மறியலில் ஈடுபட்ட திரைப்பட இயக்குநர் தங்கர்பச்சானை அப்புறப்படுத்தும் போலீஸார்.
பண்ருட்டி:
சாலை மறியலில் ஈடுபட்ட தங்கர்பச்சான் உள்ளிட்ட 59 பேர் கைது செய்யப்பட்டனர்.
சாலை மறியலில் ஈடுபட்ட தங்கர்பச்சான் உள்ளிட்ட 59 பேர் கைது செய்யப்பட்டனர்.
            பேரிடர் ஏற்பட்டுள்ள கடலூரை கண்டுகொள்ளாத மத்திய அரசைக் கண்டித்து தமிழ்நாடு உழவர்  சங்கங்களின் கூட்டமைப்பு தலைவரும், திரைப்பட இயக்குநருமான தங்கர்பச்சான் தலைமையில்  கொள்ளுக்காரன்குட்டையில் செவ்வாய்க்கிழமை சாலைமறியல் போராட்டம் நடைபெற்றது. 
முன்னதாக தமிழ்நாடு உழவர்  சங்கங்களின் கூட்டமைப்பு தலைவரும், திரைப்பட இயக்குநருமான தங்கர்பச்சான் பேசியது:
         புயலால் பல ஆயிரம் கோடி ரூபாய் சேதம் ஏற்பட்டுள்ளது.  பிச்சை போடுவது போல அரசு ரூ.2,500 வழங்குவதை ஏற்க முடியாது. வானிலை மையம்  முன்கூட்டியே எச்சரிக்கை செய்த போதும் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்காததே  சேதத்திற்கு முக்கிய காரணம். 
             இப்பகுதியில் குடிநீர், மின்சாரம், உணவு இல்லாமல் மக்கள் அவதிப்படுகின்றனர்.  பொருளாதாரமே அழிந்த நிலையில், விவசாயிகள் பிள்ளைகளை எப்படி படிக்க வைப்பார்கள்?  புயலால் பாதிக்கப்பட்டு தண்ணீர் கூட கிடைக்காத இப்பகுதியில் உள்ள சாராயக் கடைகளை  தயவு செய்து மூடிவிட வேண்டும். அரசை நம்பி பயனில்லை என்பதால் விவசாய சங்கங்களை  அழைத்து தமிழக உழவர் சங்கங்களின் கூட்டமைப்பை ஏற்படுத்தி அதன் தலைவராகியுள்ளேன்.  விவசாயம் தொடர்பாக அரசு சார்பில் நடைபெறும் கூட்டங்களில் எங்களை அழைத்துதான் பேச  வேண்டும்.
             கடலூர் மாவட்டத்தை பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்றார்.  எழு ஏக்கருக்கு ஒரு போர் அமைத்து தரவேண்டும். நிலத்தை சுத்தம் செய்து, விதை, மருந்து,  உரம் தரவேண்டும். அரசு உதவியாக ஆடு, மாடு, கோழிகளை கொடுத்தால் வாழ்க்கை நடத்த  உதவியாக இருக்கும் எனவும் அப்போது அவர் வலியுறுத்தினர். பின்னர் கும்பகோணம்-சென்னை சாலையில் மறியலில் ஈடுபட்ட தங்கர்பச்சான் மற்றும் விவசாய  சங்கத்தினர் உள்ளிட்ட 59 பேரை போலீசார்  கைது செய்தனர். இவர்கள் அனைவரும் மாலை  விடுவிக்கப்பட்டனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக