உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஆகஸ்ட் 10, 2010

சென்னை பல்கலை. இளங்கலை உடனடி தேர்வு முடிவு வெளியீடு

            சென்னைப் பல்கலைக்கழக இளங்கலை பட்ட உடனடித் தேர்வு முடிவுகளும், மறுமதிப்பீட்டு தேர்வு முடிவுகளும் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வு முடிவுகளை www.unom.ac.in என்ற இணைய தளத்தில் செவ்வாய்க்கிழமை மாலை முதல் பார்க்க முடியும். குறிப்பிட்ட சில தனியார் இணைய தளங்களிலும் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இவற்றில் காலை முதலே முடிவுகளைத் தெரிந்து கொள்ளலாம்.

Read more »

கடலூரில் சூறாவளி: 250 ஏக்கரில் வாழை சேதம்


 
கடலூர்:
 
          கடலூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் அடித்த சூறாவளிக் காற்றினால் 250 ஏக்கரில் இருந்த வாழை மரங்கள் சேதம் அடைந்தன.
 
         தென்மேற்கு பருவக் காற்றினால் கடலூரில் சில தினங்களாக மாலை நேரங்களில் மழை பெய்து வருகிறது. இரு நாள்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் சூறாவளிக் காற்றுடன் பலத்த மழை பெய்தது. கடலூர் மாவட்டத்தில் 10 ஆயிரம் ஏக்கரில் வாழை பயிரிடப்பட்டு உள்ளது. இரு நாள்களாக மழையுடன் பலத்த சூறாவளிக் காற்றும் வீசியதால், வாழை மரங்கள் முறிந்து விழுந்து சேதம் அடைந்தன.
 
           கடலூரை அடுத்த கிழக்கு ராமாபுரம், எஸ்.புதூர், நடுக்குப்பம் உள்ளிட்ட கிராமங்களில் 250 ஏக்கரில் பயிரிடப்பட்டு இருந்த 2.5 லட்சம் வாழை மரங்கள் முறிந்து விழுந்து சேதம் அடைந்ததாக விவசாயிகள் தெரிவித்தனர்.
 
இது குறித்து ராமாபுரம் ஊராட்சி மன்றத் தலைவரும் வாழை விவசாயியுமான ஞானசேகரன் கூறுகையில்,
 
            "இரு நாள்களில் அடித்த சூறாவளிக் காற்றினால் 250 ஏக்கரில் இருந்த வாழை மரங்கள் முறிந்து விழுந்து சேதம் அடைந்துவிட்டன. அனைத்து வாழை மரங்களும் பூக்கள் உதிர்ந்து காய்கள் முற்றும் நிலையில் இருந்தன. இன்னும் 2 மாதத்தில் அறுவடைக்கு வர வேண்டிய வாழை மகசூல் முற்றிலும் சேதம் அடைந்து உள்ளது' என்றார். 
 
இது குறித்து வேளாண் துறையில் கூறியது
 
             "தோட்டக் கலைத் துறையினர் மற்றும் வருவாய்த் துறையினர் கணக்கெடுப்பு நடத்த இருக்கிறார்கள். அரசு விதிகளுக்கு உள்பட்டு சேதம் இருந்தால் இழப்பீடு வழங்கப்படும்' என்று தெரிவித்தனர்.

Read more »

தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகள் விரைவில் கணினி மயம்: அமைச்சர் கோ.சி. மணி


தமிழகத்தில் உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளை கணினிமயமாக்க உருவாக்கப்பட்ட மென்பொருளை இந்தியா முழுவதும் பயன்படுத்தும் வகையில் நபார்டு தலைவர் யு.சி.
 
சென்னை:

         அனைத்து தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளும் வரும் மார்ச் மாதத்துக்குள் கணினிமயமாக்கப்படும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் கோ.சி. மணி தெரிவித்தார். 

          தமிழகத்தில் உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளை கணினிமயமாக்க உருவாக்கப்பட்ட மென்பொருளை இந்தியா முழுவதும் பயன்படுத்தும் வகையில் நபார்டு வங்கியில் ஒப்படைக்கும் நிகழ்ச்சி சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களின் ஒன்றிய அலுவலகத்தில் திங்கள்கிழமை நடந்தது. கனிணி மென்பொருளை கூட்டுறவுத்துறை அமைச்சர் கோ.சி. மணி, நபார்டு தலைவர் யு.சி. சாரங்கியிடம் ஒப்படைத்தார். 

இதைத் தொடர்ந்து அமைச்சர்  கூறியது: 

             கூட்டுறவு வங்கிகளை நவீனமயமாக்கி, அதன் செயல் திறனை அதிகரித்து, வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான சேவை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் வணிக வங்கிகளுடன் சம நிலையில் போட்டியிடவும், மத்திய, நகர கூட்டுறவு வங்கிகளையும் கணினிமயமாக்க வேண்டும் எனவும் திட்டமிட்டு, 2007-ம் ஆண்டு மென்பொருள் உருவாக்கப்பட்டது. இப்போது 1,032 மத்திய மற்றும் நகரக் கூட்டுறவு வங்கிக் கிளைகளில், 1,001 கிளைகளில் இந்த மென்பொருள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் | 38 லட்சம் செலவில் பொதுவான மென்பொருள் உருவாக்கி, தமிழகத்தில் உள்ள 4 ஆயிரத்து 522 தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கிகளில் பயன்படுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது. 

               இதை இந்தியா முழுவதும் உள்ள தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கிகளுக்கு பயன்படுத்தும் வகையிலும் தேசிய வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியிடம் (நபார்டு) ஒப்படைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வரும் மார்ச் மாதத்துக்குள் அனைத்து தொடக்க கூட்டுறவு வங்கிகளும் கணினிமயமாகும் என்றார் கோ.சி. மணி. நிகழ்ச்சியில் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை முதன்மைச் செயலாளர் ஸ்வரண்சிங், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் யதீந்திர நாத் ஸ்வைன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior