உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், பிப்ரவரி 21, 2012

ரியல் தொண்டு நிறுவனம் சார்பில் 1,500 மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள்

கடலூர் :
 
       புயலில் பாதிக்கப்பட்ட 1,500 மாணவர்களுக்கு ரியல் தொண்டு நிறுவனம் கல்வி உபகரணங்கள் வழங்கியது.
 
       "தானே' புயலில் பாதிக்கப்பட்ட கடலூர், பண்ருட்டி ஒன்றியங்களில் உள்ள அரசடிக்குப்பம், கீரப்பாளையம், வெள்ளக்கரை, சாத்தங்குப்பம், ராமாபுரம், அழகப்பசமுத்திரம், சிறுதொண்டமாதேவி, அ.புதூர், வேகாகொல்லை, காட்டு வேகாக்கொல்லை, வெங்கடாம்பேட்டை, ஆயிப்பேட்டை, மதனகோபாலபுரம், தியாகவல்லி, அம்பேத்கர் நகர், நொச்சிக்காடு கிராமங்களைச் சேர்ந்த 1,500 மாணவ, மாணவிகளுக்கு ரியல் தொண்டு நிறுவனம் சார்பில் நோட்டு, புத்தகம், ஸ்கூல் பேக், ஜாமெண்ட்ரி பாக்ஸ் உள்ளிட்ட கல்வி உபகரணங்களும் மற்றும் அங்கன்வாடி செல்லும் 500 குழந்தைகளுக்கு ஜான்ஸ் பேபி கிட், பிஸ்கட் உள்ளிட்ட பொருட்களும் வழங்கப்பட்டன.
 
         நிகழ்ச்சியில் ஜெர்மனைச் சேர்ந்த தன்னார்வலர்கள் ரோன்ஜா சாம்ஸ், ஜோஹனா டோல், ஊராட்சித் தலைவர்கள், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள், ரியல் நிறுவன திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் குமார், கஸ்தூரி, ராமு, ஜான், பாக்கியலட்சுமி, ராஜலட்சுமி உட்பட பலர் பங்கேற்றனர்.
 
 
 
 
 
 
 
 
 
 

Read more »

திங்கள், பிப்ரவரி 20, 2012

கடலூர் மாவட்டத்தில் மொபைல் போன் கலாசாரத்தால் சீரழியும் மாணவ சமுதாயம்

கடலூர் : 

        எதிர்கால இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரங்களாகத் திகழ வேண்டிய இன்றைய மாணவ சமுதாயம் மொபைல் போன் கலாசாரத்தா சீரழிந்து வருவதை தடுத்திட பள்ளிகளில் மொபைல் போன்களை பயன்படுத்துவதை தடை செய்ய வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டுள்ளது.
 

       நாட்டின் முன்னேற்றம் என்பது இளைஞர்களை சார்ந்தே உள்ளது. இதனை கருத்தி கொண்டு இளைஞர்களை நவழிப்படுத்தும் நோக்கி மாணவ, மாணவிகளுக்கு கவி கட்டாயமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இளம் வயதி பள்ளிக்குச் செலும் மாணவ, மாணவிகளுக்கு கவியோடு ஒழுக்கம், தன்னம்பிக்கை உள்ளிட்ட நற்பண்புகளும் போதிக்கப்படுகிறது. ஒழுக்கம் மிகுந்த சமுதாயத்தை உருவாக்கி வந்த கவிச் சாலைகள் இன்று பவேறு காரணங்களா மாணவர்களை தேர்வி அதிக மதிப்பெண் எடுக்க வைக்கும் தொழிற்சாலையாக இயங்கி வருகிறது.
 

      இதன் காரணமாக ஆசிரியர், மாணவர்களுக்கு இடையேயான உறவு மெல்ல, மெல்ல மறைந்து வருவதா இன்றைய மாணவ சமுதாயத்தி ஒழுங்கீனச் செயகள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக தகவ தொடர்பு சாதனமாக "மொபை போன்' வருகைக்கு பின் மாணவ சமுதாயம் சீரழிந்து வருவது அதிகரித்து வருகிறது. இதனை கருத்தி கொண்டே கடந்த 2009ம் ஆண்டு அப்போதைய பள்ளிக் கவித்துறை இயக்குனர் பெருமாள்சாமி, பள்ளிகளி ஆசிரியர் உள்ளிட்ட எவரும் மொபை போன்களை பயன்படுத்தக் கூடாது என உத்தரவிட்டார்.


      இருப்பினும் இந்த உத்தரவு பெரும்பாலான பள்ளிகளி நடைமுறைப்படுத்தவிலை. இதன் காரணமாக மாணவ, மாணவிகள் பலர் மொபை போன்களை பள்ளிக்கு எடுத்து வருவதோடு மட்டுமலாம வகுப்பறையிலேயே தனது சக நண்பர்களோடு வீடியோ கேம் விளையாடுவது.
பிற நண்பர்களுக்கு எஸ்.எம்.எஸ்., என்கிற குறுந்தகவ அனுப்புவது. சக தோழிகளிடம் வெகு நேரம் போனி உரையாடுவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளனர். வியாபார போட்டியை சமாளிக்க மொபை போன் நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு அறிவிக்கும் சிறப்பு சலுகைகள் மாணவர்களுக்கு வசதியாக அமைகிறது. தற்போது இணையதளம் வசதி கொண்டுள்ள மொபை போன்களி இணையதள இணைப்பு பெறுவதற்கான "ரீசார்ஜ்' கூப்பன் 5 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.  இந்த கூப்பனை வாங்கி சார்ஜ் செய்தா 24 மணி நேரத்திற்கு இணையதள இணைப்பு கிடைக்கிறது.

           இவ்வாறு பல மாணவர்கள், தங்களது மொபை போன்களி இணையதள இணைப்பைப் பெற்று பள்ளிகளி தங்களது சக நண்பர்களுடன் கூடி ஆபாச படங்களை பார்த்து மகிழ்கின்றனர். இதனைத் தடுக்க முயலும் ஆசிரியர்கள், பல்வேறு வகையில் மிரட்டப்படுவது அல்லது ஆசிரியர்கள் மீது ஏதேனும் ஒரு குற்றச்சாட்டை சுமத்தி அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போராட்டம் நடத்துவது போன்ற செயகளி ஈடுபடுவதா ஆசிரியர்களும் நமக்கேன் வம்பு என ஒதுங்கிச் செவதா மாணவ சமுதாயம் தவறான பாதைக்கு தள்ளப்பட்டு வருகின்றனர்.
 

      இதனைத் தடுத்திட பள்ளிகளி மொபை போன்களை பயன்படுத்துவதை முற்றிலுமாக தடை செய்ய வேண்டும். அதனையும் மீறி மாணவர்கள் மொபை போன் கொண்டு வந்தா, அதனை பறிமுத செய்து அவரது பெற்றோரை வரவழைத்து அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும். இது தொடர்பாக பள்ளி நிர்வாகங்கள் பெற்றோர்களை நேரி அழைத்து கூட்டம் நடத்தி மாணவர்களிடம் மொபை போன்களை கொடுத்து அனுப்ப வேண்டாம் என அறிவுறுத்த நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும்.











Read more »

ஞாயிறு, பிப்ரவரி 19, 2012

விருத்தாசலம் எருமனூர் கிராமத்தில் திடீர் சாலை மறியல்

 http://mmimages.mmnews.in/Articles/2012/Feb/607a72e0-2c97-4afa-bf73-58c9f20250b9_S_secvpf.gif
 
விருத்தாசலம்:
 
        விருத்தாசலம் அருகே எருமனூர் கிராமத்தில் அரசு வழங்கும் இலவச ஆடு-மாடுகளுக்கு பயனாளிகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது. அப்போது பாரபட்சமாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. நில மற்ற ஏழைகளை புறக்கணித்து விட்டு வசதி படைத்தவர்களுக்கு ஆடு, மாடுகள் வழங்க கணக்கெடுக்கப்பட்டதாக தெரிகிறது. 
 
       இதனால் ஆத்திரம் அடைந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேற்று எருமனூரில் விருத்தாசலம்- முகாசாபடூர் மெயின்ரோட்டில் நேற்று இரவு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் வீருத்தாசலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுப்பையா, மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் விருத்தாசலம் தாசில்தார் பிரபாகரனும் சம்பவ இடத்துக்கு சென்று மறியலில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். கால்நடைத் துறை அதிகாரிகளிடம் பேசி முறையாக கணக்கெடுப்பு நடத்த நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். அதனை ஏற்று கிராம மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். சுமார் 1 1/2 மணி நேரம் நடந்த இந்த சாலை மறியலால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 
 
 
 
 
 
 
 
 
 

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior