உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், மே 10, 2011

எலக்ட்ரிக்கல் மோட்டார் ரீ வைண்டிங் பாடப் பிரிவில் மாநில அளவில் மூன்றாம் இடம் பிடித்த கடலூர் மாணவர் அன்பரசன்

கடலூர் :

               "இன்ஜினியரிங் படிக்க விரும்புகிறேன்' என எலக்ட்ரிக்கல் மோட்டார் ரீ வைண்டிங் பாடப் பிரிவில் மாநில அளவில் மூன்றாம் இடம் பிடித்த கடலூர் மாணவர் அன்பரசன் கூறினார். 

                பிளஸ் 2 பொதுத் தேர்வில் எலக்ட்ரிக்கல் மோட்டார் ரீ வைண்டிங் பாடப் பிரிவில் 599 மதிப்பெண் பெற்று (இ.எம்.ஆர்) கடலூர் மஞ்சக்குப்பம் செயின்ட் ஜோசப் மேல்நிலைப் பள்ளி மாணவர் அன்பரசன் மாநில அளவில் மூன்றாம் இடம் பிடித்துள்ளார். 

பாட வாரியாக அவர் பெற்ற மதிப்பெண் விவரம்: 

தமிழ் 142, 
ஆங்கிலம் 163, 
கணிதம் 170, 
எலக்ட்ரிக்கல் மோட்டார் ரீ வைண்டிங் தியரி 199, 
செய்முறை 1 மற்றும் 2ல் தலா 200. 

மாணவர் அன்பரசன் கூறுகையில், 

                 "எனது தந்தை ராஜேந்திரன் குள்ளஞ்சாவடி அடுத்த டி.பாளையம் ஊராட்சி உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். தாய் லட்சுமிகாந்தம். இருவரும் எனக்கு ஊக்கம் அளித்தனர். மாநில அளவில் மூன்றாம் இடம் பிடித்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. இன்ஜினியரிங் படிக்க விரும்புகிறேன். பள்ளி முதல்வர், ஆசிரியர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரும் அளித்த ஒத்துழைப்பே மூன்றாம் இடம் பிடிக்க காரணமாக அமைந்தது' என்றார்.

Read more »

கடலூர் கிருஷ்ணசாமி மெட்ரிக் பள்ளி மாணவர் ஆதித்யன் 1175 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதலிடம்

கடலூர் : 

                 கடலூர் கிருஷ்ணசாமி மெட்ரிக் பள்ளி மாணவர் ஆதித்யன் 1175 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதலிடம் பிடித்தார். 

               கடலூர் கிருஷ்ணசாமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 294 பேர் பிளஸ் 2 அரசுப் பொதுத் தேர்வு எழுதினர். இவர்களில் 291 பேர் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். 

                இப்பள்ளியில் மாணவர் ஆதித்யன் 1175 மதிப்பெண் பெற்று முதலிடமும், மாணவிகள் சுகன்யா 1167, பிரீத்தி 1166 மதிப்பெண் பெற்று முறையே இரண்டு மற்றும் மூன்றாமிடங்களை பிடித்தனர். 

            மாணவர் இந்திரஜித், மாணவிகள் ஜெயதுர்கா, ஜனனி, கிருத்திகா, சுகன்யா ஆகியோர் கணிதம் பாடத்தில் 200க்கு 200 மதிப்பெண் பெற்றனர். மாணவர் சித்தார்த்தன் கணக்குப் பதிவியல் பாடத்தில் 200க்கு 200 மதிப்பெண் பெற்றார். 1150 மதிப்பெண்ணுக்கு மேல் 5 பேரும், 1100க்கு மேல் 27 பேர், 1050க்கு மேல் 45 பேர், 1000த்திற்கு மேல் 101 பேர் மதிப்பெண் பெற்றனர். தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளித் தாளாளர் ராஜேந்திரன், நிர்வாக அதிகாரி சிரீஷா கண்ணன் ஆகியோர் பாராட்டினர்.

Read more »

சிவில் டிராப்ட்ஸ்மேன் பிரிவில் மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்த என்.எல்.சி., பள்ளி மாணவி அனிதா

நெய்வேலி : 

                    "டிவி பார்க்கும் பழக்கம் இல்லாததால் என்னால் படிப்பில் சாதிக்க முடிந்தது' என சிவில் டிராப்ட்ஸ்மேன் பிரிவில் மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்த என்.எல்.சி., பள்ளி மாணவி அனிதா கூறினார்.

                பிளஸ் 2 பொதுத் தேர்வில் டிராப்ட்ஸ்மேன் (சிவில்) பிரிவில் என்.எல்.சி., மேல்நிலைப் பள்ளி மாணவி அனிதா 596 மதிப்பெண் பெற்று மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்துள்ளார். 

பாட வாரியாக அவர் மதிப்பெண் விவரம்:

தமிழ் 181, 
ஆங்கிலம் 171, 
கணிதம் 183, 
தியரி 196, 
செய்முறை ஒன்று மற்றும் இரண்டில் தலா 200 மதிப்பெண். 

மாணவி அனிதா கூறுகையில்,"

                நான் 10ம் வகுப்பு தேர்வில் பள்ளி அளவில் முதல் இடத்தை பிடித்தேன். தற்போது பிளஸ் 2 தேர்வில் மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.எ னது அப்பா கூலித்தொழிலாளி. தினமும் ஏதாவது வேலை கிடைத்தால் தான் உண்டு. எனது பெற்றோர் மட்டுமின்றி பள்ளி ஆசிரியர்கள் எனக்கு மிகவும் உறுதுணையாக இருந்தனர். எனக்கு "டிவி' பார்க்கும் பழக்கம் இல்லாததால் படிப்பில் முழுமையாக கவனம் செலுத்த முடிந்தது. இன்ஜினியரிங் படிக்க வேண்டும் என்பது எனது ஆசை' என்றார்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior