உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, பிப்ரவரி 17, 2012

திட்டக்குடி அருகே கழுத்தை நெரித்து 8ம் வகுப்பு மாணவன் கொலை

 http://mmimages.mmnews.in/Articles/2012/Feb/ff064ba1-1793-4fe5-93bc-a865a3eeadb3_S_secvpf.gif
 
திட்டக்குடி:
 
       திட்டக்குடி அருகே உள்ள எழுத்தூர் காலனியை சேர்ந்தவர் அன்பழகன். இவரது மகன் சிவனேசன் (வயது 13). எழுத்தூர் அரசு நடுநிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான். தந்தை அன்பழகன் சென்னை கோயம்பேட்டில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். சிவனேசன் கடந்த 12-ந்தேதி காலை வீட்டை விட்டு வெளியேறினான். அதன்பிறகு வீடு திரும்பவில்லை.
 
       அன்று மாலை செல்வராசு என்பவரின் வீட்டில் சிவனேசன் மர்மமான முறையில் இறந்து கிடந்தான். இதையடுத்து சிவனேசனின் தந்தை அன்பழகன் ராமநத்தம் போலீசில் புகார் செய்தார். புகாரில் சிவனேசனை யாரோ கழுத்தை நெரித்து கொன்றிருக்கலாம் என சந்தேகப்படுவதாக கூறி இருந்தார். இதைத்தொடர்ந்து திட்டக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு வனிதா மேற்பார்வையில் ராமநத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே அதே பகுதியை சேர்ந்த சிவா என்பவரின் மகன் ராஜகுமார் (13) நான்தான் சிவனேசனை கழுத்தை நெரித்து கொன்றேன் என்று கூறி கிராம நிர்வாக அலுவலர் ராஜமாணிக்கத் திடம் சரண் அடைந்தான். சிவனேசனை, ராமநத்தம் போலீசில் ராஜமாணிக்கம் ஒப்படைத்தார். இதைத்தொடர்ந்து ராஜகுமாரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். 
 
விசாரணையில் சிவனேசனை கொன்றது ஏன் என்பது குறித்து அவன் கூறியது:- 
 
          நானும், சிவனேசனும் நண்பர்கள். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஊரில் சிலரது வீடுகளில் புகுந்து பித்தளை உள்ளிட்ட பாத்திரங்களை இருவரும் சேர்ந்து திருடினோம். திருடி வந்த பொருட்களை விற்று ஆடம்பராக செலவு செய்து வந்தோம். திருட்டு மூலம் பணம் அதிகளவில் புழங்கியதால் மது குடிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டோம். இந்த விஷயம் சிவனேசனின் தாய் அம்புஜத்துக்கு தெரியவந்ததால் அவர் என்னை அழைத்து கண்டித்தார். மேலும் இனிமேல் சிவனேசனை எங்கும் அழைத்து செல்லக்கூடாது, பழகக்கூடாது எனக்கூறி என்னை திட்டினார். அதுபோல் அன்றில் இருந்து என்னிடம் சிவனேசன் பேசுவதில்லை.   இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.
 
          சில நாட்களுக்கு முன்பு சிவனேசனை எங்கள் ஊர் பள்ளிக்கூடத்துக்கு பின்புறம் அழைத்து சென்றேன். அங்கு அவனை கட்டி வைத்து வாயில் துணியை திணித்து அடித்து உதைத்தேன். மேலும் தொடர்ந்து என்னிடம் பழக வேண்டும் என்று சிவனேசனை மிரட்டினேன். இதனை அறிந்த சிவனேசனின் உறவினர்கள் விரைந்து வந்து அவனை மீட்டு சென்றனர். ஆனாலும் சிவனேசன் என்னுடன் பேசுவதை தவிர்த்து வந்தான். கடந்த 12-ந்தேதி சிவனேசன் எழுத்தூர் நெடுஞ்சாலையில் உள்ள சிறிய பாலத்தில் தனியாக அமர்ந்து இருந்தான். அப்போது அவனிடம் மது வாங்கி குடிக்கலாம் என்று ஆசை வார்த்தை கூறினேன். இதற்கு சிவனேசன் சம்மதித்தான். இதைத்தொடர்ந்து நான் வைத்திருந்த ரூ.200ஐ சிவனேசனிடம் கொடுத்து மதுவாங்கி வரும்படி கூறினேன்.
 
           சிவனேசன் மதுபாட்டில் வாங்கி வந்தான். இருவரும் சேர்ந்து மது குடித்தோம். அப்போது எங்களுக்குள் வாய்தகராறு ஏற்பட்டது.   திருட்டு தொழிலுக்கு என்னுடன் தொடர்ந்து வர வேண்டும் என்று சிவனேசனிடம் கூறினேன். அப்படி வரமறுத்தால் முன்னர் எங்கெங்கு திருடினோம் என்பதை போலீசாரிடம் கூறி விடுவேன் என்று மிரட்டினேன். ஆனாலும் சிவனேசன் இதற்கு பயப்படவில்லை. இனிமேல் திருட வரமாட்டேன் என்று சிவனேசன் தொடர்ந்து கூறினான். இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. அவனை கன்னத்தில் ஓங்கி அறைந்தேன். இதில் சிவனேசன் மயங்கி விழுந்து விட்டான். உடனே அவனை செல்வராசு என்பவரது வீட்டுக்கு தூக்கி சென்றேன். அங்கு சிவனேசனை கழுத்தை நெரித்து கொன்றேன்.
 
             பின்னர் கழுத்தில் சேலையால் தூக்கு மாட்டி விட்டு விட்டத்தில் தொங்கவிட முயன்றேன். அதற்குள் செல்வராசுவின் மகன் வெண்மணிராஜா வரவே உடலை அங்கேயே போட்டு விட்டு ஓடிவிட்டேன். போலீசார் இந்த சம்பவத்தில் தீவிரமாக துப்பு துலக்கி வந்ததால் கிராம நிர்வாக அலுவலரிடம் சரண் அடைந்துவிட்டேன். இவ்வாறு ராஜகுமார் வாக்குமூலத்தில் கூறினான். அவனிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Read more »

பண்ருட்டியில் தானே புயலால் சேதம் அடைந்த முந்திரி மரங்களை அகற்றும் பணி தீவிரம்

கடலூர்:
 
            கடலூர் மாவட்டம் மேலிருப்பு கிராமத்தில் தானே புயலினால் சேதமடைந்த முந்திரி மரங்களை சங்கிலி ரம்பக் கருவிகள் பயன்படுத்தி அகற்றும் பணியை மாவட்ட கலெக்டர் ராஜேந்திர ரத்னூ தொடங்கி வைத்து பார்வையிட்டார்.  
 
           புயலினால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டத்தில் முந்திரி விவசாயிகளின் நலனுக்காக அவர்களுக்கு வழங்கப்பட்ட பயிர் சேத நிவாரணத்தோடு, முந்திரி பயிர்களை மீண்டும் பயிர் செய்வதற்கு விலை ஏதுமின்றி மரக்கன்றுகள் வழங்கப்படும் என்றும், அந்த மரக்கன்றுகளை பராமரிப்பதற்கான பராமரிப்பு செலவுகளையும், விவசாயப் பணிகளுக்கான செலவுகளையும், 5 ஆண்டு காலத்திற்கு அரசே ஏற்றுக் கொள்ளும் என்றும், முதல்-அமைச்சர் ஜெயலலிதா கூறினார்.
 
           மேலும் முந்திரி மற்றும் பலா தோப்புகள் பாதிப்புக்கு உள்ளான விவசாயிகள், விழுந்த மரங்களை அகற்றிட தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் பணிகள் மேற்கொள்ளப்படும். இதற்காக, சராசரியாக ஏக்கர் ஒன்றுக்கு, ஏற்படும் 6,000 ரூபாய் செலவினம் தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும்.
 
          இந்த மரங்களை வெட்டுவதற்குத் தேவையான சங்கிலி ரம்பக் கருவிகள் வேளாண்மை பொறியியல் துறை மூலம் கட்டணம் ஏதுமின்றி வழங்கப்படும் என்று கூறினார்.
 
          இவ்வாறு வெட்டப்பட்ட மரங்களை நல்ல விலைக்கு விற்பனை செய்வதற்கு தேவையான உதவிகளை அரசு மேற்கொள்ளும். மரங்கள் வெட்டி எடுக்கப்பட்ட பின், அடிக்கட்டையையும் அகற்றிய பின்னரே அத்தோட்டங்களில் உழவுப் பணியும், ஊடுபயிர் சாகுபடியும் மேற்கொள்ள இயலும் என்பதால், அடிக்கட்டை அகற்றும் பணி எந்திர உதவியுடன் வேளாண்மை பொறியியல் துறை மூலம் மேற்கொள்ளப்படும் என்றும் அறிவித்தார்.  
 
          இதனடிப்படையில் பண்ருட்டி ஊராட்சி ஒன்றியத்தில் மேலிருப்பு ஊராட்சியில் தானே புயலால் பாதிக்கப்பட்ட முந்திரி மரங்களை அகற்றி, விவசாயிகளுக்கு உதவும் பொருட்டு முன்மாதிரி பணி நடைபெற்றது. முதல் நாளன்று தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட பயனாளிகளை கொண்டு மரத்தில் உள்ள சிறு கிளைகள் அகற்றப்பட்டன.
 
        புதன் கிழமை  மேலிருப்பு கிராமத்தில் ராஜாராமன் என்பவரது முந்திரி தோப்பில் முற்றிலும் அழிந்த நிலையில் உள்ள முந்திரி மரங்களை சங்கிலி ரம்பக் கருவிகள் மூலம் வெட்டி எடுத்து அகற்றும் பணி நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் ராஜேந்திர ரத்னூ பார்வையிட்டார். 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Read more »

வியாழன், பிப்ரவரி 16, 2012

கடலூர் மாவட்டத்தில் மின்வெட்டு எதிரொலி: ஜெனரேட்டர், இன்வெர்ட்டர்கள் விலை அதிகரிப்பு


தொலைக்காட்சி போன்ற காரணங்களால், வீடுகளுக்கு இன்வெர்ட்டர்கள், ஜெனரேட்டர்கள் அத்தியாவசியப் பொருள்கள் பட்டியலில் வந்துவிட்டன. புதிதாக வீடு கட்டுவோர் கட்

கடலூர்:'

'             மின்சாரத்துக்கான இன்வெர்ட்டர், ஜெனரேட்டர் போன்ற மாற்று சாதனங்கள் விற்பனை மற்றும் விலை, கடந்த 2 ஆண்டுகளில் இரு மடங்கு அதிகரித்து இருப்பதாக வணிகர்கள் தெரிவிக்கிறார்கள். தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாகவே மின் பற்றாக்குறை உள்ளது. இதனால் நாளொன்றுக்கு ஒருமணி நேரம் இருந்த மின்வெட்டு, இன்று 8 மணி நேரமாக அதிகரித்து விட்டது. 

            மின் வெட்டு நேரம், மின்வாரியம் அறிவித்த நேரங்களைவிட, அறிவிக்கப்படாத மின்வெட்டு நேரம் அதிகம். மின்வெட்டால் தொழில் துறையினர், விவசாயிகள், பொதுமக்கள் அனைவரும் சொல்லொணா துயரம் அனுபவிக்கிறார்கள். மின் பற்றாக்குறையை உணர்ந்துள்ள பொதுமக்கள், மின்தடை நேரங்களை அறிவிப்பதை விடுத்து, எப்போது மின்சாரம் நிச்சயம் கிடைக்கும் என்பதை மின்வாரியம் அறிவித்தால் போதும் என்கிறார்கள். மின்சாரம் நிச்சயம் இருக்கும் நேரத்தை அறிவிக்க முடியாத மின்வாரியத்தால் பயனேதும் இல்லை என்கிறார்கள் பொதுமக்கள்.

            கடலூர் சிப்காட் தொழிற்பேட்டையில் 20-க்கும் மேற்பட்ட ரசாயனத் தொழிற்சாலைகள் உள்ளன. இவை ஆண்டுக்கு ரூ. 1,500 கோடிக்குமேல் மருந்துகள் மற்றும் ரசாயனப் பொருள்களை உற்பத்தி செய்கின்றன. இவைகள் மின் வெட்டால் பெரிதும் அவதிக்கு உள்ளாகி இருப்பதாக தெரிவிக்கிறார் சிப்காட் தொழிற்சாலைகளின் தலைவர் இந்திரகுமார்.புயலுக்குப் பின், ஒரு மாதம் முற்றிலும் மின்சாரம் தடைபட்டது. தற்போது தினமும் பகலில் 2 மணி நேரம் மின்வெட்டு, மற்றும் மாலை 6 முதல் இரவு 10 மணி வரை விளக்குகள் மட்டுமே எரியலாம் என்ற கட்டுப்பாடு உள்ளது. சிப்காட்டில் பெரும்பாலும் ரசாயனத் தொழிற்சாலைகளாக இருப்பதால் 24 மணி நேரமும் இயங்க வேண்டும். ஒரு நிமிடம்கூட மின்சாரத்தை நிறுத்த முடியாது. இதனால் ரூ. 1 லட்சம் முதல் ரூ. 3 கோடி மதிப்பிலான ஜெனரேட்டர்களை பயன்படுத்துகிறோம். 

            மின்வாரியம் வழங்கும் மின்சாரம் யூனிட்டுக்கு ரூ. 5.50 என்றால் ஜெனரேட்டர் மின்சாரம் யூனிட்டுக்கு ரூ. 10 ஆகிறது. இதனால் பொருள்களின் உற்பத்திச் செலவு அதிகரித்து சர்வதேச சந்தையில் பொருள்களை நட்டத்துக்கு விற்க நேரிடுகிறது என்றார் அவர். 

              மின்வெட்டால் கடலூர் மாவட்டத்தில் 13 ஆயிரம் சிறுதொழில் கூடங்கள் நலிவடைவதாக மாவட்ட சிறு, குறு தொழில்கள் சங்கச் செயலாளர் கு.ராமலிங்கம் தெரிவித்தார் .புதுவை மாநிலத்தில் மின்தடை இல்லாததால், கடலூர் மாவட்ட சிறு தொழிற்சாலகளுக்குக் கிடைத்த ஆர்டர்கள் பல, புதுவைக்குச் சென்று விட்டன. சிறு தொழில்களில் ஜெனரேட்டர்களைக் கொண்டு இயக்கி லாபம் பார்க்க முடியாது. ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்து விட்டனர். உரிமையாளர்கள் வங்கிக் கடன்களை செலுத்த முடியவில்லை என்றார் அவர். 

             மின்வெட்டைச் சமாளிக்க வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்கள் இன்வெர்ட்டர் மற்றும் ஜெனரேட்டர்களை பெருமளவில் பயன்படுத்தத் தொடங்கி உள்ளனர். மாணவர்களின் படிப்பு தொலைக்காட்சி போன்ற காரணங்களால், வீடுகளுக்கு இன்வெர்ட்டர்கள், ஜெனரேட்டர்கள் அத்தியாவசிய பொருள்கள் பட்டியலில் வந்துவிட்டன. புதிதாக வீடு கட்டுவோர் கட்டுமானச் செலவில் தற்போது இன்வெர்ட்டர் செலவையும் சேர்த்துவிட்டனர். 

               200 வி.ஏ. முதல் 800 வி.ஏ. வரையிலான (பாட்டரியுடன்) இன்வெர்ட்டர்களை வீடுகளில் பயன்படுத்துகிறார்கள். இவற்றின் விலை ரூ. 12 ஆயிரம் முதல் ரூ. 17 ஆயிரம் வரை. டி.வி. உள்ளிட்ட அனைத்து சாதனங்களையும் இயக்கும் வகையில் 1,500 வி.ஏ. திறன் கொண்ட இன்வெட்டர் விலை ரூ. 35 ஆயிரம் வரை. இன்வெட்டர்கள் விலை (பாட்டரியுடன்) கடந்த 2 ஆண்டுகளில் 50 சதவீதம் உயர்ந்து இருக்கிறது. பாட்டரிகள் விலை 40 சதம் உயர்ந்து இருக்கிறது. வணிக நிறுவனங்களில் 4,000 வாட்ஸ் மின்சாரம் கிடைக்கும் ஜெனரேட்டர்கள் (விலை ரூ. 24 ஆயிரம்) முதல், ஏ.சி. உள்ளிட்ட அனைத்து மின்சாதனங்களையும் இயக்கும் நிறுவனங்கள் (துணிக்கடைகள், நகைக் கடைகள்), அதிசக்தி வாய்ந்த ஜெனரேட்டர்களையும் (விலை ரூ. 5 லட்சம்) பயன்படுத்துகிறார்கள். இவற்றுக்கு பெட்ரோல், மண்ணெண்ணெய் அல்லது டீசல் செலவு மற்றும் பராமரிப்புச் செலவுகள் அதிகம். ஒவ்வொரு முறையும் அவற்றை இயக்க வேண்டும். 

            இன்வெர்ட்டர்கள் தானாக இயங்குபவை. பராமரிப்பது எளிது. மின்சாரம் இல்லாதபோது செலவிட்ட அனைத்து சக்தியையும், மின்சாரம் வந்ததும் இன்வெட்டர்கள் இழுக்கத் தொடங்கி விடுகின்றன. இதனால் இன்வெர்ட்டர்களை பயன்படுத்துவோருக்கு மின்கட்டடணச் செலவு அதிகரிக்கும் என்கிறார்கள் மின் பொறியாளர்கள் தெரிவிக்கிறார்கள். 














Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior