உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மார்ச் 08, 2010

வங்கியில் அலாரம் ஒலித்ததால் திடீர் பரபரப்பு

கடலூர்:

                  கடலூர் வங்கியில் அலாரம் ஒலித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர் மஞ்சக்குப்பம் நேத்தாஜி ரோட்டில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உள்ளது. விடுமுறை தினமான நேற்று காலை 9.45 மணியளவில் வங்கியில் எச்சரிக்கை அலாரம் ஓலித்தது. இதனால் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் திரண்டனர்.
 
                 தகவலறிந்த வங்கி மேலாளர் கேசவன், விரைந்து வந்து வங்கியை திறந்து மின் இணைப்பை துண்டித்தார். பின்னர் பாதுகாப்பு பெட்டக அறைகளை சரி பார்த்ததில் எந்த சம்பவமும் நிகழவில்லை என்பதை உறுதி செய்தார்.
                   
              பின்னர் எலக்ட்ரீசியனை வரவழைத்து சரிபார்த்ததில் அலாரத்திற்கு செல்லும் ஒயரை எலி கடித்திருப்பது தெரிய வந்தது. விடுமுறை தினத்தில் வங்கியில் பாதுகாப்பு பெட்டக அலாரம் அடித்ததால் அப்பகுதியில் திடீர் பரபரப்பு நிலவியது.




0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior