உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், செப்டம்பர் 14, 2011

சிதம்பரம் நடராஜர் கோவில் அருகே திருவாடுதுறை ஆதினமடத்தில் தூக்கில் காவலாளி பிணம்


 http://mmimages.mmnews.in/Articles/2011/Sep/99cf8674-00b7-443e-8102-06659624c8f1_S_secvpf.gif
 
சிதம்பரம்:

              சிதம்பரம் நடராஜர் கோவில் அருகே உள்ள மாலை கட்டி தெருவில் திருவாடுதுறை ஆதீன மடம் உள்ளது. இந்த மடத்தின் மேலாளர் கார்த்திகேயன். சிதம்பரம் எம்.கே.தோட்டத்தை சேர்ந்த கண்ணன் (வயது 45) காவலாளியாக இருந்து வந்தார். 2 பேரும் அந்த மடத்திலேயே தங்கி வேலை செய்து வந்தனர்.  

             காவலாளி கண்ணன் தினமும் அதிகாலையில் எழுந்து அந்த மடத்தில் உள்ள மெய்கண்ட தேவநாயனார் கோவில் பூஜைக்கு தேவையான மலர்களை மடத்தில் உள்ள நந்தவனத்தில் இருந்து பறித்து வருவது வழக்கம்.   இன்று காலையில் வெகுநேரமாகியும் கண்ணனை காணவில்லை. எனவே மடத்தின் மேலாளர் கார்த்திகேயன் காவலாளியை தேடி நந்தவனத்துக்கு சென்றபோது அங்கு உள்ள மரத்தில் கண்ணன் வேட்டியால் தூக்குப்போட்ட நிலையில் பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

             இதுகுறித்து சிதம்பரம் டவுன் போலீசில் கார்த்திகேயன் புகார் செய்தார். உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் மற்றும் போலீசார் திருவாடுதுறை ஆதீன மடத்துக்கு விரைந்து சென்றனர். இடுப்பில் வேட்டியை மடித்துக் கட்டிய நிலையில் மரத்தில் பிணமாக தொங்கி கொண்டிருந்த கண்ணனின் உடலை மீட்டனர்.  பின்னர் பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அந்த உடலை அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர். 
 
அதில் கிடைத்த தகவல்கள் :-   
 
                    தூக்கில் பிணமாக தொங்கிய கண்ணனின் சொந்த ஊர் நாகை மாவட்டம் தர்காசி. திருமணமாகாத இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு தனது சகோதரியுடன் சிதம்பரம் எம்.கே.தோட்டத்தில் குடியேறினார். கண்ணனுக்கு திருவாடுதுறை ஆதீனம் மடத்தில் உடனடியாக காவலாளி வேலை கிடைத்துள்ளது.

                   தினமும் தனக்கு அளித்த வேலைகளை அவர் செய்து பொறுப்பாக வந்துள்ளார். நேற்று முன்தினம் அந்த மடத்தில் நிறுத்தப்பட்டிருந்த மேலாளர் காத்திகேயனுக்கு சொந்தமான மோட்டார் சைக்கிள் திருட்டுப்போனது. இதுபற்றி சிதம்பரம் நகர போலீசில் புகார் செய்யப்பட்டது.   இதுபற்றி கார்த்திகேயன் கேட்டபோது, அதே பகுதியை சேர்ந்த பால் வியாபாரி ராமர் இந்த மோட்டார் சைக்கிளை எடுத்ததை பார்த்ததாக கண்ணன் கூறியுள்ளார்.

                இதுபற்றி ராமரிடம் கார்த்திகேயன் கேட்டபோது தான் திருடவில்லை என அவர் மறுத்து விட்டார். அதன் பிறகு நேற்று மாலை கண்ணனையும், மேலாளர் கார்த்திக்கேயனையும், பால்வியாபாரி ராமர் திட்டியுள்ளார். இந்த நிலையில் இன்று காலையில் ஆதினமடத்தில் உள்ள நந்தவனத்தில் உள்ள மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்ணன் பிணமாக கிடந்துள்ளார். எனவே கண்ணன் சாவுக்கான உண்மையான காரணம் என்ன? அவரை யாரேனும் அடித்து தூக்கில் தொங்கவிட்டனரா? அல்லது போலீஸ் விசாரணைக்கு பயந்து கண்ணன் தற்கொலை செய்து கொண்டாரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
 
 
 
 
 
 
 
 
 

Read more »

நாவரசு கொலை வழக்கில் ஜான் டேவிட்டை விடுதலை செய்யக்கோரிய மனு தள்ளுபடி

             சிதம்பரம் அண்ணாமலை மருத்துவ பல்கலைக்கழகத்தில் ஜான்டேவிட் மருத்துவக் கல்வி பயின்றார். அவருடன் சென்னை பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரின் மகன் நாவரசு மருத்துவக் கல்வி படித்தார்.

                   இந்த நிலையில் நாவரசு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஜான் டேவிட்டுக்கு ஆயுள் தண்டனை விதித்து 11.3.98 அன்று கடலூர் செசன்சு கோர்ட்டு உத்தரவிட்டது. செசன்சு கோர்ட்டு உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் ஜான் டேவிட் மேல்முறையீடு செய்தார்.
இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, ஜான் டேவிட்டை 5.10.01 அன்று விடுதலை செய்து உத்தரவிட்டது. பின்னர் போலீஸ் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

           அந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, செசன்சு கோர்ட்டு பிறப்பித்த ஆயுள் தண்டனை தீர்ப்பை உறுதி செய்து 20.4.11 அன்று உத்தரவிட்டது. தற்போது ஜான் டேவிட் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் சென்னை ஐகோர்ட்டில் அவரது தாயார் எஸ்தர் ஆள்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அதில், ஜான் டேவிட்டுக்கு ஆயுள் தண்டனை விதித்து செசன்சு கோர்ட்டு தீர்ப்பளித்தபோது, அவரது வயதை கருதாமல் பொது சிறையில் அடைத்துவிட்டனர்.

               சிறுவராக இருக்கும் ஒருவரை சிறுவர் சீர்திருத்தச் சட்டப்படி பொது சிறையில் அடைக்கக் கூடாது. சிறுவர் இல்லங்களில்தான் வைக்க வேண்டும். 21 வயதுக்கும் மேற்பட்டவரைத்தான் பொது ஜெயிலில் அடைக்க முடியும்.
எனவே ஜான் டேவிட்டை பொது சிறையில் அடைத்தது சிறுவர் சீர்திருத்தச் சட்டத்தை மீறியதாகும். சட்டவிரோத காவலில் அவரை போலீசார் அடைத்திருந்தனர். எனவே இந்த சட்டவிரோத நடவடிக்கைக்காக ஜான் டேவிட்டை விடுதலை செய்து உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

                 இந்த மனுவை நீதிபதிகள் சி.நாகப்பன், எம்.சத்தியநாராயணன் ஆகியோர் விசாரித்தனர். அப்போது, இந்த பிரச்சினை தொடர்பாக சம்பந்தப்பட்ட கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்ய இருப்பதால், மனுவை திரும்பப் பெறுவதாக எஸ்தர் தரப்பில் வக்கீல் குறிப்பிட்டார். மனு திரும்பப் பெறப்பட்டதை அடுத்து மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.














Read more »

அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 1025 கல்லூரி உதவி பேராசிரியர்கள் நேரடியாக நியமனம்

        அரசு கல்லூரிகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப 1025 உதவி பேராசிரியர்கள் நேரடியாக நியமனம் செய்ய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு உயர் கல்வித்துறை செயலாளர் கண்ணன் வெளியிட்டுள்ள அரசாணையில்,

             ’’உயர் கல்வித்துறை அமைச்சர் தமிழ்நாடு சட்டமன்றத்தில் உயர்கல்வி மானிய கோரிக்கையின்போது 2011-2012-ம் ஆண்டில் அரசு கலை அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 1025 உதவி பேராசிரியர் காலிப்பணியிடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்பப்படும் என்ற அறிவிப்பினை வெளியிட்டார். அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள உதவி பேராசிரியர் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நிரப்பப்பட்டு வருகின்றன.

                கல்லூரி கல்வி இயக்குனரின் கருத்துருவினை அரசு கவனமுடன் பரிசீலனை செய்தது. நீதிமன்றத்தில் வழக்கு காரணமாக நிறுத்திவைக்கப்பட்ட 10 பணியிடங்களை தவிர்த்து 1025 உதவி பேராசிரியர் பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்பிடலாம் என்று ஆணையிடப்படுகிறது. தேவையான விவரங்களை கல்லூரி கல்வி இயக்குனரிடம் பெற்று நிரப்புவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கும்படி ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் கேட்டுக்கொள்ளப்படுகிறார்’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.










Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior