குறிஞ்சிப்பாடி: 
             முன்விரோதம் காரணமாக இரு கோஷ்டியினர் தாக்கிக் கொண்டதில் 26 பேர் மீது வழக்குப் பதிந்து 7 பேரை குறிஞ்சிப்பாடி போலீசார் கைது செய்தனர்.
                 குறிஞ்சிப்பாடியில் ஆடி செடல் திருவிழாவை முன்னிட்டு பாட்டுக்கச்சேரி நடந்தது. இதில் அயன்குறிஞ்சிப்பாடி காலனியைச் சேர்ந்தவர்களுக்கும் கல்குணம் கிராமத்தைச் சேர்ந்தவர்களுக்குமிடையே தகராறு ஏற் பட்டது. இதனையடுத்து அயன்குறிஞ்சிப்பாடி வழியாக கல்குணம் சென்றவர்களை 30க்கும் மேற்பட்ட கும்பல் கத்தி, உருட்டு கட்டையால் தாக்கியது. இதில் கந்தவேல் (40), சம்பத்குமார் (20), சபரிராஜன் (18), ரஞ்சித்குமார் (18) உட்பட ஏழு பேர் படுகாயமடைந்து கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
                    இது குறித்து குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்குப் பதிந்து அயன்குறிஞ்சிப்பாடியைச் சேர்ந்த வைத்தியலிங்கம், சேகர், முத்தையன், கோடிநாதன், தயாளன், சுப்ரமணியன், வடிவேலு ஆகியோரை கைது செய்தனர்.
 
 
0 கருத்துகள்:
கருத்துரையிடுக