உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




இந்தியன் ஓவர்சீஸ் வங்கி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, மார்ச் 18, 2011

வங்கிப் பணிக்கு பொறியாளர்கள் தேவை அதிகரிப்பு


சென்னை எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் தகவல் தொழில்நுட்பத்துறை சார்பில் வியாழக்கிழமை நடைபெற்ற தேசிய கருத்தரங்கில், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் தலைவர் நரேந்திரா
              
           வங்கித்துறை நவீனமாக்கப்பட்டு வருவதால்,வங்கிப் பணிக்குப் பொறியியல் பட்டதாரிகளின் தேவை அதிகரித்துள்ளது என்று இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் தலைவரும், நிர்வாக இயக்குனருமான எம்.நரேந்திரா தெரிவித்தார். 
 
சென்னையை அடுத்த காட்டாங்கொளத்தூரில் அமைந்துள்ள எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் மின்னணு மற்றும் தகவல் தொடர்புத்துறை சார்பில் வியாழக்கிழமை நடைபெற்ற தேசியக் கருத்தரங்கைத் துவக்கி வைத்து மேலும் ந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் தலைவரும், நிர்வாக இயக்குனருமான எம்.நரேந்திரா பேசியது:
 
              வளர்ந்த நாடுகளுக்கு இணையாக அனைத்துத் துறைகளிலும் சாதனை நிகழ்த்தி வரும் இந்தியாவின் விலைமதிப்பில்லா சொத்து, மாணவ சமுதாயமும், அவர்களை உருவாக்கும் கல்வி நிறுவனங்களும்தான்.  மாணவர்களின் மனிதவள ஆற்றலை ஊக்குவிக்கும் வகையில்,இந்தியன் ஓவர்சீஸ் வங்கி,நடப்பு ஆண்டில் கல்விக்கடனாக ரூ.1,800 கோடி வழங்கி உள்ளது.  பணப் பரிமாற்றம் நடைபெறும் வங்கித் தொழிலில் தற்போது தகவல் தொழில்நுட்பம் புகுத்தப்பட்டு இருப்பதால், பொறியியல் பட்டதாரிகளின் தேவை அதிகரித்துள்ளது. 
 
             விரைவில் வளாக பணித் தேர்வு முறை மூலம் 525 பேரைத் தேர்ந்தெடுக்க உள்ளோம்.  வங்கித் துறையில் ஏராளமான ஊழியர்கள் ஓய்வுபெறும் நிலையில்,தகவல்தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வகை பொறியியல் துறையில் பட்டம் பெற்ற மாணவர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்புள்ளது என்றார்.  எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழக துணைவேந்தர் பி.சத்யநாராயணன் பேசும் போது,மாணவர்கள் படிப்புடன் ஆராய்ச்சித் திறனையும் மேம்படுத்திக்கொள்ள வேண்டும். 
 
              தற்போது பெங்களூரில் பல்கலைக்கழகம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள மாதிரி ஆராய்ச்சி நிறுவனத்தை மாணவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். வரும் கல்வி ஆண்டில் ரூ50 கோடி செலவில் எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழகத்தில் அமைக்கப்படும் அதிநவீன ஆராய்ச்சி மையத்தை இங்கு பயிலும் மாணவர்கள் மட்டுமல்லாமல், இதர மாணவர்களும் பயன்படுத்தி பயன்பெறலாம் என்றார்.  பல்கலைக்கழக இயக்குநர் முத்தமிழ் செல்வன், துறைத்தலைவர் எஸ்.மலர்விழி, பேராசிரியர்கள் ஆர்.ரமேஷ்,ஜெ.மஞ்சுளா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.   .
 
 
 
 
 

Read more »

புதன், ஜூன் 02, 2010

பராமரிப்பில்லா கட்டடத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக் கிளை

நெய்வேலி:

                 நெய்வேலி வட்டம் 14-ல் செயல்படும்  இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக் கிளை போதிய இடவசதியில்லாத பராமரிப்பில்லாத கட்டடத்தில் இயங்கி வருகிறது. 

                    ஜவகர் அறிவியல் கல்லூரியில் பயிலும் மாணவர்கள்  கட்டணம் செலுத்த வசதியாக கல்லூரியின் பரிந்துரையின் பேரில், கல்லூரி வளாகத்தின் கிழக்குப் புறத்தில் 600 சதுர அடி பரப்பளவில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கூடுதல் கவுண்டர் 13 ஆண்டுகளுக்கு முன் திறக்கப்பட்டது.பின்னர் 2006-ம் ஆண்டு முதல் தனிக்கிளையாக செயல்படத் தொடங்கியது. இதனால் வங்கி வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் கூடுதல் வாடிக்கையாளர்கள் வந்துசெல்லும் அளவுக்கு வசதி செய்யப்படவில்லை.600 சதுர அடி பரப்பளவு உள்ள இவ் வங்கியில் ஒரேசமயத்தில் 10 வாடிக்கையாளர்கள் கூட வங்கியினுள் நிற்க முடியாத அளவுக்கு இடநெருக்கடி உள்ளது. இவ் வங்கி கிளையில் தற்போது மேலாளர், உதவி மேலாளர், காசாளர், 2 முதுநிலை ஊழியர்கள்,  உதவியாளர் என 6 ஊழியர்கள் பணிபுரிகின்றனர். இவர்களுக்கென தனித்தனி மேஜை நாற்காலி, கோப்புகள் வைப்பதற்கான அலமாரி உள்ளிட்டவையும் போதுமான இடங்களை ஆக்கிரமித்துள்ளதால் வங்கி ஊழியர்கள் நடமாடக்கூட இடம் இல்லை. 

