உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, செப்டம்பர் 25, 2010

கடலூரில் மழையில் ஒழுகிய அரசு பஸ் ஓய்வு பெற்ற அரசு அலுவலருக்கு ரூ.2 ஆயிரம் வழங்க கோர்ட் உத்தரவு

கடலூர்:

                        மழையில் அரசு பஸ் ஒழுகியதால், அதில் பயணம் செய்து பாதிக்கப்பட்ட ஓய்வுபெற்ற அரசு அலுவலருக்கு, 2 ஆயிரம் இழப்பீடு வழங்க கடலூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது. கடலூர் மஞ்சக்குப்பத்தில் வசிப்பவர் ராமமூர்த்தி. மாவட்ட நீதிமன்றத்தில் சிரஸ்தாராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். 30-11-2008 அன்று ராமமூர்த்தி, கடலூரில் இருந்து புதுவைக்கு, அரசு போக்குவரத்துக் கழக பஸ்ஸில் பயணம் செய்தார். அப்போது மழை பெய்தது.

                 பஸ்ஸின் ஷட்டர் மற்றும் கூரை சேதம் அடைந்து இருந்ததால், மழை நீரில் ராமமூர்த்தி நனைய நேரிட்டது. இதுபற்றி புகார் செய்தபோது நடத்துநர் எந்த பதிலும் அளிக்கவில்லை. இதனால் ராமமூர்த்தியின் உடல் நிலை பாதிக்கப்பட்டதுடன், மனரீதியாகவும் பாதிக்கப் பட்டார்.÷எனவே இதுகுறித்து விழுப்புரம் அரசு போக்குவரத்துக்கழக, நிர்வாக இயக்குநர் மற்றும் கடலூர் கிளை மேலாளருக்கு புகார் மனு அனுப்பியும், அவர்கள் அளித்த பதில் திருப்தியாக இல்லை. எனவே கடலூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில், மாவட்ட நுகர்வோர் பாதுகாப்புப் பேரவை மூலமாக வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கில் ராமமூர்த்தி சார்பில் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்புப் பேரவை பொதுச் செயலாளர் எம்.நிஜாமுதீன் ஆஜராகி வாதாடினார். 

                 வழக்கை மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி கணேசன், உறுப்பினர்கள் கலையரசி ராமதாஸ், பாண்டியன் ஆகியோர் விசாரித்து அண்மையில் தீர்ப்பு கூறினர். அரசு போக்குவரத்துக் கழகமும், பஸ் நடத்துநரும் அளித்த வாக்குமூலங்கள் முரண்பாடாக உள்ளதால், அரசு பஸ்ஸில் சேவைக் குறைபாடு உள்ளது. எனவே அரசு போக்குவரத்துக் கழகத்தின் பச 32 ச 2256 என்ற பதிவு எண் கொண்ட அந்த பஸ்சை , கடலூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ஆய்வு செய்து சான்றளிக்க வேண்டும். அரசு போக்குவரத்துக் கழகம் உடனடியாக அந்த பஸ்ûஸ சரிசெய்து, அனைத்து இருக்கைகளும் பயணம் செய்யத் தகுதியானவைகளாக மாற்ற வேண்டும். 

                        ராமமூர்த்திக்கு சேவைக் குறைபாட்டுக்காகவும் மன உளைச்சலுக்காகவும் நஷ்டஈடாக 1000 மற்றும் வழக்கு செலவுத் தொகையாக 1000, விழுப்புரம் கோட்ட அரசு போக்குவரத்துக் கழகம், 2 மாதங்களில் வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டு உள்ளது.

Read more »

Spectroscopy has wide-ranging applications: experts


Vice-Chancellor of Annamalai University M.Ramanathan releasing the book on the proceedings of the international conference at Chidambaram on Wednesday. 
 
CUDDALORE: 

                Spectroscopy has wider applications in the spheres of medicine, industry, environment, agriculture, power and construction. This is further spurred by advances in instrumentation that has facilitated development of numerous infrared and Raman spectroscopic methods.
 
                These views were expressed by the experts, both foreign and domestic, who participated in the inauguration of the three-day international conference on “Recent frontiers in applied spectroscopy” organised by the Department of Physics, Annamalai University, at Chidambaram on Wednesday. In his keynote address James R.Durig of University of Missouri, US, said that the knowledge on spectroscopy dated back to early 18th Century. However, its scope was then much limited and did not extend beyond the regime of infrared radiation.

                Mr. Durig said that Sir C.V.Raman had made significant contributions to the field of spectroscopy. Though termed as “crude spectrometer” it was an impressive device that delineated the light scattering from sunlight and acted as a catalyst for further research. Hence, Mr. Durig said that the study of spectroscopy was “not a new field but only the name was new” as it had developed over a period of the past two centuries. Nowadays, spectroscopy had wide ranging applications, he added.

                    Vice-Chancellor of Annamalai University M.Ramanathan said that the university, established about eight decades ago, had been concentrating on research works and had won many national and international laurels. Dr. Ramanathan said that 40 per cent of Indian population was in the age group of 18 to 25 years but only 12 per cent of them were into higher education. Having realised this phenomenon the unitary university was encouraging research works in all its 50 departments.

                  Being a surgeon he knew fairly well the usefulness of spectroscopy in the field of medicine. The research in basic sciences would give an impetus to innovations in the methods of medical treatment. The Vice-Chancellor further said that the Department of Physics had an impressive record in research works to its credit. His focus was on interdisciplinary approach in deriving the maximum output to attain better results and to achieve the targets. A.N.Kannappan, Dean, Faculty of Science and chairman of the conference, and Pl.Rm.Palaniappan, Professor of Physics and convenor, spoke.

Read more »

கடலூரில் களை இழந்த பூங்காக்கள்


சிதைந்த செயற்கை நீருற்றுகள் - திருடுபோன வண்ண விளக்குகள் - காய்ந்த புல் தரைகள்.
 
கடலூர் :  

               கடலூரில் 5 ஆண்டுகளுக்கு முன், பல லட்சம் செலவில் உருவாக்கப்பட்ட செயற்கை நீரூற்றுகள், பூங்காக்கள், வண்ண விளக்குகள் ஆகியன பராமரிப்பு இன்றி சிதைந்து கிடக்கின்றன. ககன்தீப்சிங்பேடி,கடலூர் மாவட்ட ஆட்சியராக இருந்தபோது, 2004, 2005-ம் ஆண்டுகளில், கடலூர் நகராட்சிப் பகுதியில் நகரை அழகுப்படுத்தும் திட்டங்கள் பல நிறைவேற்றப்பட்டன.

                   பல்வேறு நிதிஉதவிகளைப் பெற்று, பிரதான சாலைகள் அனைத்திலும் சாலைப் பகுப்பான்கள் (டிவைடர்கள்) அமைக்கப்பட்டன. சாலை நடுவில் கம்பங்கள் நடப்பட்டு, மின் விளக்கு அமைக்கப் பட்டன.பிரதான சாலைகளின் ஓரங்களில் சிறிய பூங்காக்களும் அவற்றின் நடுவே, வண்ண விளக்குகளுடன் கூடிய செயற்கை நீரூற்றுகள் உருவாக்கப்பட்டன. நமக்கு நாமே திட்டத்தில், கடலூர் சிப்காட் தொழிற்சாலைகள் அளித்த பல லட்சம் நிதி உதவிகளுடன், நகராட்சி நிதியையும் சேர்த்து, இந்த செயற்கை நீரூற்றுகள், நகரில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அமைக்கப்பட்டன.

               சாலைகளில் செல்வோர் பார்த்து மகிழும் வகையில் அமைக்கப்பட்ட இந்த பூங்காவுடன் கூடிய செயற்கை நீரூற்றுகளில், ஒன்றிரண்டைத் தவிர ஏனைய அனைத்தும், நகராட்சியால் பராமரிக்கப்பட்டு வந்தன. மற்ற சில நகராட்சிகளைப் போல், கடலூரில், தண்ணீர் தட்டுப்பாடு எதுவும் வந்து விடவில்லை. ஆனாலும் கடந்த 2 ஆண்டுகளாக, இந்த சிறிய பூங்காக்களுக்கு தண்ணீர் ஊற்றாமலும், விளக்குகள், நீரூற்றுக்களைப் பராமரிக்காமலும், அவை பரிதாபமாகக் களையிழந்து காணப்படுகின்றன.

                 சிதம்பரம் சாலையில் ரயில்வே மேம்பாலம் சந்திக்கும் இடத்தில், வானவில் தோன்றும் வகையில் அமைக்கப்பட்டு இருந்த வண்ண விளக்குகள், கொத்தாகத் திருடு போய்விட்டன.இதேபோல் மற்ற பூங்காக்களிலும் அமைக்கப்பட்டு இருந்த வண்ண விளக்குகள், செயற்கை நீரூற்றுகளுக்கான மோட்டார்கள் அனைத்தும், திருடு போய்விட்டன. குறைந்தபட்சம், இவை காணாமல் போய்விட்டன என்று, காவல் நிலையத்தில் புகார்கள் கூட, நகராட்சியால் அளிக்கப்படவில்லை என்பது, வேதனை தரும் விஷயம்.

             இதேபோல் சாலைகள் நடுவே அமைக்கப்பட்ட டிவைடர்களில், விலை உயர்ந்த பூஞ்செடிகள், கொரியன் புல் தளங்கள் கண்ணைக் கவரும் வகையில் அமைக்கப்பட்டு இருந்தன. இவற்றுக்கு முறையாக தண்ணீர் ஊற்றாததாலும், மாடுகள் மேய்வதைக் கண்டும் காணாமல் விட்டதாலும், பட்டுப் போனதுடன், அவைகள் இப்போது காட்டுச் செடிகள் நிறைந்த புதர்களாய் காட்சி அளிக்கின்றன.அறிவிப்புப் பலகைகளும் சேதம் அடைந்து கிடக்கின்றன. ஒருமுறை இதுதொடர்பாக செய்தியாளர்கள் முன்னிலையிலேயே நகராட்சி ஆணையரை மாவட்ட ஆட்சியர் கடுமையாகச் சாடினார்.

                 தொழிற்சாலைகளின் உதவியுடன், நகரை அழகுப்படுத்தும் திட்டத்தை ஏன் மேற்கொள்ளக் கூடாது என்றும் ஆணையரிடம் கேள்வி எழுப்பினார்.ஆனாலும் எந்த மாற்றமும் காணப்படவில்லை. ஏற்கெனவே தொழிற்சாலைகள் வழங்கிய பல லட்சத்தால் உருவாக்கப்பட்ட பூங்காக்கள், செயற்கை நீரூற்றுகள் அனைத்தும் பராமரிப்பு இன்றி பாழாய்க் கிடக்கும் நிலையில், எந்த முகத்துடன் மீண்டும் தொழிற்சாலைகளை அணுகுவது என்ற நாணம், நகராட்சிக்கு ஏற்பட்டு இருக்கலாம்."எதற்கும் பணமில்லை என்று கைவிரிக்கும் நகராட்சி, புதிதாக எதையும் செய்து விட வேண்டாம். 

                         முந்தைய காலங்களில் உருவாக்கப்பட்டவைகளையாவது  பராமரித்துப் பாதுகாக்கும் எண்ணம் கூட, நகராட்சி அதிகாரிகளுக்கும் ஊழியர்களுக்கும் இல்லாதது, எங்களின் துரதிருஷ்டமாகத்தான் இருக்கும்; என்று கடலூர் மக்கள் கவலை தெரிவிக்கிறார்கள்.இதற்கெல்லாம் நகராட்சியில் கூட்டம் நடத்தி, தீர்மானங்கள் நிறைவேற்ற வேண்டிய கட்டாயம் இல்லை. நகராட்சி ஊழியர்கள் தங்கள் கடமையை உணர்ந்து செயலாற்றினாலே போதும். ஊதியம் பெற்று உழைப்போருக்கு, அந்தக் கடமை உணர்வுகூட இல்லாதபோது, ஆண்டுக்கு 5 கோடி வரி செலுத்துவதால் பயன் ஏதும் இல்லை என்கிறார்கள் கடலூர் பொதுமக்கள்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior