உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மார்ச் 08, 2010

கம்பி, சிமென்ட் விலை விர்ர்...!: வீடு கட்டுவோர் கலக்கம்

பண்ருட்டி:

                 கட்டுமான பொருட்களான இரும்பு கம்பி, சிமென்ட் விலை அதிகரிப்பால் வீடு கட்டுவோர் மற்றும் கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனங்கள் கடும் பாதிப்படையும் நிலை ஏற்பட்டுள்ளது.கட்டுமான பொருட்களில் முக்கிய பொருட்களான சிமென்ட், கம்பிகளின் விலை தற்போது கடுமையாக உயர்ந்துள்ளது.

              கம்பியின் மூலப்பொருட்கள் உலக வர்த்தகத்தில் கூடுதலாகியுள்ளதால் இரும்பு கம்பிகள் கிலோவிற்கு 6 ரூபாய் முதல் 10 ரூபாய் விலை உயர்ந்துள்ளது.  இதனால் கடந்த மாதம் ஒரு கிலோ அசோகா கம்பிகள் 28 ரூபாய்க்கு விற்றவை தற்போது 38 ரூபாயாகவும், அக்னி பிராண்ட் கம்பிகள் 33ல் இருந்து 41 ஆகவும் உயர்ந்துள்ளது.

                     சிமென்ட் உற்பத்தியில் போட்டி காரணமாக கடந்த இருமாதங்களுக்கு முன் சிமென்ட் மூட்டை 290 ரூபாயிலிருந்து 210 ஆக விலை குறைந்தது. செட்டிநாடு, சுவாரி, டால்மியா, கோரமண்டல், ராம்கோ, அல்டராடெக், பாரதி என ஒவ்வொரு கம்பெனி சிமென்டிற்கும் ஐந்து ரூபாய் முதல் 10 ரூபாய் வரை விலை வித்தியாசம் இருந்தது.
                     தற்போது சிமென்ட் ஆலை உரிமையாளர்கள் சிண்டிகேட் அமைத்து ஒரே விலை 257ல் 7 ரூபாய் கழித்து 250 ரூபாயிற்கு நிர்ணயம் செய்துள்ளதால் தற்போது சிமென்ட் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. மேலும், அனைத்து கம்பெனி சிமென்டுகளும் ஒரே விலையில் விற்பனை செய்யப்படுகிறது. பெரிய கட்டுமான பணிகளில் ஈடுபடும் நிறுவனத்திற்கு லோடு கணக்கில் குறைந்த விலையில் சிமென்ட் கம்பெனியினர் விற்பனை செய்து வந்தனர். அதுவும் தற்போது நிறுத்தியுள்ளனர்.

                   கட்டுமான பணிகள் சுணக்க நிலையில் உள்ளபோதும் செயற்கையாக சிமென்ட் விலையை உயர்த்தியுள்ளதாக கட்டுமான பொறியாளர்கள், வியாபாரிகள் குற்றம் சாட்டுகின்றனர். மூன்று மாதங்களுக்கு முன்பு சிமென்ட், இரும்பு கம்பிகள் விலைகள் வெகுவாக குறைந்ததால், பலர் வீடு கட்ட திட்டமிட்டு பணியை துவக்கியவர்கள், தற்போது திட்ட மதிப்பீட்டை விட கூடுதல் செலவு ஆகும் நிலை ஏற்பட்டுள்ளதால் "திரிசங்கு' நிலையில் உள்ளனர்.

               மேலும் கம்பி, சிமென்ட் விலைகள் குறையும் என ஒப்பந்தம் செய்த கட்டுமான நிறுவனங்களும் பெருமளவில் நஷ்டத்தை சந்திக்க நேரிடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனை தடுக்க மத்திய, மாநில அரசுகள் கம்பி, சிமென்ட் விலைகளை கட்டுப்படுத்த தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Read more »

தமிழகத்தில் ரூ.10 ஆயிரம் கோடியில் சாலைப் பணி நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் பெருமிதம்


சிதம்பரம்:

                  தி.மு.க., அரசு பொறுப்பேற்றது முதல் இதுவரை 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் 55 ஆயிரத்து 785 கிலோ மீட்டர் தூர சாலை பணிகள் முடிக்கப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் வெள்ளக் கோவில் சாமிநாதன் பேசினார்.

காட்டுமன்னார்கோவிலில் நடந்த விழாவில் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் வெள்ளக் கோவில் சாமிநாதன் பேசியதாவது:

                           தமிழகத்தில் ஐந்தாவது முறையாக பொறுப்பேற்ற தி.மு.க., அரசு தமிழகத்தில் பாலங்கள், சாலைப்பணிகள் என வரலாற்று சாதனைகளை செய்துள்ளது.  61 ஆயிரத்து 461 கி.மீ., சாலைகள் பராமரிப்பு, அகலப்படுத்துதல், உறுதிபடுத்தும் பணிகள் நடந்து வருகிறது. ஆட்சி பொறுப்பேற்ற முதல் கடந்த மாதம் வரை 10 ஆயிரம் கோடி ரூபாயில் 55 ஆயிரத்து 785 கி.மீ., சாலை பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.
                          ரயில்வே அனுமதியுடன் 106 ரயில்வே மேம்பாலங்களுக்கு அனுமதி பெறப்பட்டுள்ளது. ஆனால் கடந்த ஐந்தாண்டு அ.தி.மு.க., ஆட்சியில் ஏழு ரயில்வே பாலங்கள் மட்டுமே அனுமதி பெறப்பட்டன. தமிழக அரசு பாலம் கட்ட 50 சதவீத பங்கு ஏற்றுக்கொள்ளும் என்ற நம்பிக்கையோடு ரயில்வே பாலங்கள் அனுமதி வழங்கி வருகிறது. தமிழக முதல்வரால் தொடங்கப்பட்டு இதுவரை 2,400க்கும் மேற்பட்ட பாலங்கள் முடிக்கப்பட்டு விட்டன.

                     அணைக்கரை பாலம் பொதுப்பணித்துறையின் குடிநீர் தேக்குவதற்கான மதகு. அதை நாம் போக்குவரத்து பாலமாக பயன்படுத்தி வந் தோம். தற்போது அந்த பாலம் உடைந்ததால் போக்குவரத்து நிறுத் தப்பட்டுள்ளது. அதையொட்டி ஈழத் தநல்லூர் அருகே கொள்ளிடத்தின் குறுக்கே 33 கோடி ரூபாயில் பாலம் கட்டும் பணி துவங்கியுள்ளது. 18 மாதங்களில் இந்த பணி முடிக்கப்படும்.
                       அதே போன்று அங்கிருந்து 20 கி. மீட்டர் இடைவெளியில் முட்டம்- மணல்மேடு இடையே கொள்ளிடம் ஆற்றில் 48.85 கோடி ரூபாயில் பாலம் கட்டும் பணி துவங்கப்பட்டுள்ளது. இரு பால பணிகளும் முடிவடைந்தால் தென்மாவட்ட மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும். அத்துடன் வியாபாரம், தொழில்வளம் பெருகும், வேலை வாய்ப்பு ஏற்படும் இப்படி பயனுள்ள பல திட்டங்களின் புகழ் அத்தனையும் தமிழக முதல்வர் கருணாநிதியையே சாரும். இவ்வாறு அமைச்சர் சாமிநாதன் பேசினார்.

Read more »

பணி நிரந்தரம் செய்யக்கோரி கம்ப்யூட்டர் ஊழியர்கள் மனு

கடலூர்:

               கம்ப்யூட்டர் விவர பதிவு ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்யக்கோரி துணை முதல்வருக்கு மனு அனுப்பியுள்ளனர்.

கடலூர் மாவட்டத்தில் பணிபுரியும் கம்ப்யூட்டர் ஊழியர்கள் துணை முதல்வர் ஸ்டாலினுக்கு அனுப்பியுள்ள மனு:

                    கம்ப்யூட்டர் விவர பதிவு ஊழியர்களாக பணி நியமனம் செய்யப்பட்ட நாங்கள் கடந்த ஐந்தாண்டு காலம் தொடர்ந்து அதே நிலையில் இருந்து வருகிறோம். எங்களை நியமனம் செய்த நாளிலிருந்து இதுவரை பணி நிரந்தரம் செய்யாமலும் அரசு ஊழியர்களுக்கு கிடைக்கக் கூடிய சலுகைகளான பணிப்புத்தகம் பராமரிப்பு, விடுப்பு சலுகை, மருத்துவ காப்பீடு மற்றும் பிற சலுகைகள் கிடைக்க பெறாமலேயே பணிபுரிந்து வருகிறோம்.
                 திடீரென எங்களுக்கு உயிரிழப்பு நேரிடின் எங்கள் குடும்பத்திற்கு எவ்வித சலுகைகளும் பெற முடியாத சூழ்நிலையில் உள்ளோம். எனவே எங்கள் மீது கருணை கூர்ந்து நியாயமான சலுகைகள் கிடைக்கவும், பணி நிரந்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior