உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், பிப்ரவரி 24, 2010

என்.எல்.சி. ஒப்பந்தத் தொழிலாளி சாவு

நெய்வேலி:

                                    என்.எல்.சி. சுரங்க விபத்தில் ஒப்பந்தத் தொழிலாளி சுரேஷ் திங்கள்கிழமை இறந்தார்.  நெய்வேலி ஜி.கே. காலனியை சேர்ந்த செல்வராஜின் மகனான சுரேஷ், என்.எல்.சி. 2-ம் சுரங்கத்தில் பாவா எரெக்ஷன் எனும் தனியார் நிறுவனத்தில் ஒப்பந்தத் தொழிலாளியாக வேலைபார்த்துவந்தார். இந்நிலையில், திங்கள்கிழமை பணிக்குச் சென்ற போது, பிக்கப் வாகனத்தில் ஏற முயற்சித்தபோது தவறி கீழேவிழுந்தாராம். இதில் பலத்த காயமடைந்த சுரேஷ்,  புதுச்சேரி பிம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே இறந்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து மந்தாரக்குப்பம் போலீஸர் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read more »

அண்ணாமலைப் பல்கலை. கல்வி புரிந்துணர்வு ஒப்பந்தம்

சிதம்பரம்:
 
                      அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அமெரிக்காவில் உள்ள வெஸ்டேர்ன் யுனிவர்சிட்டி ஆஃப் ஹெல்த சயன்ஸ் என்ற நிறுவனத்துடன் கல்வி புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. அண்ணாமலைப் பல்கலை. துணைவேந்தர் மாளிகையில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. துணைவேந்தர் டாக்டர் எம். ராமநாதன், அமெரிக்கா வெஸ்டர்ன் யுனிவர்சிட்டி, காலேஜ் ஆஃப் பார்மசி முதல்வர் டேனியல் ராபின்சன் ஆகியோர் கையெழுத்திட்டனர்.÷பொறியியல் புல முதல்வர் பி. பழனியப்பன், மருந்தாக்கியல் துறைத் தலைவர் இரா. மணவாளன், பேராசிரியர்கள் பி.கே. மன்னா, ஜி.பி. மொகந்தா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த ஒப்பந்தத்தின் மூலம் இரு பல்கலைக்கழக மாணவர்களும், ஆசிரியர்களும் இந்திய - அமெரிக்க மருந்து நடைமுறைகளை குறித்து ஆய்வுகள் மேற்கொண்டு பயனடையமுடியும்.÷அண்ணாமலைப் பல்கலைக்கழக மருந்தாக்கியல் துறையில் மாணவர்களுக்கு அமெரிக்காவில் வேலைவாய்ப்பு கிடைக்கும். 
 
                           இந்தியாவிலேயே முதன்முறையாக அண்ணாமலைப் பல்கலைக்கழக மருந்தாக்கியல் துறையில் டி.பார்ஃம் என்ற பாடப் பிரிவு இந்திய மருந்தாக்கியல் குழுமத்தின் அங்கீகாரத்துடனும், பல்கலைக்கழக மானியக் குழு நிதிஉதவியுடன் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இந்த பாடப் பிரிவானது 1200 படுக்கை வசதி மற்றும் பல்வேறு வசதிகள் கொண்ட அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையுடன் இணைந்து நடைபெற்று வருவதாக துணைவேந்தர் டாக்டர் எம். ராமநாதன் தெரிவித்தார்.

Read more »

வீடு, நிலம் வழங்கியோர் மறியல்

நெய்வேலி:
 
                என்.எல்.சி. நிறுவன விரிவாக்கப் பணிகளுக்கு வீடு, நிலம் வழங்கியோர்  அதற்கான இழப்பீட்டுத் தொகையை உயர்த்தக் கோரியும், அடிப்படை வசதிகள் செய்துதர வலியுறுத்தியும் மந்தாரக்குப்பம் பகுதியில் கடலூர் - விருத்தாசலம் சாலையில்  மார்க்கத்தில்  செவ்வாய்க்கிழமை மறியலில் ஈடுபட்டனர்.
 
               என்.எல்.சி. நிறுவன விரிவாக்கப் பணிகளுக்கு வீடு நிலம் வழங்கியுள்ள கீழக்குப்பம், கெங்கைகொண்டான், உய்யக்கொண்டராவி உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 120 பெண்கள் உள்பட 300-க்கும் மேற்பட்டோர் இப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப் போராட்டத்துக்கு கெங்கைகொண்டான் பேரூராட்சித் தலைவர் சக்திவேல் தலைமை வகித்தார்.÷இதனால், அப்பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து தடைப்பட்டது. இதைத் தொடர்ந்து, அங்கு வந்த நெய்வேலி டி.எஸ்.பி. மணி தலைமையிலான போலீஸôôர், சாலை மறியலில் ஈடுபட்டோரை அப்புறப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது போலீசார்ருக்கும், கிராம மக்களுóக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.பின்னர் அனைவரையும் அப்புறப்படுத்திய   போலீசார் அருகிலுள்ள தனியார் கல்யாண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் அங்கு வந்த சிதம்பரம் கோட்டாட்சியர் ராமராஜு, விருத்தாசலம் வட்டாட்சியர் ஜெயராமன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ஜெபமணி ஆகியோர் சாலை மறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேரம் நீடித்த பேச்சுவார்த்தையில், இப் பிரச்னைக்கு என்.எல்.சி. நிறுவனத்தின்  தலைவரிடம் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணப்படும் என முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனிடையே, இப் போராட்டத்துக்கு ஆதரவாக நெய்வேலி மந்தாரக்குப்பம் வணிகர்களும் செவ்வாய்க்கிழமை ஒருநாள் கடையடைப்பு போராட்டம் நடத்தினர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior