கடலூர்:
              கடலூரிலிருந்து விசைப்படகில் மீன் பிடிக்க சென்று காணாமல் போன ஐந்து மீனவர்களை, ஹெலிகாப்டர் மற்றும் கப்பல் மூலம் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
              கடலூர் அடுத்த தம்னாம்பேட்டையைச் சேர்ந்தவர் அஞ்சாபுலி (47). இவருக்கு சொந்தமான விசை படகில், கடந்த 19ம் தேதி அதிகாலை கடலூர் முதுநகர் நஞ்சம்பேட்டை சங்கரன்(50), ஏழுமலை (53),பெரியக்குப்பம் கருப்பர்(55), சித்திரைப்பேட்டை சேகர்(55) உள்ளிட்ட 5 பேர் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர். படகின் உரிமையாளர் அஞ்சாபுலி கடந்த 20ம் தேதி மாலை மொபைல் போன்மூலம் தொடர்பு கொண்டு பேசியபோது, வீராம்பட்டினத்திற்கு கிழக்கே மீன் பிடித்துக்கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளனர்.
                    இந்நிலையில் கடந்த 23ம் தேதி திரும்ப வேண்டிய படகு நேற்று மாலை வரை கரைக்கு திரும்பவில்லை. மீன் பிடிக்க சென்றபோது, படகில் 1,500 லிட்டர் டீசல் இருந்துள்ளது. இதனால் 23ம் தேதி வரையில் மட்டுமே டீசல் இருப்பு இருந்திருக்கும். தற்போதைய நிலையில் படகில் டீசலும் இருக்க வாய்ப்பில்லை என மீனவர்கள் சந்தேகிக்கின்றனர்.இதைத்தொடர்ந்து நேற்று முன் தினம் காலை அஞ்சாபுலி மற்றும் தம்னாம்பேட்டை ஆறுமுகம் ஆகியோர் தனித்தனியே இரண்டு படகுகளில் சென்று காணாமல் போன மீனவர்களை கடலுக்குள் தேடினர். 
                     ஆனால் இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை. நேற்று காலை கடலூர் மீனவர்கள் மற்றும் மீனவர் சங்க பிரதிநிதிகள், ஊர்பிரமுகர்கள் என, 50க்கும் மேற்பட்டோர் கலெக்டர் சீத்தாராமனை சந்தித்து காணாமல் போன மீனவர்களை தேடித் தருமாறு மனு கொடுத்தனர். மேலும், தற்போதுள்ள நீரோட்டத்தில் படகு இலங் கையை நோக்கி காற்றில் அடித்து சென்றிருக்கும் என்பதால், இலங்கை கடல் பகுதியில் மீனவர்களை தேடவேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
 கடலூர் கலெக்டர் சீத்தாராமன் கூறுகையில்,
            "காணாமல் போன மீனவர்கள் குறித்து அரசுக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது. கோஸ்டல் கார்டு ஹெலி காப்டர் ஒன்றும், ரோந்து கப்பல் ஒன்றும் மீனவர்களை தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது' என்றார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக