உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், நவம்பர் 03, 2011

இந்திரா காந்தி நினைவு நாள்: கடலூரில் மாணவ, மாணவியர் பங்கேற்ற ஊர்வலம்

கடலூர்:

              முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு கடலூரில் மாணவ, மாணவியர் பங்கேற்ற ஊர்வலம் நடந்தது. 

               மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கிய ஊர்வலத்தை ஆட்சியர் வே.அமுதவல்லி தொடங்கி வைத்தார்.  மாவட்ட வருவாய் அலுவலர் சி.ராஜேந்திரன் தலைமை வகித்தார். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் செ.அமுதவல்லி, மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பொ.முத்தையா, நாட்டு நலப்பணித்திட்ட தொடர்பு அலுவலர் திருமுகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  ஊர்வலம் முக்கிய சாலைகள் வழியாக சென்று நகராட்சி அலுவலகத்தில் நிறைவடைந்தது. 

ரத்ததான முகாம்:

              இந்திரா காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு கடலூர் செம்மண்டலம் அரசு தொழிற்பயிற்சி நிலைய மாணவர்கள், ஆசிரியர்கள் சார்பில் ரத்ததான முகாம், கடலூர் அரசு மருத்துவமனையில் நடத்தப்பட்டது.  தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் ஹார்லிக் செல்லதுரை தலைமை வகித்தார். 200 பேர் ரத்த தானம் செய்தனர். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் டி.மகேந்திரவர்மன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

காங்கிரஸ்: 

                  காங்கிரஸ் கட்சி சார்பில் திங்கள்கிழமை இந்திரா காந்தி நினைவு தினம் கடைபிடிக்கப் பட்டது. மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் இந்திரா காந்தி படம் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது.  மாநில காங்கிரஸ் துணைத் தலைவர் முன்னாள் எம்.எல்.ஏ.  பி.ஆர்.எஸ். வெங்கடேசன் மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலை விஜயகுமார்,  அருள் பிரகாசம், சுப்பிரமணியன், இளைஞர் காங்கிரஸ் சட்டப் பேரவை தொகுதி தலைவர் ராமராஜ் உள்ளிட்ட பலர் இந்திரா காந்தி படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.









Read more »

கடலூரில் ரூ.1.61 லட்சம் நலத்திட்ட உதவிகள்

கடலூர்:

           கடலூரில் திங்கள்கிழமை நடந்த மக்கள் குறை கேட்கும் கூட்டத்தில், ரூ. 1.61 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை, மாவட்ட ஆட்சியர் வே.அமுதவல்லி வழங்கினார். 10 பேருக்கு தலா ரூ. 2,749 மதிப்பிலான இலவச தையல் இயந்திரங்கள், 5 பேருக்கு தலா ரூ. 2,880 மதிப்பிலான இஸ்திரிப் பெட்டிகள், மழையினால் சுவர் இடிந்து இறந்துபோன மாணவர் கிஷோர்ராஜுவின் (6) குடும்பத்தாருக்கு, முதல் அமைச்சர் நிவாரண நிதியில் இருந்து ரூ. 1 லட்சம் வழங்கப்பட்டது.













Read more »

கடலூர் நாணமேட்டில் சுவர் இடிந்து விழுந்து பெண் சாவு

http://mmimages.mmnews.in/Articles/2011/Nov/6de0c4f2-eb57-46b1-9b33-e327b3a814e4_S_secvpf.gif



கடலூர்:

          கடலூர் அருகே உள்ள நாணமேடு பகுதியை சேர்ந்தவர் சாமிதுரை (வயது 50). கூலித்தொழி லாளி. இவரது மனைவி தையல்நாயகி (45). இவர்களுக்கு 3 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். சாமிதுரை நேற்று இரவு குடும்பத்துடன் வீட்டில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார்.

             நள்ளிரவு பெய்த மழையில் அவரது வீட்டின் மதில் சுவர் திடீரென்று இடிந்து விழுந்தது. இதில் தையல்நாயகி படுகாயம் அடைந்தார். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அவரை மீட்டு புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக செத்தார்.

           இதுகுறித்து ரெட்டிச்சாவடி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.   கடலூர் அருகே சுவர் இடிந்து விழுந்து மற்றொரு பெண் படுகாயம் அடைந்தார். கடலூர் ரெட்டிச்சாவடி அருகே உள்ள திருப்பனாம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் கோபால். இவரது மனைவி அய்யம்மாள் (55). நேற்று இரவு அந்த பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக இவர்களது வீட்டின் சுவரும் இடிந்து விழுந்தது.

              இதில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த அய்யம்மாள் படுகாயம் அடைந்தார். உடனடியாக அவரை கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து துக்கணாம் பாக்கம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior