உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜூன் 15, 2011

சிதம்பரம் அருகே பெண் கற்பழித்து புதைப்பு: 2 பேர் கைது, 3 பேரை பிடிக்க தனிப்படை



சிதம்பரம் அருகே கற்பழித்து கொன்று புதைக்கப்பட்ட  பெண் பிணம் தோண்டி எடுப்பு: தலைமறைவான 3 பேரை பிடிக்க போலீசார் தீவிரம்

நெய்வேலி:
            நெய்வேலியை சேர்ந்தவர் ராமச்சந்திரன் இவரது மகள் கவிதா (வயது 22) இவர் நெய்வேலி மெயின் பஜாரில் உள்ள ஒரு பேக்கரியில் வேலை செய்து வந்தார்.
 
            கடந்த ஏப்ரல் மாதம் 26-ந் தேதி வேலைக்கு சென்று விட்டு இரவு 9 மணிக்கு சைக்கிளில் திரும்பி வந்து கொண்டிருந்தார். பின்னர் அவர் வீட்டுக்கு வந்து சேரவில்லை.  இதுகுறித்து நெய்வேலி தெர்மல் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். கவிதாவின் செல்போன் கடலூர் மாவட்டம் நரியங்குப்பத்தை சேர்ந்த கிருஷ்ணராஜியிடம் (22) இருப்பது தெரியவந்தது.
 
                  செல்போனில் அவர் வேறு ஒரு சிம்கார்ட்டை போட்டு பயன்படுத்தி வந்தார். ஆனால் செல்போன் குறியீட்டு எண்ணை (ஐ.எம்.இ.ஐ.) வைத்து அவரிடம் கவிதாவின் செல்போன் இருப்பதை கண்டுபிடித்தனர். நெய்வேலி மத்திய பஸ்நிலையம் அருகே நின்ற கிருஷ்ணராஜை நேற்று போலீசார் மடக்கி பிடித்து விசாரித்தனர்.  அப்போது கவிதாவை நண்பர்கள் 4 பேருடன் காரில் கடத்தி சென்று நெய்வேலி அருகே உள்ள சிலம்பிநாதன் பேட்டை முந்திரி தோப்பில் கற்பழித்து கொன்று விட்டு நகை, செல்போன் ஆகியவைகளை பறித்துக்கொண்டு புதுசத்திரம் அருகே கடலூர்-சிதம்பரம் சாலையில் மேட்டுப்பாளையம்- தீர்த்தனகிரி செல்லும் வழியில் சாலையோரம் பிணத்தை புதைத்து விட்டதாக கூறினார்.
 
            அவர் கொடுத்த தகவலின் பேரில் நரியங்குப்பத்தை சேர்ந்த பிரகாஷ் (22) என்பவனையும் போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த கொலையில் பத்திரக்கோட்டையை சேர்ந்த வேன் டிரைவர் தவமணி, கிருஷ்ணமூர்த்தி, சுதந்திரராஜன் ஆகியோருக்கு தொடர்பிருப்பது தெரிய வந்தது. கைது செய்யப்பட்ட கிருஷ்ணராஜியும், பிரகாசும் கவிதா கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட இடத்தை நேற்று அடையாளம் காட்டினார்கள். அந்த இடத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
 
               கவிதாவின் பிணம் இன்று தோண்டி எடுக்கப்படுகிறது. தாசில்தார் அசோக்ராஜ் முன்னிலையில் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரி டாக்டர் பராசக்தி தலைமையில் பிணம் பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது. இந்த கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள தவமணி, சுதந்திர ராஜன், கிருஷ்ணமூர்த்தி ஆகியோரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. 3 பேரும் நெய்வேலி, பண்ருட்டி ஆகிய பகுதியில் உள்ள முந்திரி தோப்பில் பதுங்கி இருக்கிறார்களா என்று போலீசார் தேடி வருகின்றனர். 


Read more »

கடலூர் மாவட்டத்தில் நீதிபதி ரவிராஜ பாண்டியன் பரிந்துரைப்படி புதிய கல்வி கட்டணப் பட்டியல் விநியோகம்

கடலூர்:

             கடலூர் மாவட்ட மெட்ரிக் மற்றும் நர்சரிப் பள்ளிகளுக்கான புதிய கல்விக் கட்டணப் பட்டியல், செவ்வாய்க்கிழமை சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு வழங்கப் பட்டது. 

              மெட்ரிக் பள்ளிகள், தனியார் பள்ளிகள், மற்றும் நர்சரிப் பள்ளிகள் அதிகப்படியான கல்விக் கட்டணம் வசூலிப்பதாகப் பெற்றோர் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தனர். எனவே மெட்ரிக் பள்ளிகளின் கல்விக் கட்டணத்தை முறைப்படுத்த ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற  நீதிபதி கோவிந்தராஜன் தலைமையில் தமிழக அரசு குழு அமைத்து உத்தரவிட்டது.  

             மெட்ரிக் பள்ளிகள், மாணவர்களிடம் வசூலிக்க வேண்டிய கட்டணங்களை, கடந்த ஆண்டு மே 7-ம் தேதி, நீதிபதி கோவிந்தராஜன் அறிவித்தார். பின்னர் நீதிபதி கோவிந்தராஜன் ராஜிநாமா செய்தார். அவரது அறிவிப்பை எதிர்த்து 6,400 மெட்ரிக் பள்ளிகள் மேல்முறையீடு செய்தன. மேல்முறையீட்டு மனுக்களை நீதிபதி ரவிராஜ பாண்டியன் தலைமையிலான குழு விசாரித்து, புதிய கல்விக் கட்டண விவரங்களை திங்கள்கிழமை வெளியிட்டது.  புதிய கல்விக் கட்டண விவரங்கள் அடங்கிய பட்டியல்களை கடலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் செ.அமுதவல்லி சம்மந்தப்பட்ட பள்ளி நிர்வாகிகளிடம் செவ்வாய்க்கிழமை வழங்கினார். 

               தனித்தனி கவர்களில் இருந்த கட்டணப் பட்டியல்கள் உரிய பள்ளிகளிடம் ஒப்படைக்கப் பட்டன.  கடலூர் மாவட்டத்தில் 217 மெட்ரிக், நர்சரிப் பள்ளிகள், நீதிபதி கோவிந்தராஜன் குழு அறிவித்த கட்டணங்களை எதிர்த்து, மேல்முறையீடு செய்திருந்தன. இவற்றில் 210 பள்ளிகளுக்கு கட்டணப் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டு விட்டன. 7 பள்ளிகளுக்கான மேல்முறையீடு பரிசீலனையில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.  செவ்வாய்க்கிழமை 70 பள்ளிகளைச் சேர்ந்த நிர்வாகிகள், கடலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் வந்து, கட்டணப் பட்டியலைப் பெற்றுச் சென்றனர். 

                 மற்றவர்கள் புதன்கிழமை வந்து பெற்றுச் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  புதிய கல்விக் கட்டணம் மெட்ரிக் பள்ளி நிர்வாகிகளுக்குப் பெரிதும் மகிழ்ச்சி அளிப்பதாக மெட்ரிக் பள்ளி நிர்வாகிகள் பலர் கருத்து தெரிவித்தனர்.




Read more »

கடலூர் மாவட்டத்தில் முதியோர் உதவித் தொகை கோரி குவியும் விண்ணப்பங்கள்

கடலூர்:
 
             கடலூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் ஜமாபந்தி கூட்டங்களில், முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு முதியோர் உதவித் தொகை கோரி விண்ணப்பங்கள் குவியத் தொடங்கி உள்ளன.  
 
          கடலூர் கோட்டாட்சியரிடம் மட்டும் கடந்த 7 நாள்களில் முதியோர் உதவித் தொகைக்காக சுமார் 800 மனுக்கள் பெறப்பட்டு இருப்பதாக வருவாய்த்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.  செவ்வாய்க்கிழமை முதியோர் உதவித் தொகை கோரி, கடலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் 200-க்கும் மேற்பட்டோர் குவிந்தனர். இதே நிலைதான் மற்ற வட்டாட்சியர் அலுவலகங்களிலும் ஏற்பட்டதாக வருவாய்த் துறையினர் தெரிவித்தனர்.  
 
இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 
 
           முதியோர் ஓய்வூதியத் தொகையை, முதல்வர் ஜெயலலிதா ரூ.500-ல் இருந்து ரூ. 1,000 ஆக உயர்த்தி இருக்கிறார். இதனால் ஏராளமானோர் முதியோர் உதவித் தொகை கோரி மனு அளிக்கிறார்கள். முதியோர் உதவித் தொகை வழங்க விதிமுறைகள் உள்ளன.  விதிமுறைகள் பொருந்தாத, வசதிபடைத்த பலரும் விண்ணப்பிக்கிறார்கள். வசதிபடைத்த பலருக்கு முதியோர் உதவித் தொகை வழங்கப்பட்டும் வருகிறது. 
 
               ஆனால் தகுதி உள்ள ஏழை எளிய மக்கள் பலருக்கு, முதியோர் உதவித் தொகை கிடைப்பது இன்னும் குதிரைக் கொம்பாகத்தான் உள்ளது என்றார்.  கடலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடந்த ஜமாபந்தியில், ஆதரவற்ற விதவைகள் மூவருக்கும், 3 விவசாயக் கூலித் தொழிலாளர்களுக்கும் ஓய்வூதியத்துக்கான ஆணைகளை, கோட்டாட்சியர் முருகேசன் வழங்கினார்.
 
 
 

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior