உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், செப்டம்பர் 12, 2011

கடலூர் மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட ம.தி.மு.க.வினர் விருப்ப மனு

 http://mmimages.mmnews.in/Articles/2011/Sep/c7d14270-9650-42f0-a79a-d0886a0fd2e9_S_secvpf.gif
கடலூர்
 
          கடலூர் மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்புகிறவர்களிடம் இருந்து விருப்ப மனுவை அந்த அந்த கட்சியில் உள்ள நிர்வாகிகள் பெற்று வருகிறார்கள். 
            அதன்படி கடலூர் மாவட்ட ம.தி.மு.க. சார்பில் கடலூர், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி ஆகிய 3 சட்டசபை தொகுதிக்குட்பட்ட நகராட்சி, பேரூராட்சி, மாவட்ட ஊராட்சி, ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட விரும்புகிறவர்களிடம் இருந்து விருப்ப மனு பெறும் நிகழ்ச்சியில் கடலூர் ம.தி.மு.க. அலுவலகத்தில் நடைபெற்றது.  
 
               கடலூர் நகர மன்றத் தலைவர் பதவிக்கு சேகர், நெல்லிக்குப்பம் நகரமன்றத்தலைவர் பதவிக்கு ராமலிங்கம், மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு பிரமமூர்த்தி, ஜெயசங்கர், வெங்கடேசன், நகரசபை உறுப்பினர் பதவிக்கு கண்ணன், வினோதினி பெருமாள், செல்வி கணேசன், பழனி, ராமசாமி, பரமேஸ்வரி, அண்ணாதுரை உள்பட 300 பேர் மாவட்ட செயலாளர் என்.ராமலிங்கத்திடம் விருப்ப மனுவை கொடுத்தனர்.
 
                 நிகழ்ச்சியில், மாவட்ட பொருளாளர் வேலு, மாநில இலக்கிய அணி துணை செயலாளர் மன்றவாணன், நகர செயலாளர் ராமசாமி, பொதுக்குழு உறுப்பினர் சம்பத், ஒன்றிய செயலாளர் பாலமுருகன், சவுந்தரபாண்டியன், அப்துல்காதர், அலுவலக பணியாளர் குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
  

Read more »

சிதம்பரம் அருகே முதலை கடித்து பிளஸ்-2 மாணவன் படுகாயம்


 http://mmimages.mmnews.in/Articles/2011/Sep/e73e0029-09a0-4002-9558-874b1e570572_S_secvpf.gif
 
சிதம்பரம்:

          சிதம்பரம் அருகே முதலை கடித்து பிளஸ்-2 மாணவன் படுகாயம் அடைந்தார்.  சிதம்பரத்தை அடுத்த சிவாயம் கிராமத்தை சேர்ந்தவர் கருணாநிதி. இவரது மகன் ராஜ்குமார் (வயது 16), பிளஸ்-2 மாணவன். அந்த கிராமத்தில் உள்ள கான்சாகிப் வாய்க்காலுக்கு ராஜ்குமார் சென்றார்.

           அதில் இறங்கிய போது தண்ணீருக்குள் இருந்த ஒரு முதலை அவரது காலை கவ்வி கடித்து குதறியது. அலறித்துடித்த ராஜ்குமார் முழு பலத்துடன் காலை உதறி முதலையின் பிடியில் இருந்து தப்பி கரைக்கு வந்தார்.   அவரது சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடோடி வந்தனர்.

          படுகாயத்துடன் துடித்து கொண்டிருந்த குமாரை மீட்டு சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். சிகிச்சைக்கு பின்னர் மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜாமுத்தையா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ராஜ்குமார் சேர்க்கப்பட்டார்.  மாணவனை முதலை கடித்து குதறிய சம்பவத்தை தொடர்ந்து சிவாயம் கிராம பகுதியில் பொதுமக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது. 
 
 
 
 
 

Read more »

Good response for IGNOU courses in prisons

            The Indira Gandhi National Open University (IGNOU) has seen good response for enrolment to its courses at three prisons in the State- Madurai, Coimbatore and Tiruchi- during the admissions for July session this year. M. Shanmugham, IGNOU Regional Director, Madurai Regional Centre, which covers 17 districts in the State including Tiruchi and Coimbatore regions, told The Hindu on Sunday that several prisoners have shown interest to pursue undergraduate courses and beyond.

          In the Madurai Prison alone, 40 jail inmates had enrolled for the six-month IGNOU preparatory programme for UG courses. In Coimbatore prison, 45 inmates have shown willingness to join the university's courses The Trichy prison too has witnessed inmates' interest for IGNOU courses. 








Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior