கடலூர் : 
             கடலூர் நகராட்சி பகுதியில் உள்ள மளிகை, ஓட்டல்கள், நடை பாதை கடைகளில் நகராட்சி கமிஷனர் மற்றும் மாவட்ட வழங்கல் அலுவலர் ஆகியோர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
           கடலூர் நகராட்சி பகுதியில் நேற்று மாலை கமிஷனர் குமார், மாவட்ட வட்ட வழங்கல் அலுவலர் தேவராஜ் மற்றும் அதிகாரிகள் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மஞ்சக்குப்பம் பகுதியிலிருந்த மளிகை கடைகள், ஓட்டல்கள், சாலையோர தள்ளு வண்டி உணவு கடைகள் என 45க்கும் மேற்பட்ட கடைகளில் சோதனை செய்தனர்.
            இதில் காலாவதியான டால்டா, நூடுல்ஸ் பாக்கெட், வனஸ்பதி, ஊறுகாய், பேரிச்சம் பழம், கான்பிளக்ஸ் மாவு, கடலை மாவு, சாலையோர உணவு விடுதிகளில் சிக்கன், மட்டன் போன்றவைகளை கைப்பற்றினர். இவற்றின் மதிப்பு 50 ஆயிரம் ரூபாயாகும். மேலும் கடைகளில் பயன்படுத்திய மூன்று வீட்டு காஸ் சிலிண்டர்களை கைப் பற்றினர். மேலும் நான்கு மருந்து கடைகளில் உள்ள குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவு பொருட்களும் ஆய்வு செய்யப்பட்டது. பின் ஆய்வு செய்யப்பட்ட 9 கடைகளுக்கு நகராட்சி சார்பில் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது.
பொது அறிவிற்கு:
சென்னை மெரினா கடற்கரையில் உள்ள உழைப்பாளர்கள் சிலையை செய்தவர் - டி பி ராய் 
0 கருத்துகள்:
கருத்துரையிடுக