                     எல்லாவற்றுக்கும் மேலாக இவர்கள் வங்கியினுள் அமர்ந்து உணவருந்தக் கூட இடமில்லாமல் ஒருவர் உணவு சாப்பிட்டு முடித்தபின்னர் அவர் அவ்விடத்தை காலிசெய்த பின்னரே மற்றவர் அமர்ந்து சாப்பிட முடியும் என்ற நிலை உள்ளது.மேலும் வங்கி கட்டடம் பல ஆண்டுகளாக பராமரிக்கப்படாததால் சுவரில் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும் பூச்சிகள், பாம்பு உள்ளிட்டவை உள்ளே வருவதால் ஊழியர்கள் அச்சத்துடன் பணியாற்ற வேண்டியுள்ளது. வங்கி கட்டடத்தை சீரமைப்பதோடு கூடுதல் இடவசதி ஏற்படுத்த வேண்டும் அல்லது இடவசதி மிக்க புதிய கட்டடத்துக்கு வங்கி கிளையை மாற்ற வேண்டும் என்பதே வாடிக்கையாளர்களின் கோரிக்கை.

Read more »

திங்கள், மார்ச் 29, 2010

நுகர்வோர் சேவை மையத்தின் ஆலோசனை கேட்டு பயன்பெறுமாறு கலெக்டர் வேண்டுகோள்

கடலூர் :

                வங்கிகளில் கல்விக் கடன் பெறுவது பற்றி நுகர்வோர் சேவை மையத்தின் மூலம் ஆலோசனை கேட்டு பயன்பெறுமாறு கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

               தமிழ்நாடு அரசு உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையில் செயல்பட்டு வரும் மாநில நுகர்வோர் சேவை மையத்தில் இணைய தளத்தின் சேவை வாயிலாக நுகர்வோருக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு விளக்கங்கள், நுகர்வோர்கள் அளிக்கும் புகார்களுக்கு ஆலோனைகள் வழங்கப்படுகிறது. நுகர்வோர் அமைப்புகளின் கோரிக்கையினை ஏற்று மாநில நுகர்வோர் சேவை மையம் ஒவ்வொரு மாதமும் கடைசி சனிக்கிழமை குறிப்பிட்ட பொருள் அல்லது சேவையைப் பெறும் முன்னர் நுகர்வோர்களுக்கு எழும் பிரச்னைகளுக்கு ஆலோசனை மற்றும் வழிமுறைகளை தொலைபேசி வாயிலாக அளித்து வருகிறது.

                         நேற்று முன்தினம் காலை 10 மணிக்கு நுகர்வோர் கல்விக்காக வங்கியிலிருந்து கடன் பெறும் முறை மற்றும் அதற்காக விண்ணப்பித்தல் தொடர்பான ஆலோசனைகள் கூறப்பட்டது. அப்போது வங்கியில் கல்விக்கடன் பெறும்போது நுகர்வோர்களுக்கு ஏற்படும் பல்வேறு பிரச்னைகளுக்கான உரிய விளக்கங்களை நுகர்வோர்கள், மாநில நுகர்வோர் சேவை மையத்தின் தொலைபேசி எண் 044-28592828 மூலம் தொடர்பு கொள்ளும்போது இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மூத்த அலுவலர்களும், நுகர்வோர் அமைப்புகளின் ஆலோசகர்  விளக்கம் வழங்குவர். நுகர்வோர்கள் இம் மையத்தின் சேவையினை பயன்படுத்தி வங்கிகளில் கல்விக்கடன் பெறுவது பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தி கொள்ளுமாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Read more »

வியாழன், மார்ச் 18, 2010

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில்கடன் வழங்கும் விழா

விருத்தாசலம்: 

           விருத்தாசலம் அடுத்த ஆலடியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சார்பில் மகளிர் சுய உதவி குழு பெண்களுக்கு கடன் வழங்கும் விழா நடந்தது. கிளை மேலாளர் வீரப்பன் தலைமை தாங்கினார். கிளை செயலாளர் முத்துகண்ணன் முன் னிலை வகித்தார். பீர்முகமது வரவேற்றார். முதன்மை மண்டல மேலாளர் பாஸ்கரன் சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்கி பேசினார்.சங்க நிர்வாகிகள் பிரேம்ராஜ், சவுந்தர்ராஜன், மண்டல திட்ட மேலாளர் குப்புசாமி, அமலா அறக்கட்டளை நிறுவனர் ஜேசுதாஸ்ராஜா, ஊராட்சி தலைவர் மணி, ராமசந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Read more »

திங்கள், மார்ச் 08, 2010

வங்கியில் அலாரம் ஒலித்ததால் திடீர் பரபரப்பு

கடலூர்:

                  கடலூர் வங்கியில் அலாரம் ஒலித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர் மஞ்சக்குப்பம் நேத்தாஜி ரோட்டில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உள்ளது. விடுமுறை தினமான நேற்று காலை 9.45 மணியளவில் வங்கியில் எச்சரிக்கை அலாரம் ஓலித்தது. இதனால் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் திரண்டனர்.
 
                 தகவலறிந்த வங்கி மேலாளர் கேசவன், விரைந்து வந்து வங்கியை திறந்து மின் இணைப்பை துண்டித்தார். பின்னர் பாதுகாப்பு பெட்டக அறைகளை சரி பார்த்ததில் எந்த சம்பவமும் நிகழவில்லை என்பதை உறுதி செய்தார்.
                   
              பின்னர் எலக்ட்ரீசியனை வரவழைத்து சரிபார்த்ததில் அலாரத்திற்கு செல்லும் ஒயரை எலி கடித்திருப்பது தெரிய வந்தது. விடுமுறை தினத்தில் வங்கியில் பாதுகாப்பு பெட்டக அலாரம் அடித்ததால் அப்பகுதியில் திடீர் பரபரப்பு நிலவியது.




Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior