குறிஞ்சிப்பாடி :
                 விருத்தாசலம், திட்டக்குடி, நெய்வேலி சட்டசபை தொகுதி இளைஞர் காங்., நிர்வாகிகளுக்கான தேர்தல் வடலூரில் நடந்தது.
 
                   தமிழக இளைஞர் காங்., நிர்வாகிகளுக் கான தேர்தல் நடந்து வருகிறது. அதில் கடலூர் மாவட்டத்தில் நகர, ஊராட்சி கிளை நிர்வாகிகளுக்கான தேர்தல் சில தினங்களுக்கு முன் நடந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது தொகுதி குழு நிர்வாகிகளுக்கான தேர்தல் நேற்று துவங்கியது. கடலூர் லோக்சபா தொகுதியில் உள்ள விருத்தாசலம், திட்டக்குடி மற்றும் நெய்வேலி சட்டசபை தொகுதி நிர்வாகிகளுக்கான தேர்தல் நேற்று வடலூரில் நடந்தது. இதில் நடந்து முடிந்து கிளை தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் ஓட்டு போட்டனர். தேர்தøல் காசீம் அலையான் தலைமையிலான குழுவினர் நடத்தினர்.
 
                           மாலையில் தொகுதி வாரியாக ஓட்டுகள் எண்ணி  முடிவுகளை கட்சி தலைமைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இன்று கடலூர், குறிஞ்சிப்பாடி மற்றும் பண்ருட்டி சட்டசபை தொகுதி நிர்வாகிகளுக்கான தேர்தல் நடக்கிறது. இளைஞர் காங்., தேர்தலில் பிரச்னை ஏற்படாமல் இருக்கும் பொருட்டு ஓட்டுப் பதிவு நடந்த இடத்தில்  வடலூர் சப் இன்ஸ்பெக்டர் இளங்கோ தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக