சிதம்பரம் : 
                சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக 2010-11ம் கல்வி ஆண்டிற்கான இன்ஜினியரிங் கல்லூரி வகுப்புகள் வரும் 20ந் தேதி துவங்குகிறது. 
அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தர் ராமநாதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 
                   சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில்  பி.இ., - எம்.இ., அனைத்து பிரிவுகள், எம்.சி.ஏ., - எம்.எஸ்சி., (இன்ஜினியரிங் ஐந்து ஆண்டு பட்டப்படிப்பு),  பி.எஸ்சி.,(விவசாயம்), பி.எஸ்சி., (தோட்டக்கலை) வகுப்புகளில் முதலாம் ஆண்டு  மாணவர்களுக்கு வரும் 20ம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கப்படுகிறது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
 
 
0 கருத்துகள்:
கருத்துரையிடுக