கடலூர்:
             பாதாள சாக்கடைத் திட்டத்தை தாமதப்படுத் துவதைக் கண்டித்து வரும் 30ம் தேதி கடலூர் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட புதிய தமிழகம் கட்சி முடிவு செய்துள்ளது.
            புதிய தமிழகம் கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம் கடலூரில் நடந்தது. மாவட்ட செயலாளர் அமுதன் தலைமை தாங்கினார். இணை செயலாளர் சுகுமார் முன்னிலை வகித்தார். கட்சியின் நிர்வாகிகளான இளையபெருமாள், சதாசிவம், பாஷா, வெற்றிவேலவன், சுதாகர், பாலமுருகன், ஜெகன், சண்முகம் உள்ளிட்டோர் பங்கேற் றனர்.கூட்டத்தில் புதிய தமிழகம் கட்சியை கூட்டணியில் சேர்த்துக் கொண்ட அ.தி.மு.க., பொதுச் செயலாளர் ஜெ.,விற்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. 
                கடலூர் அரசு மருத்துவமனையில் குடிநீர் வசதி இல்லாததைக் கண்டித்து வரும் 18ம் தேதி மருத்துவமனை முன் குடிநீர் ஊற் றும் போராட்டம் நடத்துவது. கடலூரில் பாதாள சாக்கடைத் திட்டத்தை தாமதப்படுத்துவதைக் கண்டித்து வரும் 30ம் தேதி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிடுவது உள் ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக