நீரைத் தேக்கி வைக்கக் கூடாது. வீராணம் ஏரிக்கு லஸ்கர்களை நியமித்து, நீர் அளவை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

பெண்ணாடம் சோமசுந்தரம்: 

                  பெண்ணாடம் சர்க்கரை ஆலை கரும்பு நடவுக்கு ஏக்கருக்கு | 3 ஆயிரம் மானியம் வழங்குவதாக அறிவித்து, இதுவரை வழங்கவில்லை.

மாவட்ட ஆட்சியர்: 

                  வேளாண் உதவி இயக்குநர் முன்னிலையில், சர்க்கரை ஆலை விவசாயிகளுடன் பேச்சு நடத்த வேண்டும்.

முட்லூர் விஜயகுமார்: 

                  டெல்டா பாசனப் பகுதிகளுக்கு கூடுதல் நீர் வழங்கியதற்கு நன்றி. நுண்ணுயிர் உரத்தின் விலையைக் குறைக்க வேண்டும்.

வீராணம் பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் இளங்கீரன்: 

                 வீராணம் ஏரியில் நீர் மட்டத்தை 43 அடிக்கு மேல் உயர்த்தக் கூடாது. களங்கள் இல்லாத இடங்களில்,  அறுவடை காலங்களில் சாலைகளில் தானியங்களை உலர்த்த அனுமதிக்க வேண்டும்.

மாவட்ட ஆட்சியர்: 

                 தேவைப்படும் அனைத்து இடங்களிலும் களங்கள் அமைக்க நிதி வழங்கப்படும். விவசாயிகள் தெரிவிக்கலாம்.

வேணுகோபால்: 

                மக்காச்சோளத்துக்கு களை எடுக்க தகுந்த கோனோவீடர் கருவிகள் வேண்டும்.

மருத்தாசலம்: 

                வெலிங்டன் ஏரிக்கு கூடுதல் நீர் வரத்துக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் விவசாயிகள் தெரிவித்தனர்.

                      வேளாண் இணை இயக்குநர் இளங்கோவன், வேளாண் அலுவலர் மணி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior