உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஜூலை 06, 2012

இடமாறுதல் கலந்தாய்வை வெளிப்படையாக நடத்தக் கோரி கொளஞ்சியப்பர் அரசு கல்லூரி பேராசிரியர்கள் வாயில் முழக்க ஆர்ப்பாட்டம்

விருத்தாசலம்:

இடமாறுதல் கலந்தாய்வை வெளிப்படையாக நடத்தக் கோரி விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லூரி பேராசிரியர்கள் வாயில் முழக்க ஆர்ப்பாட்டம் நடத்தினர். கல்லூரி ஆசிரியர்கள் சங்கத் தலைவர் மதிவாணன் தலைமை தாங்கினார். செயலர் சிவக்குமார், பொருளாளர் ராமச்சந்திரன் முன்னிலை வகித்தனர். பேராசிரியர்கள் சுப்ரமணியன், அப்துல்ரஹீம், கலாவதி, ஜெயந்தி உட்பட 20க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் பங்கேற்றனர். கல்லூரி பேராசிரியர்கள் இடமாறுதல் காலம் 2 ஆண்டுகள் என்பதை குறைக்க வேண்டும். இடமாறுதல் கலந்தாய்வை வெளிப்படையாக நடத்த வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்பவேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.


Read more »

வியாழன், ஜூலை 05, 2012

கடலூர் மாவட்டத்தில் இருந்து டி.என்.பி.எஸ்.சி., குரூப்-4 தேர்விற்கு 55 ஆயிரம்பேர்பங்கேற்பு

கடலூர்:

       தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) நடத்தும் குரூப்-4க்கான தேர்வு வரும் 7ம் தேதி நடக்கிறது. கடலூர் மாவட்டத்தில் இருந்து 55 ஆயிரத்து 35 பேர் தேர்வு எழுதுகின்றனர்.அரசுத் துறைகளில் ஏற்படும் காலிப் பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு நடத்தி நிரப்பப்பட்டு வருகிறது. வருவாய்த் துறையில் உள்ள இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கான குரூப்-4 தேர்வு வரும் 7ம் தேதி தமிழகம் முழுவதும் நடக்கிறது. கடலூர் மாவட்டத்தில் 55 ஆயிரத்து 35 பேர் 101 மையங்களில் 2,827 ஹால்களில் தேர்வு எழுதுவதற்கான விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேர்வு மையங்களை கண்காணிக்க முதன்மை கண்காணிப்பாளர்கள் 161 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.


         விடைத்தாள்களை சேகரித்து கருவூலத்தில் செலுத்த 20 நடமாடும் குழு அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு நடமாடும் குழுவும் 5 பள்ளிகளை கண்காணிக்க வேண்டும். தேர்வு எழுதும் மையங்களில் தவறு நடைபெறாமல் இருக்க முழுமையாக வீடியோ மூலம் பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. வரும் 7ம் தேதி குரூப்-4க்கான தேர்வு காலை 10 முதல் 1 மணி வரை நடைபெறுகிறது. பிற்பகல் இந்து சமய அறநிலையத் துறையில் உள்ள இ.ஓ., பதவிக்களுக்கான தேர்வு 3 முதல் 5 மணி வரை நடைபெறும். பல்வேறு ஊர்களில் இருந்து தேர்வு மையங்களுக்கு சரியான நேரத்திற்கு வருகை தர வேண்டியுள்ளதால் தேர்வர்களுக்கு வசதியாக அனைத்து பகுதியில் இருந்தும் அரசு போக்குவரத்துக் கழகம் சிறப்பு பஸ்களை இயக்க உள்ளது.இந்த தேர்வுக்குரிய வினாத்தாள் நேற்று லாரி மூலம் எடுத்து வரப்பட்டு கடலூர் மாவட்ட கருவூலத்தில் பாதுகாப்பாக இறக்கி வைக்கப்பட்டுள்ளது. அங்கு முன்னெச்சரிக்கையாக தீயணைப்பு வாகனம் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளது



Read more »

புதன், ஜூலை 04, 2012

கடலூர் மாவட்டத்தில் 8 இடங்களில் தி..மு.க., சிறை நிரப்பும் போராட்டம்

கடலூர்:


     அ.தி.மு.க., ஆட்சியின் மக்கள் விரோதபோக்கினை கண்டித்து தி.மு.க., சார்பில் கடலூர் மாவட்டத்தில் 8 இடங்களில் இன்று சிறை நிரப்பும் போராட்டம் நடக்கிறது.

தி.மு.க., மாவட்டச் செயலர் பன்னீர்செல்வம் விடுத்துள்ள அறிக்கை:

     ஜெ.,ஆட்சியின் மக்கள் விரோதபோக்கினை கண்டித்து தி.மு.க., சார்பில் 8 இடங்களில் இன்று (4ம் தேதி) சிறை நிரப்பும் போராட்டம் நடக்கிறது. மாவட்ட, கோட்ட, வட்ட ஆட்சியர் மற்றும் அரசு அலுவலகங்கள் முன்பாக குறிஞ்சிப்பாடி, கடலூர், பண்ருட்டி, சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், விருத்தாசலம், திட்டக்குடி, ஸ்ரீமுஷ்ணம் ஆகிய இடங்களில் நடைபெறும் இந்த போராட்டத்தில் அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள் திரளாக பங்கேற் குமாறு கேட்டுக் கொள்கிறேன்.




Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior