கடலூர் :
                  கடலூரில் நடந்த சி.ஐ.டி.யூ., 11வது மாநில மாநாட்டில் பொதுச்செயலராக சவுந்தரராசன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
                         கடலூரில் கடந்த 4ம் தேதி  இந்திய தொழிச்சங்க மையத்தின் 11வது தமிழ் மாநில மாநாடு துவங்கியது.  இறுதி நாளான நேற்று நிர்வாகிகள் தேர்வு நடந்தது. மாநில தலைவராக பத்மநாபன், பொதுச் செயலாளராக சவுந்தரராசன், பொருளாளராக குமார், உதவி பொதுச் செயலர்களாக சிங்கரவேலு, பழனிவேலு, குமார் தேர்வு செய்யப்பட்டனர். துணைத் தலைவர்களாக ரங்கராஜன், வைத்தியநாதன், சந்திரன், ராஜாங்கம், தியாகராஜன், இந்திரா, செல்லப்பன், சேகர், அன்பழகன், கிருஷ்ணமூர்த்தி, ஆறுமுகம், விஜயன்,  மகாலட்சுமி ஆகியோரும், செயலாளர்களாக மாலதி, லதா, கருமலையன், சுகுமாறன், கணேசன், அசோகன், அண்ணாதுரை, சுப்ரமணியன், சந்திரன்(திருப்பூர்), சுந்தர்ராஜன், அப்பனு, விக்ரமன், திருச்செல்வன், பகவதி, ஜானகிராமன், ரசல் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக