உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




ஞாயிறு, மார்ச் 04, 2012

தமிழகத்தில் விளையாட்டில் சிறந்த மாணவர்களுக்கு ரூ.1.94 கோடி உதவித் தொகை அறிவிப்பு

கடலூர்:

         தமிழகத்தில் விளையாட்டில் சிறந்த மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்க அரசு ரூ. 1.94 கோடி ஒதுக்கி இருப்பதாக கடலூர் மாவட்ட விளையாட்டு அலுவலர் கே.திருமுகம் தெரிவித்தார்.  

 
         கடலூர் கல்வி மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டி கடலூர் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் வியாழக்கிழமை நடந்தது. இதில் 6, 7, 8-ம் வகுப்புகளில் பயிலும், மாணவ மாணவிகள் 750 பேர் பங்கேற்றனர். மாணவ மாணவிகளுக்கு தனித்தனியாக 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன.  இதில் தேர்ந்தெடுக்கப்படும் முதல் இரண்டு இடங்களைப் பிடித்தவர்களும், விருத்தாசலம் கல்வி மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி 29-ம் தேதி நடந்த போட்டிகளில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்தவர்களும், திருவண்ணாமலையில் நடைபெற இருக்கும், மண்டல விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்வார்கள்.  

         கடலூரில் வியாழக்கிழமை நடந்த விளையாட்டுப் போட்டிகள் பரிசளிப்பு விழாவுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலர் கே.திருமுகம் தலைமை வகித்தார். வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகளை கடலூர் மாவட்டக் கல்வி அலுவலர் செ.சாந்தி பரிசுகளை வழங்கி பாராட்டினார்.  

விழாவில், மாவட்ட விளையாட்டு அலுவலர் திருமுகம் பேசுகையில், 

         திருவண்ணாமலையில் நடைபெற இருக்கும் போட்டிகளில் வெற்றிபெற்று, முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் மாணவ மாணவிகளுக்கு, தலா ரூ. 6 ஆயிரம் ரொக்கப் பரிசு வழங்கப்படும். மேலும் இவர்கள் விளையாட்டு விடுதிகளில் தங்கி இலவசமாக மேல்படிப்பு பயிலவும் அரசு உதவி செய்கிறது.  விளையாட்டில் சிறந்த மாணவர்களைத் தேர்வு செய்யவே, இப் போட்டி மாநிலம் முழுவதும் நடத்தப் படுகிறது. இவர்களுக்கு பரிசு, உதவித் தொகை வழங்குவதற்காக, வரும் கல்வியாண்டுக்கு மட்டும் தமிழக அரசு ரூ.1.94 கோடி நிதி ஒதுக்கி இருக்கிறது என்றார்.







Read more »

சனி, மார்ச் 03, 2012

கடலூர் மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வு நுழைவுச் சீட்டுகள் தலைமை ஆசிரியர்களிடம் ஒப்படைப்பு

கடலூர்:

          கடலூர் மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வு எழுத இருக்கும் மாணவர்களுக்கான நுழைவுச் சீட்டுகள் சம்மந்தப்பட்ட பள்ளித் தலைமை ஆசிரியர்களிடம் வெள்ளிக்கிழமை ஒப்படைக்கப்பட்டன.  

            கடலூர் மாவட்டத்தில் பிளஸ்-2 மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வுகள் ஏற்கனவே முடிவடைந்து விட்டன. எழுத்துத் தேர்வுகள் வரும் 8-ம் தேதி தொடங்கி 30-ம் தேதி முடிவடைகிறது.  கடலூர் மாவட்டத்தில் 26,853 பேர் பிளஸ்-2 பொதுத் தேர்வு எழுதுகிறார்கள். இவர்களில் 12,835 பேர் மாணவர்கள், 14,018 பேர் மாணவிகள். இவர்களுக்கு புகைப்படம் அச்சிடப்பட்ட நுழைவுச் சீட்டுகள் கடலூர் மாவட்டத்துக்கு வந்து சேர்ந்து விட்டன. மாவட்டத்திóல் 65 மையங்களில் பிளஸ்-2 தேர்வு நடக்கிறது.  

             புனித அன்னாள் மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடந்த மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூட்டத்தில், சம்மந்தப்பட்ட பள்ளித் தலைமை ஆசிரியர்களிடம், மாணவர்களுக்கான நுழைவுச் சீட்டுகளை, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஜோசப் அந்தோனிராஜ் வழங்கினார்.  ÷இந்த ஆண்டு முதல்முறையாக மாணவர்களுக்கான தேர்வுக்கூட நுழைவுச் சீட்டில் மாணவர்களின் புகைப்படம் ஒட்டப்படுவதற்குப் பதில், நுழைவுச் சீட்டிலேயே அச்சிடப்பட்டு அரசுத் தேர்வுகள் துறை இயக்குநகரம் மூலம் வழங்கப்பட்டுள்ளது. இந்த நுழைவுச் சீட்டில் தேர்வு எழுதும் மாணவரின் புகைப்படம் அச்சிடப்பட்டு இருப்பதுடன், அவர்கள் எழுத இருக்கும் தேர்வுகள், குறியீட்டு எண்களுடன் தேதி வாரியாக அச்சிடப்பட்டு உள்ளது. இதனால் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதும் முறைகேடு, தடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

            கடலூர் மாவட்டத்துக்கான பிளஸ்-2 தேர்வு வினாத் தாள்கள் கடலூர் புனித அன்னாள் மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட, 7 மையங்களில் சேகரித்து போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. தேர்வு நடைபெறும் அன்று, தேர்வு நடத்தும் அலுவலர்கள் வந்து, வினாத்தாள்களைப் பெற்றுச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஜோசப் அந்தோனிராஜ் தெரிவித்தார்.  ÷பிளஸ்-2 தேர்வுகளை முறைகேடுகள் இன்றி நடத்தி முடிக்கவும், தவறிழைக்கும மாணவர்களைக் கண்டுபிடிக்கவும் கடலூர் மாவட்டத்தில் 30 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இவற்றில் 5 பறக்கும் படைகள் கல்வித்துறை அதிகாரிகள் தலைமையில் இயங்கும். 









Read more »

கடலூரில் புயல் மறுவாழ்வு கண்காணிப்பு அலுவலகம் திறப்பு

கடலூர்:

          கடலூர் மாவட்ட புயல் மறுவாழ்வு திட்டக் கண்காணிப்பு அலகு அலுவலகத்தை, ஆட்சியர் ராஜேந்திர ரத்னூ கடலூரில் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார். 

           டிசம்பர் 30-ம் தேதி கடலூர் மாவட்டத்தை புயல் மிகமோசமாகப் புரட்டிப் போட்டது. மக்ளின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப் பட்டது. கடலூர் மாவட்ட மக்களுக்கு ரூ. 5 ஆயிரம் கோடிக்கு மேல் சேதம் ஏற்பட்டது.  சேதமடைந்த வீடுகளுக்கும், வேளாண் பயிர்களுக்கும் தமிழக அரசு, நிவாரண உதவிகளை வழங்கியுள்ளது. எனினும் முந்திரி, தென்னை, பலா உள்ளிட்ட பயிர்களுக்கு ஏற்பட்ட சேதங்களை உடனே சரிசெய்துவிட முடியாது. எனவே அதற்கு நீண்டகால மறுவாழ்வுத் திட்டங்களை தமிழக அரசு அறிவித்து நிதியும் ஒதுக்கியுள்ளது.  இப்பணிகளை கண்காணிப்பதற்காக புயல் மறுவாழ்வு திட்டக் கண்காணிப்பு அலகு என்ற புதிய அலுவலகம், வெள்ளக்கிழமை மாலை திறக்கப்பட்டுள்ளது.  இதற்கு அதிகாரியாக நியமிக்கப்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரி வீரராகவராவ், ஆட்சியர் முன்னிலையில் வெள்ளக்கிழமை பதவி ஏற்றுக் கொண்டார்.  

புயல் மறுவாழ்வு திட்டக் கண்காணிப்பு அலுவலகத்தை மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர ரத்னூ திறந்து வைத்துப் பேசியது:  

          தமிழக முதல்வர் சட்டப் பேரவையில் அறிவித்த, புயல் மறுவாழ்வு சிறப்புத் தொகுப்புத் திட்டங்களை, ஒருங்கிணைத்துச் செயல்படுத்த ஏதுவாக கடலூரை தலைமையிடமாகக் கொண்டு திட்ட கண்காணிப்பு அலகு அலுவலகம் ஏற்படுத்தப்பட்டு, 2-3-2012 முதல் செயல்படத் தொடங்கி உள்ளது. இதற்கு கொ.வீரராகவ ராவ் ஐ.ஏ.எஸ். கூடுதல் ஆட்சியர், திட்ட அலுவலராகப் பொறுப்பேற்றுள்ளார்.  புயல் பாதித்த விவசாயிகளுக்கான மறுவாழ்வுத் திட்டங்களை, விரைந்து செயல்படுத்த வேளாண்மை, வேளாண்மைப் பொறியியல் தோட்டக்கலை மற்றும் ஊரக வளர்ச்சி ஆகிய துறைகளுக்கு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு பொறுப்பு ஏற்றுள்ளனர்.  மேலும் விவசாயிகளின் வசதிக்காக, பண்ருட்டியில் ஒரு கள அலுவலகம் தொடங்குவதற்கும், நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதல்வர் அறிவித்த புயல் மறுவாழ்வு சிறப்பு தொகுப்பு திட்டங்களின் பல்வேறு அம்சங்களும், போர்க்கால அடிப்படையில் விரைந்து செயல்படுத்தப்படும் என்றும் ஆட்சியர் தெரிவித்தார்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior