உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, நவம்பர் 19, 2011

விருத்தாசலத்தில் அதிகரித்து வரும் தொடர் கொள்ளைகள்: வியாபாரிகள் பீதி

விருத்தாசலம்:
           விருத்தாசலம் ஜங்ஷன் ரோடு மாணிக்கவாசகர் நகரை சேர்ந்தவர் தென் எழிலன். இவர் அதே பகுதியில் மருந்துகடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று இரவு இவர் வழக்கம் போல் வியாபாரத்தை முடித்து கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார். இன்று காலையில் கடையை திறக்க வந்த போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. அதனை கண்டு அதிர்ச்சியடைந்த தென் எழிலன் கடைக்குள் சென்று பார்த்தார். கடை மேஜையில் வைத்திருந்த ரூ.15 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. அதேபோல் விருத்தாசலம் சந்தை பகுதியில் உள்ள 2 மருந்து கடைகளிலும் நேற்று இரவு கொள்ளை நடந்தது தெரியவந்துள்ளது.

              விருத்தாசலம் சந்தை பகுதியில் மருந்து கடை வைத்து நடத்தி வருபவர் ஜபிபூர் ரகுமான். இவரது கடையில் நேற்று நள்ளிரவு பூட்டை உடைத்து மர்ம கும்பல் ரூ.4 ஆயிரம் கொள் ளையடித்து விட்டு தப்பியது. அந்தகடைக்கு அருகில் உள்ள செல்போன் கடையிலும் கொள்ளை முயற்சி நடைபெற்றுள்ளது. அதே பகுதியில் சதீஷ்நாராயணன் என்பவரது மருந்து கடையிலும் நேற்று இரவு பூட்டை உடைத்து ரூ.2500 கொள்ளை நடைபெற்றுள்ளது. 3 மருந்துகடைகளில் நடைபெற்றுள்ள கொள்ளை குறித்து விருத்தாசலம் போலீசில் புகார் செய்யப்பட்டது.

             போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளை நடந்த கடைகளுக்கு தடயவியல் நிபுணர்களுடன் விரைந்து சென்றனர். அந்த 3 கடைகளிலும் பதிவாகியிருந்தரேகைகள் மற்றும் தடயங்கள் சேகரிக்கப்பட்டது. அந்த கடைகளுக்கு அக்கம் பக்கத்தில் வசிப்பவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.   ஒரேநாளில் நள்ளிரவில் 3 மருந்துகடைகளில் கை வரிசை காட்டி தப்பிய கொள்ளை கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.  இந்த துணிகர கொள்ளை சம்பவங்கள் விருத்தாசலம் பகுதி மக்கள் மற்றும் வியாபாரிகள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி யுள்ளது. 

Read more »

சிதம்பரம் அரசு நந்தனார் மேல் நிலைப்பள்ளி மாணவர் விடுதியில் தற்கொலை


 http://mmimages.mmnews.in/Articles/2011/Nov/4854e717-d97e-4e5e-9fe8-303b9e9d9d9a_S_secvpf.gif
 
சிதம்பரம்:

           சிதம்பரம் அருகே உள்ள பெராம்பட்டு காலனியை சேர்ந்தவர் பாலையா. இவருக்கு 3 மகன்கள். இவர்களில் இளையமகன் விமல்ராஜா (வயது 17).   இவர் சிதம்பரத்தில் உள்ள அரசு நந்தனார் மேல் நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இவர் அங்குள்ள விடுதியிலேயே தங்கி பள்ளிக்கு சென்று வந்தார். நேற்று வகுப்புக்கு செல்லாமல் விடுதியிலேயே இருந்தார். அப்போது விடுதிக்கு ரோந்து வந்த தலைமை ஆசிரியர் பன்னீர் செல்வம், விமல்ராஜாவை பார்த்துவிட்டார். அவர் விமல்ராஜாவை கண்டித்தார்.

                       கடுமையான நடவடிக்கை எடுக்கப் போவதாக எச்சரித்தார். இதனால் பயந்துபோன விமல்ராஜா நேற்று இரவு விடுதியில் உள்ள உணவு கூடத்தில் நைலான் கயிற்றால் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். வியாழக்கிழமை   காலை அவர் தூக்கில் தொங்கியதை மற்ற மாணவர்கள் பார்த்தனர். உடனடியாக அவர்கள் விடுதி வார்டனுக்கும், தலைமை ஆசிரியருக்கும் தெரிவித்தனர். அவர்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

              சிதம்பரம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு துரை, இன்ஸ்பெக்டர் சதிஷ் மற்றும் போலீசார் விரைந்து வந்து விமல்ராஜா பிணத்தை கயிற்றில் இருந்து கீழே இறக்கினார்கள்.   பின்னர் ஆம்புலன்சை வரவழைத்து உடலை ஆஸ்பத்திரிக்கு எடுத்து செல்ல முயற்சி செய்தனர். இதற்கிடையே விமல்ராஜா விடுதியில் தற்கொலை செய்து கொண்ட தகவல் சிதம்பரம் நகரம் முழுவதும் காட்டுத்தீ போல பரவியது. அந்த பள்ளியில் படித்த மாணவர்களும், பெற்றோர்களும், ஏராளமான பொதுமக்களும் பள்ளியில் திரண்டனர். அவர்கள் விமல்ராஜா உடலை ஆஸ்பத்திரிக்கு எடுத்து செல்லவிடாமல் ஆம்புலன்சை தடுத்து நிறுத்தினார்கள்.

             ஆம்புலன்சில் இருந்த விமல்ராஜா உடலை கீழே இறக்கி பள்ளி வளாகத்தில் வைத்து மறியலில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் சிதம்பரம் - சீர்காழி சாலைக்கு வந்து மறியல் செய்தனர்.   இதுபற்றி தகவல் அறிந்ததும் அங்கு சென்ற துணைக்கலெக்டர் இந்துமதி, தாசில்தார் ராஜேந்திரன் ஆகியோர் பொதுமக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். ஆனால் அவர்கள் கலைந்து செல்லாமல் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த சம்பவத்தால் சிதம்பரம் நகரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
 
 
 
 
 
 
 

Read more »

வெள்ளி, நவம்பர் 18, 2011

கடலூர் மாவட்டத்தில் மீண்டும் கனமழை இயல்பு வாழ்க்கை பாதிப்பு


கடலூர் ஆட்சியர் அலுவலகச் சாலையில் மழையில் நனைந்தபடி வகுப்புகளுக்குச் செல்லும் கல்லூரி மாணவிகள்.
கடலூர்:

            கடலூரில் புதன்கிழமை இரவு முதல் மீண்டும் பெய்யத் தொடங்கியுள்ள கன மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப் பட்டுள்ளது.வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியிருப்பதால் கடலூர் மாவட்டம் முழுவதும் மீண்டும் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. கடந்த இரு வாரங்களுக்கு முன் பெய்து வந்த மழை புதன்கிழமை இரவு முதல் மீண்டும் பெய்யத் தொடங்கியது. 

            வியாழக்கிழமை காலை முதல் கன மழை பெய்தது. இதனால் கடலூரில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. கல்லூரி மற்றும் பள்ளி மாணவ மாணவியர் பெருதும் பாதிக்கப்பட்டனர். தெருக்கள், சாலைகள் அனைத்திலும் மழை நீர் குளம்போல் தேங்கி, போக்குவரத்துக்கு பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தியது. ஏற்கெனவே மோசமான நிலையில் இருந்த சாலைகள், மக்களுக்கு மீண்டும் சங்கடத்தை ஏற்படுத்தின. விவசாயிகள் இந்த மழையைப் பெரிதும் வரவேற்று உள்ளனர். 

இதுகுறித்து கடலூர் மாவட்ட உழவர் மன்றங்களின் கூட்டமைப்பு தலைவர் பி.ரவீந்திரன் கூறுகையில், 

          இப்போது விட்டு விட்டு பெய்து வரும் வடகிழக்குப் பருவமழை விவசாயிகளுக்கு பெரிதும் பயனளிப்பதாக இருக்கும். சம்பா நெற்பயிருக்கு யூரியா தட்டுப்பாடு உள்ள நிலையில் விட்டுவிட்டுப் பெய்து வரும் மழையால், பயிர்களுக்கு நைட்ரஜன் சத்து இயற்கையாகக் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. கடந்த இரு வாரமாக மழை ஓய்ந்து இருந்தது. எனவே ஆழ்குழாய் கிணற்றுப் பாசனப் பகுதிகளில், மின்மோட்டார்கள் மூலம் தண்ணீர் வழங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால் தொடந்து அதிகரித்து வரும் மின்வெட்டால், போதிய தண்ணீர் வழங்க முடியாமல் விவசாயிகள் கவலையுடன் இருந்தனர். இந்த நிலையில் இப்போது தொடங்கியுள்ள மழை, ஆழ்குழாய் கிணற்றுப் பாசன விவசாயிகளும் வரவேற்கத் தகுந்ததாக அமைந்து உள்ளது என்றார்.










Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior