உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஏப்ரல் 17, 2012

கடலூர் சில்வர் பீச்சில் தீயணைப்பு கருவிகள் குறித்த கண்காட்சி

கடலூர் :

கடலூரில் தீ தொண்டு நாள் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சில் தீயணைப்பு கருவிகள் குறித்த கண்காட்சி நடந்தது. கடலூர் கோட்ட அலுவலர் குமாரசாமி துவக்கி வைத்தார். கண்காட்சியில் தீயணைப்பு மீட்பு மற்றும் விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் போது பயன்படுத்தக் கூடிய ஹைட்ராலிக், மூச்சு கருவி, புகை போக்கி உட்பட பல்வேறு விதமான கருவிகள் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டது. மேலும், கண்ணாடி விரியன், மண்ணுளி மற்றும் நல்ல பாம்புகளும் இடம் பெற்றிருந்தன. கண்காட்சியை பார்வையிட வந்த பொதுமக்களுக்கு தீ தடுப்பு வழிமுறைகள் குறித்து செயல்விளக்கப் பயிற்சி அளிக்கப்பட்டது. தீ தடுப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை நிலைய அலுவலர்கள் கடலூர் வீரபாகு, சிப்காட் கருணாகரன் ஆகியோர் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் ராஜசேகரன், நாகராஜ், திருநாவுக்கரசு, பிரபு ஆகியோர் செய்திருந்தனர்.

Read more »

கடலூர் நகராட்சி சார்பில் 9 லட்சம் ரூபாய் மதிப்பில் 16 டம்பர் பிளேசர் குப்பைத் தொட்டிகள்

கடலூர் :



கடலூர் நகர பகுதிகளில் குப்பைகளை சேகரிக்க நகராட்சி நிர்வாகம் சார்பில் 9 லட்சம் ரூபாய் மதிப்பில் 16 டம்பர் பிளேசர் குப்பைத் தொட்டிகள் வாங்கப்பட்டுள்ளது.>கடலூர் நகரப் பகுதிகளில் சேகரமாகும் குப்பைகளால் நகரமே சுகாதார சீர்கேடு அடைந்து வருகிறது. அதனையொட்டி நகரை தூய்மையாக வைத்திருக்கும் பொருட்டு, நகராட்சியில் உள்ள சுகாதாரத்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நகரின் அதிக அளவில் குப்பைகள் சேரும் பகுதிகளில் நவீன ரக "டம்பர் பிளேசர்' குப்பைத் தொட்டிகள் வைத்து அதன் மூலம் குப்பைகளை சேகரித்து பிரத்யேக லாரியைக் கொண்டு குப்பைகளை அள்ளி வந்தனர். இதற்காக கடந்த ஆட்சியில் பல லட்சம் ரூபாய் செலவில் 16 டம்பர் பிளேசர் குப்பைத் தொட்டிகள் வாங்கப்பட்டது. >இந்நிலையில் அப்போது வாங்கிய "டம்பர் பிளேசர்' குப்பை தொட்டிகளை கையாளும் லாரி பழுதடைந்ததால், அப்போது வாங்கிய "டம்பர் பிளேசர்' குப்பை தொட்டிகள் பயனின்றி பாபு கலையரங்கில் வைக்கப்பட்டுள்ளது.< >இந்நிலையில், புதிதாக பொறுப்பேற்றுள்ள நகராட்சி நிர்வாகம், நகரில் குப்பைகளை அகற்றுவதற்காக 20 லட்சம் ரூபாய் மதிப்பில் அனைத்து நவீன வசதிகள் கொண்ட புதியரக "டம்பர் பிளேசர்' குப்பை தொட்டிகள் மற்றும் லாரி வாங்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி தற்போது 9 லட்சம் ரூபாய் மதிப்பில் 16 "டம்பர் பிளேசர்' குப்பைத் தொட்டிகள் வாங்கப்பட்டு பாபு கலையரங்கத்தில் வைக்கப் பட்டுள்ளது. இதற்கான பிரத்யேக லாரிக்கும் ஆர்டர் கொடுக்கப்பட்டுள் ளது. இந்த லாரி வந்ததும், இந்த குப்பைத் தொட்டிகள் அனைத்தும் முக்கிய இடங்களிலும் வைக்கப்பட உள்ளது.









Read more »

சனி, ஏப்ரல் 14, 2012

தமிழ்ப் புத்தாண்டையொட்டி கடலூர் மாவட்டத்தில் உள்ள கோவில்களில் சிறப்பு பூஜை

கடலூர்:

          தமிழ்ப்புத்தாண்டையொட்டி மாவட்டத்தில் உள்ள கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. ஆஞ்சநேயர் கோவில்களில் மாலையில் நடந்த லட்சதீப உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

           கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் காலை 5.30 மணிக்கு கோ பூஜை, பள்ளியறை சிறப்பு பூஜை, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடந்தது. துர்கை அம்மன் சந்தனக்காப்பு அலங்காரத்திலும், உச்சிகால பூஜையைத் தொடர்ந்து பெரியநாயகி சமேத பாடலீஸ்வரர் தங்க கவசம் அணிந்தும், மாலை 6 மணிக்கு பெரியநாயகி சந்தனக்காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

         திருப்பாதிரிப்புலியூர்,  செம்மண்டலம், சாலக்கரை, முதுநகர், நத்தப்பட்டு, அரிசிபெரியாங்குப்பம் சக்கரத்தாழ்வார் கோவில்களில் காலை 5.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், பஞ்சாங்கம் படித்தல், மூலவருக்கு சிறப்பு அபிஷேகமும், தொடர்ந்து 26 அடி உயர விஸ்வரூப ஆஞ்சநேயர் சிலைகளுக்கு புது வஸ்திரம், துளசி, பூ, வெற்றிலை மற்றும் வடை மாலைகள் அணிவித்து மகா தீபாராதனை நடந்தது. மாலை 7 மணிக்கு லட்சதீப உற்சவமும், இரவு சுவாமி வீதியுலா நடந்தது.

சிதம்பரம்:

        நடராஜர் கோவிலில் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். மாலை பஞ்சாங்க படனம் நடந்தது. தில்லை காளியம்மன், கீழரத வீதி வீரசக்தி ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடந்தது.

பரங்கிப்பேட்டை:

        சஞ்சீவிராயர் கோவில் தெருவில் உள்ள ஆஞ்சநேயர் கோவில் மற்றும் தச்சக்காடு அய்யனர் கோவிலில் சிறப்பு அபிஷேகம் தீபாராதனை நடந்தது. ஏரளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

கிள்ளை:

           பின்னத்தூர் அபிராமி அம்மன் கோவிலில் நேற்று முன்தினம் மாலை 5 மணியில் இருந்து சிறப்பு பூஜைகள் நடந்தது. நேற்று காலை 8 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு பூஜையை தொடர்ந்து அன்ன தானம் வழங்கப்பட்டது. தில்லை விடங்கன் கிராமத்தில் உள்ள 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த விடங்கேஸ்வரர் கோவிலில் நடந்த சிறப்பு பூஜையில் பக்தர்கள் திரளாக கலந்து கொõண்டனர்.

சேத்தியாத்தோப்பு:

          வரசித்தி விநாயகர் கோவில், மேட்டுத்தெரு சுப்பிரமணிய சுவாமி கோவில், காளியம்மன் கோவில், பூதங்குடி தீப்பாய்ந்த நாச்சியார் கோவில், வடிவுடையம்மன் கோவில், வீரமுடையாநத்தம் மகாதி மாரியம்மன் கோவில், வீரசக்தி ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது.

நெல்லிக்குப்பம்: 

          வரசித்தி விநாயகர் கோவிலில் சிறப்பு அபிஷேகத்தை தொடர்ந்து வெள்ளிக்காப்பு அலங்காரத்தில் விநாயகர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மேல்பட்டாம்பாக்கம் சிவலோகநாதர் கோவிலில் உள்ள ஐயப்பன் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகத்தை தொடர்ந்து கனி தரிசன விழா நடந்தது.

ஸ்ரீமுஷ்ணம்: 

        பூவராக சுவாமி கோவிலில் மூலவருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. பின்னர் உற்சவ மூர்த்தி யக்ஞவராகன் ஸ்ரீதேவி பூமிதேவியுடன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


நடுவீரப்பட்டு:

            சி.என்.பாளையம் மீனாட்சி அம்மன் சமேத சொக்கநாதர் கோவிலில் காலை 10 மணிக்கு சிறப்பு அபிஷேகமும், பகல் 12 மணிக்கு உற்சவமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சொக்கநாதர் சுவாமிக்கு 108 சங்கு அபிஷேகம் நடந்தது.








Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior