உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜூன் 11, 2011

எஸ்.டி. கொரியர் நிறுவனம் ரூ. 4 ஆயிரம் வழங்க கடலூர் நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு

கடலூர்:

             அரசு ஊழியர் அனுப்பிய கடிதத்தை, உரிய தேதியில் அவரது அலுவலகத்துக்கு பட்டுவாடா செய்யாத கொரியர் நிறுவனம், ரூ. 4 ஆயிரம் நஷ்டஈடு வழங்க, கடலூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது. 

               விருத்தாசலம் வீட்டுவசதி வாரியக் குடியிருப்பில் வசிப்பவர் ராஜசேகரன். சிதம்பரம் தேசிய யானைக்கால் தடுப்புத் திட்ட அலுவலகத்தில் பணிபுரிறார். ராஜசேகரன் விடுப்பு கோரி தனது அலுவலகத்துக்கு, விருத்தாசலத்தில் இயங்கும் எஸ்.டி. கொரியர் நிறுவனம் மூலம் 16-9-2010ல் கடிதம் அனுப்பினார். ஆனால் அக்கடிதம் சிதம்பரத்திóல உள்ள அவரது அலுவலகத்துக்குப் போய்ச் சேரவில்லை. எனவே ராஜசேகரன் விடுப்பு குறித்து, அவரது அலுவலகம் எந்த முடிவும் எடுக்க முடியாமல் போயிற்று. இதுதொடர்பாக ராஜசேகரன் 27-9-2010 அன்று சிதம்பரத்தில் உள்ள எஸ்.டி. கொரியர் நிறுவன அலுவலகத்தை அணுகிக் கேட்டபோது, கடிதங்களை பட்டுவாடா செய்யும் ஊழியர் 27-9-2010 வரை விடுப்பில் உள்ளதால், 16-ம் தேதியக் கடிதம் பட்டுவாடா ஆகாமல் அலுவலகத்திலேயே உள்ளதாகத் தெரிவிக்கப் பட்டது. 

               எனவே அக்கடிதத்தை ராஜசேகரன் பெற்று, தனது அலுவலகத்தில் தாமதமாக ஒப்படைக்க நேர்ந்தது. சேவைக் குறைபாடு குறித்து கொரியர் நிறுவனத்துக்கு கடிதம் அனுப்பியதில் நிறுவனம் சரியான பதில் அளிக்காததால், தமிழ்நாடு நுகர்வோர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் எம்.நிஜாமுதீன் முலமாக, கடலூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் ராஜசேகரன் வழக்குத் தொடர்ந்தார். வழக்கை மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி ஜெயபாலன், உறுப்பினர்கள் கலையரசி ராமதாஸ். பாண்டியன் ஆகியோர் விசாரித்து அண்மையில் தீர்ப்புக் கூறினர். 

             அதில் "கொரியர் நிறுவனம் தபாலை உரிய நபரிடம் ஒப்படைக்காதது சேவைக் குறைபாடு. எனவே எஸ்.டி. கொரியர் நிறுவனத்தின் சென்னை தலைமை அலுவலகம், விருத்தாசலம் மற்றும் சிதம்பரத்தில் உள்ள கொரியர் நிறுவனங்களின் அங்கீகாரம் பெற்றவர்கள் தனியாகவோ, கூட்டாகவோ, ராஜசேகரனுக்கு நஷ்டஈடாக ரூ. 3 ஆயிரத்தை 16-9-2010 முதல் 10 சதம் வட்டியுடனும், வழக்குச் செலவுத் தொகையாக ரூ. 1,000 மும், 2 மாதத்துக்குள் வழங்க வேண்டும்' என்று உத்தரவிட்டனர். இந்த வழக்கில், பாதிக்கப்பட்ட ராஜசேகரன் சார்பில், தமிழ்நாடு நுகர்வோர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் எம்.நிஜாமுதீன் நேரில் ஆஜராகி வாதாடினார். 





Read more »

பிளஸ் 1 பயில அரசு உதவித் தொகை

கடலூர்:

            அரசுப் பள்ளிகளில் 10-ம் வகுப்பு படித்து, அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள், தமிழகத்தின் சிறந்த தனியார் பள்ளிகளில் பயில, உதவித் தொகை பெறுவதற்கு அணுகலாம் என்று, கடலூர் மாவட்ட ஆட்சியர் வி.அமுதவல்லி அறிவித்து உள்ளார். 

ஆட்சியர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: 

               கடலூர் மாவட்ட அரசுப் பள்ளிகளில் படித்து, 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் இச்சலுகையைப் பெறலாம். பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 3 மாணவர்கள், 3 மாணவிகள் மற்றும் மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் 2 மாணவர்கள், 2 மாணவிகள் ஆக மொத்தம் 10 மாணவர்கள் இச்சலுகையைப் பெறுவதற்குத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். 

                    தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்கள், அவர்கள் விரும்பும் தமிழகத்தில் தலைசிறந்த தனியார் மேல்நிலைப் பள்ளிகளில் சேர்ந்து, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பில் பயில நிதி உதவி வழங்கப்படும். இத்திட்டத்தில் உதவிபெற விரும்பும் மாணவர்களின் பெற்றோர் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். இத்திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்படும் மாணவருக்கு, ஆண்டுக்கு ரூ.28 ஆயிரத்துக்கு மிகாமல் 2 ஆண்டுகளுக்கு, மொத்தம் ரூ.56 ஆயிரம் நிதிஉதவி அளிக்கப்படும். தகுதி உள்ள மாணவ மாணவியர் கடலூர் மாவட்ட பிற்பட்டோர் நல அலுவரை அணுகுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று அந்த செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது



.

Read more »

கடலூர் அருகே பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து 42 பேர் படு காயம்

 
கடலூர்:
 
            சென்னை கோயம்பேட்டில் இருந்து வேளாங்கண்ணிக்கு நேற்று இரவு 11.30 மணிக்கு ஆம்னி பஸ் ஒன்று புறப்பட்டது. இந்த பஸ் நேற்று  அதிகாலை 3.30 மணிக்கு கடலூர் அருகே பூண்டியாங்குப்பம் என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தது. அப்போது பஸ் திடீரென்று நிலை தடுமாறி அருகில் உள்ள மரத்தில் மோதி 10 அடி பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது.
 
               பஸ்சில் இருந்த பயணிகள் அய்யோ அம்மா என்று அலறினார்கள். அலறல் சத்தம் கேட்டு அருகில் உள்ள கிராம மக்கள் ஓடிவந்தனர். பஸ் கண்ணாடிகளை உடைத்து பஸ்சுக்குள் சிக்கி இருந்த பயணிகளை மீட்டனர். தகவல் அறிந்து புதுசத்திரம் போலீசாரும், தீயணைப்பு படையினரும் அங்கு விரைந்து வந்தனர். பஸ்சில் தீப்பிடித்து பெரிய விபத்து ஏற்படாமல் இருக்க பஸ் மீது தீயணைப்பு படையினர் தண்ணீரை பீய்ச்சியடித்தனர். இந்த விபத்தில் காரைக்கால் சாத்துபடுகையை சேர்ந்த டிரைவர் மோகன், சீர்காழியை சேர்ந்த மாற்று டிரைவர் ராதாகிருஷ்ணன் உள்பட 42 பேர் காயம் அடைந்தனர்.
 
            படுகாயம் அடைந்த டிரைவர்கள் கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். காயம் அடைந்த மற்ற பயணிகள் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இந்த சம்பவம் குறித்து புதுசத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
 
 
 
 

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior