உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஆகஸ்ட் 02, 2010

சிதம்பரம் அருகே குறுகிய பாலத்தால் அடிக்கடி விபத்து


சிதம்பரம் அருகே சீர்காழி சாலையில் வெள்ளந்தாங்கி அம்மன் ஆலயம் அருகே உள்ள குறுகிய பாலம்.
 
சிதம்பரம்:

          சிதம்பரம் அருகே சீர்காழி ரோட்டில் உள்ள பாலம் குறுகியதாக இருப்பதால் தொடர் விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன.

         சிதம்பரம் - சீர்காழி சாலையில் டி.எஸ்.பி. அலுவலகம் அருகே வெள்ளந்தாங்கி அம்மன் கோயில் அருகில் உள்ள வாய்க்கால் மீது ஒரு குறுகிய பாலம் உள்ளது.  வெள்ளக் காலங்களில் வீராணம் ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் உபரிநீர் செல்வதற்காக ஆங்கிலேயர் காலத்தில் இப் பாலம் கட்டப்பட்டது. எனினும் இதுநாள் வரை அப் பாலம் விரிவாக்கப்படவில்லை.

             சென்னையிலிருந்து சிதம்பரம் வழியாக சீர்காழி, மயிலாடுதுறை, காரைக்கால் செல்லும் முக்கிய தேசிய நெடுஞ்சாலையில் (என்.எச். 45ஏ) இப்பாலம் அமைந்துள்ளது. அதனால் வாகனப் போக்குவரத்து அதிகம் உள்ளது. இக் குறுகிய பாலத்தின் மீது ஒரே நேரத்தில் ஒரு பஸ்தான் செல்ல முடியும். இதனால் இரவு நேரங்களில் இக் குறுகிய பாலத்தில் தொடர் விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் தொடர்ந்து வருகிறது.÷தேசிய நெடுஞ்சாலைத் துறையோ அல்லது தமிழக அரசோ இப்பாலத்தை அகலப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.

Read more »

கலைஞர் காப்பீட்டு திட்ட நோயாளிகளுக்கு குறைந்த செலவில் சிகிச்சை: தனியார் மருத்துவமனைகளுக்கு அமைச்சர் வேண்டுகோள்


சென்னை பெரும்பாக்கம் குளோபல் மருத்துவமனையில் கலைஞர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் இதய அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டு, குணம் அடைந்து வீடு திரும்பும் 10 சி



          லைஞர் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு தனியார் மருத்துவமனைகள் கட்டணத்தை குறைக்க முன்வர வேண்டும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கேட்டுக் கொண்டார்.  

            கோவில்பட்டி பகுதியைச் சேர்ந்த 10 குழந்தைகளுக்கு கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சென்னை பெரும்பாக்கம் குளோபல் மருத்துமனையில் இதய அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. சிகிச்சை முடிந்து திரும்பும் குழந்தைகளை வழியனுப்பும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசியது: 

            இந்த ஆண்டில் 1 லட்சத்து 59 ஆயிரத்து 949 பேருக்கு ரூ.431 கோடியில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. நோயாளிகளுக்கு உரிய நேரத்தில் அறுவைச் சிகிச்சை செய்தால்தான் அவர்களது விலைமதிப்பில்லாத உயிரைக் காப்பாற்ற முடியும். ஆனால், அனைத்து நோயாளிகளுக்கும் அரசு மருத்துவமனையில் உயர் சிகிச்சை அளிக்க இயலாது. எனவேதான் தனியார் மருத்துவமனைகளின் பங்களிப்பின் மூலம் கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தின் உயர் நோக்கம் நிறைவேறி உள்ளது.

             கடந்த ஆண்டில் கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 14 ஆயிரத்து 624 பேருக்கு இதய அறுவைச் சிகிச்சையும், 31 ஆயிரத்து 636 பேருக்கு மூட்டு அறுவைச் சிகிச்சையும், 18 ஆயிரத்து 490 பேருக்கு சிறுநீரக அறுவைச் சிகிச்சையும், 9 ஆயிரத்து 246 பேருக்கு நரம்பியல் அறுவைச் சிகிச்சையும், 26 ஆயிரத்து 30 பேருக்கு புற்றுநோய்க்கான அறுவைச் சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பள்ளி சிறார் இதய பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் இதுவரை 3 ஆயிரத்து 264 குழந்தைகளுக்கு இதய அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.  

               குளோபல் மருத்துவமனையின் தலைவர் கே.ரவீந்திரநாத், தலைமை இதய அறுவைச் சிகிச்சை மருத்துவர் என்.மதுசங்கர், அரசு சுகாதாரத் துறைச் செயலர் வி.கு.சுப்புராஜ் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.

Read more »

புதிய மின் கட்டணத்தை தெரிந்து கொள்வது எப்படி?

            தமிழகத்தில் நிர்ணயிக்கப்பட்டுள்ள புதிய மின் கட்டணம் எப்படி கணக்கிடப்படும் என்ற சந்தேகம் பொதுமக்களிடையே எழுந்துள்ளது

         .தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம், 7 ஆண்டுகளுக்குப் பிறகு மின் கட்டணத்தை மறுநிர்ணயம் செய்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த புதிய மின் கட்டணம், ஞாயிற்றுக்கிழமை (ஆக. 1) தேதி முதல் அமலுக்கு வந்தது. இந்த மின் கட்டண உயர்வால் 1.53 கோடி மின் நுகர்வோருக்கு கட்டண உயர்வு இல்லை;  600 யூனிட்டுகளுக்கு மேல் பயன்படுத்தும் வீட்டு மின் நுகர்வோருக்குத்தான் ரூ.1 கூடுதல் கட்டணம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், புதிய மின் கட்டணம் எப்படி கணக்கிடப்படும் என்ற சந்தேகம் பொதுமக்களிடையே எழுந்துள்ளது. தமிழகத்தில் 2 கோடிக்கும் அதிகமான மின் நுகர்வோர் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. 

           இதில் 3.21 லட்சம் பேர், 600 யூனிட்டுகளுக்கு மேல் மின்சாரத்தைப் பயன்படுத்துகிறார்கள் என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இவர்களுக்கு மட்டுமே இப்போது அறிவிக்கப்பட்டுள்ள ஒரு யூனிட்டுக்கு ரூ.1 கூடுதல் கட்டணம் பொருந்தும்.

புதிய மின் கட்டணத்தை எப்படி தெரிந்து கொள்வது?

            இப்போது 60 நாள்களுக்கு ஒரு முறை மின் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. உதாரணமாக மின் நுகர்வோர் ஒருவரின் வீட்டில் இரண்டாவது மாதத்தில் 20-ம் தேதி மின் நுகர்வு கணக்கு (மீட்டர் ரீடிங்) எடுக்கப்படுகிறது.  உதாரணத்துக்கு மொத்தம் 60 நாள்களுக்கு சேர்த்து 600 யூனிட் மின்சாரத்தைப் பயன்படுத்தியுள்ளார் என்று வைத்துக் கொள்வோம். இந்த 600 யூனிட்டை, 60 நாள்கள் என கணக்கிட்டு வகுத்து கொள்ள வேண்டும். அதில் ஒரு நாளுக்கு சராசரியாக 10 யூனிட்டுகள் மின்சாரத்தை நுகர்வோர் பயன்படுத்தியுள்ளார் என தெரியவரும். 

              இதில் ஆகஸ்ட் 1-ம் தேதிக்கு முந்தைய தேதி வரை உதாரணமாக 40 நாள்கள் வரை  நுகர்வோர் பயன்படுத்திய மின்சாரத்தை 40 நாள்களாக கணக்கிட்டுக் கொண்டு, 10 யூனிட்டுகளுடன் பெருக்கிக் கொள்ள வேண்டும். அதில் கிடைக்கும் 400 யூனிட்டுகளை கொண்டு, முதல் 40 நாள்களுக்கு பழைய கட்டணமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.  மீதமுள்ள 20 நாள்களுக்கு அதாவது 200 யூனிட்டுகளை புதிய கட்டணம் அமலாகும்  தேதியில் இருந்து கணக்கிட்டு ரூ. 1 கூடுதல் கட்டணத்துடன் சேர்த்து புதிய கட்டணம் வசூலிக்கப்படும் என்று மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior