உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், செப்டம்பர் 14, 2011

நெல்லிக்குப்பம் தீ விபத்தில் வீடு இழந்தவர்களுக்கு தே.மு.தி.க. சார்பில் நிவாரண உதவி: எம்.எல்.ஏ. சிவக்கொழுந்து வழங்கினார்


 http://mmimages.mmnews.in/Articles/2011/Sep/9682124e-07e2-4cf5-92ff-a5093d8765dd_S_secvpf.gif
நெல்லிக்குப்பம்:

          நெல்லிக்குப்பம் மவுலி அப்துல் ரஹ்மான் வீதியை சேர்ந்த முகமதுகான் என்பவரது வீடு தீப்பிடித்து எரிந்தது. மேலும் சரபுதீன், முகமதுகனி, முகமது அனீபா ஆகியோரின் வீடுகளும் எரிந்து சாம்பலானது. இதில் ரூ.2 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்த சாம்பலானது.
 
               இதுபற்றி தகவல் அறிந்ததும் சிவக்கொழுந்து எம்.எல்.ஏ. தீ விபத்து நடந்த இடத்துக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார். இதன்பின் தே.மு.தி.க. சார்பில் தீவிபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தலா ஆயிரம் ரூபாய், வேட்டி-சேலை, அரிசி ஆகியவைகளை சிவக்கொழுந்து எம்.எல்.ஏ. வழங்கினார். அவருடன் நகர செயலாளர் கஜேந்திரன், நகர பொருளாளர் நாகராஜன், நகர மாணவர் அணி செயலாளர் இசைவேந்தன், த.மு.மு.க. நகர தலைவர் அப்துல் ரஹீம், உசேன், ராஜாஹாஜா மொய்தீன், முகமது அனீப், அப்துல் ரஹ்மான், முகமது ஜிபேல், இஸ்மாயில் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

Read more »

சிதம்பரம் தில்லைக்காளியம்மன் கோவில் அன்னதான திட்டம்: அமைச்சர் செல்விராமஜெயம் தொடங்கி வைத்தார்

சிதம்பரம்:
 
             சிதம்பரம் தில்லைக் காளியம்மன் கோவிலில் தமிழக அரசின் அன்னதான திட்டத்தை சமூக நலத்துறை அமைச்சர் செல்விராம ஜெயம் தொடங்கி வைத்தார்.   கடந்த 1992-ல் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது கோயிலுக்கு வரும் பக்தர்களின் நலன் கருதி சென்னை மைலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் அன்னதான திட்டத்தை தொடங்கினார்.

                   பின்னர் இத்திட்டம் மாநில அளவில் 306 கோயில்களுக்கு விரிவுப் படுத்தப்பட்டது, தற்போது மேலும் 106 கோயில்களில் விரிவுபடுத்தப்படும் என நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது, அதன்படி தமிழகத்தில் அன்னதான திட்டம் தொடங்கப்பட்டது,   கடலூர் மாவட்டம் சிதம்பரம் தில்லைக்காளியம்மன் கோயிலில் விரிவுபடுத்தப்பட்ட அன்னதான திட்டத்தை தமிழக சமூகநலத்துறை அமைச்சர் செல்விராமஜெயம் தொடங்கிவைத்தார், இந்து அறநிலைய இணை ஆணையர் ஜகநாதன், செயல் அலுவலர் சிவக்குமார், கட்சி நிர்வாகிகள் ராபர்ட், மருதவாணன், அமைச்சரின் உதவியாளர் ஜெயசீலன், உள்ளீட்டோர் பங்கேற்றனர்.

             இந்நிகழ்ச்சியில் சுமார் 300 பெருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது, தில்லைக் காளியம்மன் கோயிலில் தினந்தோறும் திங்கள்கிழமை முதல் 100 பேருக்கு அன்னதானம் வழங்கப்படும் என செயல் அலுவலர் சிவக்குமார் தெரிவித்தார். 
 
 
 
 
 
 
 
 

Read more »

சிதம்பரம் நடராஜர் கோவில் அருகே திருவாடுதுறை ஆதினமடத்தில் தூக்கில் காவலாளி பிணம்


 http://mmimages.mmnews.in/Articles/2011/Sep/99cf8674-00b7-443e-8102-06659624c8f1_S_secvpf.gif
 
சிதம்பரம்:

              சிதம்பரம் நடராஜர் கோவில் அருகே உள்ள மாலை கட்டி தெருவில் திருவாடுதுறை ஆதீன மடம் உள்ளது. இந்த மடத்தின் மேலாளர் கார்த்திகேயன். சிதம்பரம் எம்.கே.தோட்டத்தை சேர்ந்த கண்ணன் (வயது 45) காவலாளியாக இருந்து வந்தார். 2 பேரும் அந்த மடத்திலேயே தங்கி வேலை செய்து வந்தனர்.  

             காவலாளி கண்ணன் தினமும் அதிகாலையில் எழுந்து அந்த மடத்தில் உள்ள மெய்கண்ட தேவநாயனார் கோவில் பூஜைக்கு தேவையான மலர்களை மடத்தில் உள்ள நந்தவனத்தில் இருந்து பறித்து வருவது வழக்கம்.   இன்று காலையில் வெகுநேரமாகியும் கண்ணனை காணவில்லை. எனவே மடத்தின் மேலாளர் கார்த்திகேயன் காவலாளியை தேடி நந்தவனத்துக்கு சென்றபோது அங்கு உள்ள மரத்தில் கண்ணன் வேட்டியால் தூக்குப்போட்ட நிலையில் பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

             இதுகுறித்து சிதம்பரம் டவுன் போலீசில் கார்த்திகேயன் புகார் செய்தார். உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் மற்றும் போலீசார் திருவாடுதுறை ஆதீன மடத்துக்கு விரைந்து சென்றனர். இடுப்பில் வேட்டியை மடித்துக் கட்டிய நிலையில் மரத்தில் பிணமாக தொங்கி கொண்டிருந்த கண்ணனின் உடலை மீட்டனர்.  பின்னர் பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அந்த உடலை அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர். 
 
அதில் கிடைத்த தகவல்கள் :-   
 
                    தூக்கில் பிணமாக தொங்கிய கண்ணனின் சொந்த ஊர் நாகை மாவட்டம் தர்காசி. திருமணமாகாத இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு தனது சகோதரியுடன் சிதம்பரம் எம்.கே.தோட்டத்தில் குடியேறினார். கண்ணனுக்கு திருவாடுதுறை ஆதீனம் மடத்தில் உடனடியாக காவலாளி வேலை கிடைத்துள்ளது.

                   தினமும் தனக்கு அளித்த வேலைகளை அவர் செய்து பொறுப்பாக வந்துள்ளார். நேற்று முன்தினம் அந்த மடத்தில் நிறுத்தப்பட்டிருந்த மேலாளர் காத்திகேயனுக்கு சொந்தமான மோட்டார் சைக்கிள் திருட்டுப்போனது. இதுபற்றி சிதம்பரம் நகர போலீசில் புகார் செய்யப்பட்டது.   இதுபற்றி கார்த்திகேயன் கேட்டபோது, அதே பகுதியை சேர்ந்த பால் வியாபாரி ராமர் இந்த மோட்டார் சைக்கிளை எடுத்ததை பார்த்ததாக கண்ணன் கூறியுள்ளார்.

                இதுபற்றி ராமரிடம் கார்த்திகேயன் கேட்டபோது தான் திருடவில்லை என அவர் மறுத்து விட்டார். அதன் பிறகு நேற்று மாலை கண்ணனையும், மேலாளர் கார்த்திக்கேயனையும், பால்வியாபாரி ராமர் திட்டியுள்ளார். இந்த நிலையில் இன்று காலையில் ஆதினமடத்தில் உள்ள நந்தவனத்தில் உள்ள மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்ணன் பிணமாக கிடந்துள்ளார். எனவே கண்ணன் சாவுக்கான உண்மையான காரணம் என்ன? அவரை யாரேனும் அடித்து தூக்கில் தொங்கவிட்டனரா? அல்லது போலீஸ் விசாரணைக்கு பயந்து கண்ணன் தற்கொலை செய்து கொண்டாரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
 
 
 
 
 
 
 
 
 

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior