உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், மார்ச் 21, 2012

தானே புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட பெண்களுக்கு தொழில் உதவி

        கடலூர் மாவட்டத்தில் தானே புயலால் பாதிக்கப்பட்ட 900 பெண்களுக்கு வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் 1 லட்சம் டாலர் நன்கொடை வழங்கவிருப்பதாக வால்மார்ட் நிறுவனம் அறிவித் துள்ளது.

       இந்த நன்கொடை மூலமாக வால்மார்ட் பவுண்டேசன் மற்றும் கேர், கடலூர் பகுதியில் முந்திரி செயல்முறையில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மீட்பதற்கும், நீடித்திருக்கும் முந்திரி சாகுபடி நடைமுறை கள் மேம்படுத்தப்படும். மேலும் பாதிக்கப்பட்ட முந்திரி செயல்முறை கட்டமைப்பினை மீள்ப்படுத்தி, அதன் மூலம் நீடித்திருக்கக் கூடிய வாழ்வாதாரத்தை மீட்பதற்கு எண் ணியுள்ளன. குப்பைகளை அகற்றுதல், முந்திரி மரம் நடுவ தற்காக நிலத்தை தயார்படுத்துதல், சிறு விவசாயிகளுக்கு உதவுதல் ஆகிய பணிகளும் இதில் அடங்கும்.

 இதுகுறித்து வால்மார்ட நிறுவனத்தின் நிருவாக இயக்குநர் ராஜ் ஜெயின்அளித்த பேட்டி

         கடலூர் மிகப் பெரிய அளவில் முந்திரி விவசாயம் மற்றும் செயல்முறை நடவடிக்கைகளை கொண்டுள்ளது. தானே புயலால் கடலூர் பெரிதளவில் பாதிக்கப் பட்டுள்ளது. சுமார் 47 உயிர்களை பலி வாங்கியதுடன், 735 கிராமங்களில் சுமார் 5 லட்சம் மக்கள் பாதிக்கப் பட்டுள்ளனர். இந்த திட்டத்தின் மூலம் முந்திரி பயிரிடு பவர்கள் மற்றும் அறுவடைக்குப் பிந்தைய பணியாளர் களின் திறனை மீண்டும் உருவாக்க முடிவு செய்துள் ளோம். சுமார் 900 பெண்கள் உள்பட 3600 பேர் இதன் மூலம் பயனடைய உள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.






Read more »

என்.எல்.சி. ஒப்பந்தத் தொழிலாளர்களின் குறைந்தபட்ச ஊதியமாக மாதம் ரூ.15 ஆயிரம் நிர்ணயம்

நெய்வேலி:
 
       என்.எல்.சி. ஒப்பந்தத் தொழிலாளர்களின் குறைந்தபட்ச ஊதியமாக மாதம் ரூ.15 ஆயிரம் நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என பிஎம்எஸ் தொழிற்சங்க மாநில மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 
 
         பிஎம்எஸ் தொழிற்சங்கத்தின் மாநில மாநாடு மார்ச் மாத தொடக்கத்தில் கரூரில் நடைபெற்றது. இந்த மாநாட்டின் நெய்வேலி பிஎம்எஸ் தொழிற்சங்கத்தின் செயலராக இருந்த என்.இளங்கோவன், மாநிலச் செயலராக தேர்வு செய்யப்பட்டிருப்பதாக அச்சங்கத்தின் மாநிலத் தலைவர் சரவணபவன் அறிவித்தார். இந்த மாநாட்டின் போது, நெய்வேலியில் என்எல்சி நிறுவனம் உருவாக காரணமாகத் திகழ்ந்த ஜம்புலிங்க முதலியாருக்கு ஒரு சிலையையும், தென்மாவட்டத்தைச் சேர்ந்த மக்களின் கடவுளாகக் கருதப்படும் பொன்.முத்துராமலிங்கத் தேவருக்கும் நெய்வேலியில் சிலை அமைக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பதாக என்.இளங்கோவன் தெரிவித்தார்.
 
 
 
 
 
 
 
 
 

Read more »

செவ்வாய், மார்ச் 20, 2012

கடலூர் தாலுகாவில் முதியோர், மாற்றுத் திறனாளிகளுக்கு பயோ மெட்ரிக் கார்டு வழங்கும் பணி

நெல்லிக்குப்பம் :

      கடலூர் தாலுகா காராமணிக்குப்பம், வெள்ளப்பாக்கம் பகுதிகளில் பயோ மெட்ரிக் கார்டு வழங்கும் பணி நடந்தது.
 
 
      தமிழகம் முழுவதும் முதியோர், மாற்றுத் திறனாளி, விதவை உதவித் தொகைகள் தபால் நிலையம் மூலம் வழங்கப்படுகிறது. இதில் நடக்கும் காலதாமதம், முறைகேடுகளை தவிர்க்க பயோ மெட்ரிக் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. 4,000 மக்கள் தொகைக்கு மேல் உள்ள கிராமங்களில் முதல் கட்டமாக இத்திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது. பயனாளியின் 10 கை விரல் ரேகை பதிவு செய்யப்பட்ட கார்டு வழங்கப்படும். வங்கியின் தொழில் பரிவர்த்தனை அலுவலர் அந்தந்த கிராமங்களுக்கு குறிப்பிட்ட நாளில் வருவார்கள். ஏ.டி.எம்., இயந்திரத்தில் பணம் எடுப்பது போல் இந்த நபர் எடுத்துவரும் இயந்திரத்தில் பணம் எடுத்துக் கொள்ளலாம். இதன்மூலம் பயனாளிகள் சிரமம் தவிர்க்கப்படும் இதற்கான பயோ மெட்ரிக் கார்டு வழங்கும் பணியை வெள்ளப்பாக்கத்தில் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் மோகன் துவக்கி வைத்தார். வி.ஏ.ஓ., பாஸ்கரன் உடனிருந்தார்.
 
 
 
 
 

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior