உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜனவரி 07, 2010

சாலை பாதுகாப்பு வார விழா

நெய்வேலி: 
                   
               நெய்வேலியில் சாலை பாதுகாப்பு வாரவிழாவையொட்டி விழிப்புணர்வுக் கூட்டம் வேலுடையான்பட்டு சமுதாயக் கூடத்தில் புதன்கிழமை நடைபெற்றது. நெய்வேலி நகரம், வடலூர், குறிஞ்சிப்பாடி, குள்ளஞ்சாவடி, ஊத்தங்கால் பகுதிகளைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட ஆட்டோ மற்றும் வாடகை வேன் ஓட்டுநர்கள் இக் கூட்டத்தில் பங்கேற்றனர். இதில் பேசிய நெய்வேலி டவுன்ஷிப் இன்ஸ்பெக்டர் சேகர், போக்குவரத்து விதிகளை கடைபிடித்து வாகனங்கள் ஓட்டும்போது விபத்து தவிர்க்கப்பட வாய்ப்புள்ளது. வாகன ஓட்டிகள் கவனமுடன் வாகனங்களை இயக்கவேண்டும் என்றார்.

              நெய்வேலி மோட்டார் வாகன ஆய்வாளர் கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர்கள் நடராஜன், ரேவதி உள்ளிட்டோர் சாலை பாதுகாப்பின் அவசியத்தை வலியுறுத்தினர். இதையடுத்து விக்கிரவாண்டி-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற வாகனங்களின் முகப்பு விளக்குகளில் கறுப்பு ஸ்டிக்கர் ஒட்டும் பணி நடைபெற்றது.

Read more »

இலவச கால்நடை மருத்துவ முகாம்

விருத்தாசலம்: 
 
          விருத்தாசலம் அருகில் உள்ள க.இளமங்கலம் கிராமத்தில் சிறப்பு கால்நடை பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் மருத்துவ முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் ஆடு, மாடு மற்றும் கோழிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பசுமாடுகளுக்கு குடற்புழு நீக்கம், மலட்டுத்தன்மை நீக்கம், செயற்கை கருவூட்டல், சினை ஆய்வு ஆகியன செய்யப்பட்டன. மேலும் மாடுகளுக்கு சப்பை நோய் தடுப்பூசி போடப்பட்டது. கால்நடை ஆய்வாளர்கள் வீரப்பன், பொன்வேலன், திலிபன், மருத்துவர் சரவணன், பராமரிப்பு உதவியாளர் செல்வராஜ் ஆகியோர் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிததனர். ஊராட்சித் தலைவர் பழனியம்மாள் முகாமை தொடங்கி வைத்தார். சுப்ரீம் அரிமா சங்க தலைவர் முத்துக்குமார் தலைமை வகித்தார். கோட்ட கால்நடை பராமரிப்புத் துறை உதவி இயக்குநர் லட்சுமணன் முன்னிலை வகித்தார்.

Read more »

கடலூர் தனியார் கல்லூரியில் விடைத்தாள் திருத்தும் பணி தாற்காலிகமாக நிறுத்தம்

கடலூர்: 

                      கடலூர் புனித வளனார் கல்லூரியில் நடைபெற்று வந்த திருவள்ளுவர் பல்கலைக் கழக விடைத்தாள் திருத்தும் பணி தாற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.

                    கலைப் பாடங்களுக்கான விடைத்தாள் திருத்தும் பணி இக் கல்லூரியில் டிசம்பர் 22-ம் தேதி முதல் நடைபெற்று வந்தது. பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த 160 ஆசிரிய ஆசிரியைகள் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டனர். டிசம்பர் 19-ம் தேதி பல்லைக்கழகத்தில் நடைபெற்ற அகாடெமிக் கவுன்சில் தேர்வு தொடர்பாக, தனியார் கல்லூரி ஆசிரியர் சங்கம் சார்பில் வெளியிடப்பட்ட துண்டறிக்கை ஆசிரியர்களிடையே திங்கள்கிழமை விநியோகிக்கப்பட்டது. கடலூர் புனித வளனார் கல்லூரி முதல்வர் ரட்சகர் அடிகள் பெயரையும் துண்டுப் பிரசுரத்தில் இணைத்து இருந்தனராம். விடைத்தாள் திருத்தும் மையத்தில் துண்டறிக்கை வெளியிட்டதை முதல்வர் ரட்சகர் அடிகளும் கல்லூரியின் மற்ற ஆசிரியர்களும் கண்டித்தனர். இதில் எழுந்த பிரச்னை காரணமாக, கல்லூரி ஆசிரியர்கள்  விடைத்தாள் திருத்தும் பணியை திங்கள்கிழமை பிற்பகல் முதல் புறக்கணித்து வருகிறார்கள்.

              இதுகுறித்து விசாரணை நடத்த வந்த பல்கலைக்கழகப் பதிவாளர் அமலதாஸிடம் தாங்கள் தொடர்ந்து, புனித வளனார் கல்லூரி மையத்தில் விடைத்தாள் திருத்த மாட்டோம், மையத்தை மாற்ற வேண்டும் என்று தெரிவித்து விட்டனர். ஆனால் விடைத்தாள் திருத்தும் மையத்தை மாற்றக் கூடாது என்று புனித வளனார் கல்லூரி ஆசிரியர்கள் ரொசாரியோ உள்ளிட்டோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.  துண்டறிக்கை வெளியிட்ட ஆசிரியை உஷா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுயநிதிக் கல்லூரி ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்தனர். இப்பிரச்சினை காரணமாக விடைத்தாள் திருத்தும் பணி தாற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளது. விடைத்தாள் பாதுகாப்புடன் வைக்கப்பட்டு இருக்கும் அறை பூட்டி சீல் வைக்கப்பட்டது.

               புதன்கிழமை காலை அரசுக் கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் கல்விக்குழு உறுப்பினர்கள், பல்கலைக்கழக துணை வேந்தரைச் சந்தித்து மனு அளித்தனர். அதில் ஆசிரியர்களை இழிவாகப் பேசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். விடைத்தாள் திருத்தும் மையத்தை மாற்ற வேண்டும் என்றும் கோரி இருந்தனர். இதுகுறித்து திருவள்ளுவர் பல்கலைக்கழகத் துணை வேந்தர் விசாரணை நடத்தி, விரைவில் நடவடிக்கை எடுப்பார் என்று கூறப்படுகிறது.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior