உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜனவரி 04, 2010

நரியன் ஓடை மேம்பாலம் விரைவில் திறக்கப்படுமா?

நடுவீரப்பட்டு :

              நடுவீரப்பட்டு-சி.என்.பாளையம் இடையே நரியன் ஓடையில் கட்டப்பட்டு வரும் உயர்மட்ட பாலத்தை பொங்கலுக்குள் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

                  நடுவீரப்பட்டு-சி.என்.பாளையம் இடையே நரியன் ஓடையில் ஒரு கோடியே 11 லட்சம் ரூபாய் மதிப்பில் உயர்மட்ட பாலம் கட்டும் பணி கடந்த பிப்ரவரி 23ம் தேதி துவங்கியது. 10 மாதங்களில் பாலம் கட்டி முடித்திருக்க வேண்டும். ஆனாலும், இன்னும் சிறு, சிறு பணிகள் முடிவடையாமல் உள்ளது. வரும் 16ம் தேதி சி.என்.பாளையத்தில் உள்ள புஷ்பகிரி மலையாண்டவர் கோவிலில் கரிநாள் திருவிழாவிற்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வெளியூர்களிலிருந்து வருவார்கள். இவர்கள் நடுவீரப்பட்டிலிருந்து சி.என்.பாளையம் செல்ல சரியான வழியில்லாததால் சிரமத்திற்குள்ளாகும் நிலை உள்ளது. ஆகையால் நிலுவையில் உள்ள பணிகளை விரைந்து முடித்து பாலத்தை பொங்கலுக்குள் திறந்து மக்கள் பயன்பாட்டிற்கு விட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் குறைந்தபட்சம்  பொதுமக்கள் பாலத்தில் நடந்து செல்லும் வகையிலாவது வழி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.

Read more »

பனவாரி ஓடையில் மேம்பாலம் கட்ட கலெக்டருக்கு மனு

சிறுபாக்கம் :

                சிறுபாக்கம் அருகே மேம்பாலம் கட்ட வேண்டும் என கோரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.

               இதுகுறித்து மங்களூர் ஒன்றியம் பாசார் ஊராட்சி தலைவர் வரதராஜன், கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனு:

               பாசார் ஊராட்சியில் கிராமத்தை ஒட்டியே பனவாரி ஓடை செல்கின்றது. மங்களூர், விநாயகநந்தல், பொயனப் பாடி, சிறுபாக்கம் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு இவ்வழியாக பள்ளி மாணவ, மாணவிகள், கிராம மக்கள் தினசரி நூற்றுக்கும் மேற்பட்டோர் ஓடையை கடந்து செல்கின்றனர். மழை காலங்களில் பனவாரி ஓடையில் அதிகளவு செல்லும் தண்ணீரால் போக்குவரத்து துண்டிக்கப்படும் நிலை உள்ளது.  எனவே போர்க்கால அடிப்படையில் கிராம மக்களின் நலன் கருதி பனவாரி ஓடையினை நேரில் பார்வையிட்டு விரைவில் மேம்பாலம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Read more »

திட்டக்குடி பஸ் நிலைய வளாகத்தில் தனியார் பஸ்களால் போக்குவரத்து பாதிப்பு

திட்டக்குடி :

               திட்டக்குடி பஸ் நிலைய வளாகத்தில் பயணிகளை கவர்ந்திட நிறுத்தப்படும் தனியார் பஸ்களால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகின்றது.

                  விருத்தாசலம்- ராமநத்தம் நெடுஞ்சாலையின் மையத்தில் உள்ள திட்டக் குடியில் ஏராளமான அரசு அலுவலகங்கள், பள்ளிகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களும் இயங்கி வருகின்றன. இவ்வழியாக தினசரி ஆயிரத்திற்கும் மேற்பட்ட பஸ் உள்ளிட்ட வாகனங் கள் சென்று வருகின்றன. திட்டக்குடி பஸ் நிலையத்திலிருந்து தஞ்சாவூர், கள்ளக்குறிச்சி, விருத்தாசலம், மங்களூர், சிறுபாக்கம், தொழுதூர், நாவலூர், பெண்ணாடம் வழித் தடங்களில் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.  இதனால் பஸ் நிலையம் எந்நேரமும் கூட்ட நெரிசல் மிகுந்து காணப்படுகின்றது.

          மேலும் கடலூர்-திருச்சி மார்க்கமாக குறிப் பிட்ட பஸ் நிறுத்தங்களில் மட்டுமே நிறுத்தி செல் லும் 310 தடம் எண்  அரசு பஸ்கள் மணிக்கு நான்கு முறை சென்று வருகின்றன. இவைகள் பஸ் நிலையத்திற்குள் வந்து செல்லாமல், பஸ் நிலையம் முன்பாக நிறுத்தி பயணிகளை இறக்கி செல் கின்றன. இதைப்போல விருத்தாசலம்- தொழுதூர்  மார்க்கமாக செல்லும் தனியார் பஸ்களும் உட்புறம் வந்து செல்வதில்லை. இதனால் பஸ் நிலை யம் எதிரே தொடர்ந்து போக்குவரத்து பாதிக்கப் பட்டு வருகிறது. இதனை தடுத்திட போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior