உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், அக்டோபர் 14, 2010

என்எல்சி விவகாரம்: பிரதமரை சந்திக்க முடிவு


                     என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளர்கள் கோரிக்கை தொடர்பாக பிரதமரை சந்தித்து கோரிக்கை மனு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

                      என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு சமவேலைக்கு சமஊதியம் வழங்க வலியுறுத்தி நெய்வேலியில் உள்ள அனைத்து தொழிற்சங்கங்களும் செப்டம்பர் 19 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில் மண்டல தொழிலாளர் நல ஆணையர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் அடங்கிய குழு பல சுற்றுப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டும் போராட்டம் முடிவுக்கு வரவில்லை.

                   என்எல்சி நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கமான தொமுசவுடன், என்எல்சி நிர்வாகம் அக்டோபர் 10 ம் தேதி சென்னையில் ஒப்பந்தம் செய்து கொண்டதையடுத்து தொழிலாளர்களில் ஒரு பிரிவினர் பணிக்குச் செல்லத் தொடங்கினர். இந்நிலையில் நெய்வேலியில் 13.10.2010 அன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. 

இதுகுறித்து அண்ணா தொழிற்சங்கப் பேரவையின் செயலரும், அதிமுக எம்எல்ஏவுமான சின்னச்சாமி கூறியதாவது,
                  என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளர்கள் கோரிக்கை தொடர்பாக இம்மாதம் 20ம் தேதி அனைத்துக் கட்சி எம்பிக்கள் குழுவினர் பிரதமரை சந்தித்து கோரிக்கை மனு அளிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

Read more »

சரியான முகவரியினை தெரிவிக்காத 30 லட்சம் செல்போன் இணைப்புகள் துண்டிப்பு

                     சரியான முகவரியினை தெரிவிக்காத காரணத்தால் நாடு முழுவதும் 30 லட்சம் செல்போன் சந்தாதாரர்களின் இணைப்புகளை மத்திய அரசு துண்டித்துள்ளது.
                 நாடு முழுவதும் செல்போன் சேவை நிறுவனங்கள் நாளுக்கு நாள் அதிகரிததவண்ணம் உள்ளன. போட்டியின் காரணமாக 5 ரூபாய் அளவுக்கு சிம்கார்டுகளை விற்பனை செய்து வருகின்றனர். இப்படி சிம்கார்டு விற்பனை செய்வதால் சரியான முகவரியின்றி போலி முகவரி கொடுத்து சிம்கார்டுகளை வாங்குவதாகவும் இத்தகைய சிம்கார்டுகள் பயங்கரவாத செயலுக்கு காரணமாக அமையும் என புகார் எழுந்தது.

                    இதையடுத்து மத்திய அரசு அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி நாட்டின் பாதுகாப்பு, பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல் காரணமாக 30 லட்சம் செல்போன் சந்தாதாரர்களின் இணைப்புகளை துண்டித்துள்ளதாக கூறப்படுகிறது.  இந்நிலையில் முன்னணி செல்போன் சேவைநிறுவனங்களின் தலைவர்கள் மத்திய அரசு, உள்துறை அமைச்சக அதிகாரிகளை சந்தித்து விரைவில் வாடிக்கையாளர்களின் முகவரிகளை தெரிவிப்பதாக அறிவித்துள்ளது.

Read more »

கடலூர் மாவட்டத்தில் கம்பு அறுவடைக்கு தொழில்நுட்பங்கள்

கடலூர்:
 
                  கம்பு அறுவடைக்கு முன்னும், பின்னும் விவசாயிகள் மேற்கொள்ள வேண்டிய தொழில்நுட்பங்களை, வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை வெளியிட்டுள்ளது.  
 
வேளாண் துணை இயக்குநர் நா.தனவேல், வேளாண் அலுவலர் ந.சுரேஷ் ஆகியோர், புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: 
 
                    கடலூர் மாவட்டத்தில் கம்பு அறுவடை பரவலாக நடைபெற்று வருகிறது. விவசாயிகள் வீரிய ஒட்டு கம்பு ரகங்களை அதிக அளவில் பயிரிட்டு உள்ளனர்.  விவசாயிகள் தங்கள் விளை பொருள்களுக்கு அதிக விலை கிடைக்கும் வகையில், கம்பு அறுவடையின்போது, கீழ்க்காணும் அறுவடைக்கு முன்செய் மற்றும் அறுவடைக்கு பின்செய் தானிய நேர்த்தி தொழில்நுடபங்களைத் தவறாது கடைபிடிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 
 
                   கதிர்கள் முதிர்ந்து இலைகள் பழுப்பு நிறமாக மாறியதும், கதிர்களை மட்டும் தனியாக அறுவடை செய்ய வேண்டும். மழை நேரங்களில் அறுவடை செய்தால், பூஞ்சாணம் தாக்கிய கதிர்களை, தனியே பிரித்துக் காய வைக்க வேண்டும்.  காய வைத்த கதிர்களில் இருந்து கதிர் அடிக்கும் கருவிகள் அல்லது கல் உருளைகளை பயன்படுத்தி தானியங்களைப் பிரித்து எடுக்க வேண்டும். பின்னர் மணிகளை காற்றில் தூற்றி, இலைகள் சருகுகளை நீக்க வேண்டும். 
 
                        விதைகள், கல், மண், இதர தானியங்களையும் உடைந்த தானியங்களையும் தனியாக பிரித்து நீக்கி விடவும்.  கம்பினை நன்கு காய வைத்து நிழலில் உலர்த்தி, சுத்தமான கோணிப்பைகளில் நிரப்பி மூடி சேமிக்கவும். உள்பக்கம் பாலித்தீன் தாள் பொருத்திய சாக்குகளில் தானியங்களை சேமித்தால், மழைக்காலங்களில் ஈரப்பதத்தினால் பாதிப்பு ஏற்படாமல் இருக்கும்.  காய வைத்த கம்பினை சேமிக்கும்போது மாதம் ஒருமுறை வெயிலில் காயவைத்து ஆறவிட்டு, சேமிப்பது முக்கியம். இல்லாவிட்டால் வண்டுகள் தாக்கி, கம்பின் தரம் பாதிக்கப்படும்.  

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior