உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், மார்ச் 27, 2012

பண்ருட்டி அன்னை வேளாங்கன்னி பாலிடெக்னிக் கல்லூரியில் ரத்ததானம் விழிப்புணர்வு கலந்துரையாடல்


பண்ருட்டி :

    பண்ருட்டி அடுத்த அன்னை வேளாங்கன்னி பாலிடெக்னிக் கல்லூரியில் ரெட் ரிப்பன் கிளப் சார்பில் எய்ட்ஸ் மற்றும் ரத்ததானம் குறித்த விழிப்புணர்வு கலந்துரையாடல் நடந்தது.


  கல்லூரி முதல்வர் சவரிராஜ் தலைமை தாங்கினார். என்.எஸ்.எஸ்., அலுவலர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார். ரெட் ரிப்பன் கிளப் மாவட்ட மேலாளர் கதிரவன், பண்ருட்டி அரசு மருத்துவமனை ஆலோசகர் ரமாதேவி, மாவட்ட எச்.ஐ.வி., உள்ளோர் சங்க மாவட்டத் தலைவர் ராஜேஸ்வரி ஆகியோர் எய்ட்ஸ் குறித்து மாணவர்களுக்கு விளக்கம் அளித்தனர். மேலும் ரத்ததானம் வழங்குவதன் அவசியம் குறித்து பேசினர். 
என்.எஸ்.எஸ்., அலுவலர் ரமேஷ் நன்றி கூறினார்.

Read more »

வியாழன், மார்ச் 22, 2012

கடலூர் முதுநகரில் மாற்றுத் திறனாளிகளுக்கான வள மையம் திறப்பு விழா

முதுநகர் :
 
       கடலூர் முதுநகர் அருகே தொண்டு நிறுவனங்கள் சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கான வள மையம் திறப்பு விழா நடந்தது.
 
        கடலூர், முதுநகர் அடுத்த மணக்குப்பத்தில் பி.ஏ.எஸ்.எப்., யு.என்.ஹாபிடாட் மற்றும் லியோனார்டு சேஷையர் ஆகிய தொண்டு நிறுவனங்கள் சார்பில் நடந்த விழாவிற்கு பி.ஏ.எஸ்.எப்., நிறுவனத் தலைவர் பிரசாத் சந்திரன் தலைமை தாங்கினார். கலெக்டர் ராஜேந்திர ரத்னு குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து பேசினார். யு.என்.ஹாபிடாட் அமைப்பின் மண்டல தொழில்நுட்ப ஆலோசகர் பூஷண் துலாதர், லியோனார்டு சேஷையர் மாற்றுத்திறன் அமைப்பின் மண்டல கவுன்சில் தலைவர் ஜான் ஆகியோர் பேசினார். விழாவில் டாக்டர் சேகர், அசோக்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.
 
 
 
 
 
 

Read more »

புதன், மார்ச் 21, 2012

கடலூர் புனித வளனார் கல்வி நிறுவனங்கள் சார்பில் புனித வளனார் திருவிழா

கடலூர் புனித வளனார் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற தேர் பவனியில் பங்கேற்ற அருள் தந்தையர்கள்.
கடலூர்:

        கடலூர் புனித வளனார் கல்வி நிறுவனங்கள் சார்பில், திங்கள்கிழமை புனித வளனார் திருவிழா கொண்டாடப்பட்டது.

          கடலூர் மஞ்சக்குப்பம் மற்றும் திருப்பாப்புலியூர் புனித வளனார் கல்வி நிறுவனங்களில் நடந்த இந்த விழாவில், கடலூர் புதுவை மறை மாவட்ட கத்தோலிக்க திருச்சபை பேராயர் அந்தோனி ஆனந்தராயர் கலந்து கொண்டார்.விழாவை முன்னிட்டு, தூய வளனார் கல்வி நிறுவனங்களில் உள்ள தேவாலயங்களில் சிறப்புப் பிரார்த்தனைகள் நடந்தன.இதையொட்டி மாலையில் தேர் பவனியும் நடந்தது. மஞ்சக்குப்பம் புனித வளனார் கல்வி நிறுவன வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிகளில், புனித வளனார் கல்லூரி முதல்வர் ஐ.ரட்சகர்அடிகள், மஞ்சக்குப்பம் புனித வளனார் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் ஆக்னல் அடிகள் மற்றும் அருள் தந்தையர்கள் பலரும் கலந்து கொண்டனர்.









Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior